பலா பட்டறை: சாலையோரம் - தொடர் இடுகை

சாலையோரம் - தொடர் இடுகை




ஸ்பென்சர் தாண்டி இடதுபுறம் திரும்பி பொறுமையாய் வந்துகொண்டிருந்தபோது எத்திராஜ் கல்லூரிக்கு முன்னால் சிக்னல் சிவப்பிலிருந்து அப்போதுதான் பச்சைக்கு மாறி கூவம் ஆற்றின் பாலத்தினை கடந்து எத்திராஜ் கல்லூரி நெருங்கும்போது, கல்லூரி வாயில் தாண்டி கூட்டமாய் இருந்தது. என்னவென்று நானும் எட்டிப்பார்க்க ஒரு இளம் பெண், மஞ்சள் நிற சுடிதார் போட்டு, மல்லாந்து கிடந்தார் அருகில் ஸ்கூட்டி (இங்கயுமா?!) ”ஆட்டோகாரன் இடுச்சிட்டு போய்ட்டாம்ப்பா, த இப்பதான் சிக்னல் வுட்டு பொறுமையாதான் வந்துனு இரிந்திச்சி இந்தம்மா”, நான் பார்க்கும்போதே சுட சுட ரத்தம் பின் மண்டை வழியே சாலையில் பரவியது, அழகான இளம் பெண், சுற்றிலும் ஆண்கள், தொட்டு தூக்க தயக்கம்.

பார்த்தேன் நீல நிற புடைவயில் கையில் ஃப்ளாஸ்க்குடன் ஒரு அம்மா நின்றிருந்தார், அருகிலிருக்கும் ஐ ஓ பி வங்கியில் கடை நிலை ஊழியர், ”அம்மா நீங்க ஒரு கை பிடிங்க ஆஸ்பிடல் கொண்டு போயிடலாம்”,

ப்போது அந்த பெண்ணிற்கு வலிப்பு ஆரம்பித்து விட்டிருந்தது. கையில் சாவி கொத்து தரவேண்டுமா?, உடைகளை தளர்த்த வேண்டுமா? கைப்பை திறக்கலாமா?, குடிக்க தண்ணீர் தரலாமா? இவர் வண்டி யார் பார்த்துக்கொள்வார்கள்? தாமதிக்க முடியாது, ”அம்மா நீங்கதான் லேடிஸ் கொஞ்சம் ஹெல்ப் பன்ணுங்க, பக்கத்துலதான் அப்பல்லோ, ஃபிட்ஸ் வந்திடிச்சி, மண்டை உடஞ்சி ரத்தம் வருது தாமதிக்கிறது ஆபத்து”, உடனே அந்த அம்மா, அந்த பெண்ணின் தோள் பிடித்து, நாங்களும் ஒரு உதவி செய்ய, ஒரு ஆட்டோவில் ஏற்றி அப்பல்லோ கொண்டு போய், அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தோம், உதவி செய்த அந்த அம்மா தன் புடைவையெல்லாம் ரத்ததுடன், பரவாயில்லைங்க என்றபடி அதே ஆட்டோவில் சென்றுவிட்டார். கைப்பையில் பன்னாட்டு வங்கியின் ஐடி கார்டில் அவரின் பெயர், மற்றும் படம், வங்கி பெயர் மட்டும் இருந்தது, பையில் தேடி அவரின் கணவரை தொடர்பு கொண்டு விவரம் சொல்லி வரச்செய்தோம்.

ருவருக்குமே 23 வயதுக்கு மேல் இல்லை, கணவர் சாஃப்ட்வேர்,மனைவி வங்கி, ஒரு ஹெல்மெட் போட்டிருந்தால் ‘ நாயிண்ட மோனே ’ என்று தாய் மொழியில் திட்டி, தூசி தட்டி வீடு போய் சேர்ந்திருக்க வேண்டிய பெண்,  மண்டை உடைந்ததற்கு, அறுவை சிகிச்சை செய்து அழகான தலை முடி மழித்து, பல மாதங்கள் அவஸ்தை அனுபவித்தார்.

டித்த மிருகம் காணாமல் போய்விட்டது. இந்த பெண் ஒரு தவறும் செய்யவில்லை. ஒரு பாதுகாப்பு தலைகவசம் அணியவில்லை அவ்வளவுதான்.

தே ஒரு இரவு நேரமாகவோ, மழை காலமாகவோ, தனிமையான சாலையாகவோ இருப்பின்...??

----------------------

ப்பிரிக்க ஊடூ வில் வருவதுபோல சாலையில் ஒரு வட்டம் வரைந்து, நடுவில் ஒரு மனித கை கால்கள் வரைந்து வைத்திருப்பதை பார்க்கும்போதெல்லாம், ஏதோ ஒரு குடும்பத்தின் தலைவிரி அழுகை காட்சி நினைவிற்கு வரும்.

“ இன்னிக்கு உனக்கு பிடிச்ச சாப்பாடு சீக்கிரம் வந்துடுப்பா, ”

“ரெடியா இரு சினிமாக்கு போய்ட்டு ஹோட்டலில் சாப்ட்டுட்டு அம்மா வீட்டுக்கு போய்ட்டு வந்திடலாம்,”

“ அப்பா ஒரு வருஷம்தான் காம்பஸ்ல செலக்ட் ஆயிட்டேன், நீ இதுவரை கஷ்ட்டப்பட்டது போதும்,”

“ என்னங்க சொந்த வீடு வாங்கிடலாங்க, லோன் ஓகே ஆயிடும், ஆபீஸ்ல சொல்லிருக்காங்க”

“குட்டி அப்பா சாயந்திரம் கண்டிப்பா ஐஸ் கிரீம் வாங்கிட்டுவரேன்”


த்தனை எத்தனையோ வாக்குறுதிகள் கடைசியாய் போகுமென்று யாருக்கு தெரியும்?, காதல், பாசம், நம்பிக்கைகள் அந்த வட்டத்துக்குள்ளேயே, சூழ்ய சூன்யமாய், அந்த மஞ்சள் வட்டத்தின் மேலே வண்டி ஓட்டுவது கூட எனக்கு பயமாய் இருக்கும். யாருடைய சொந்தமோ, யாருடைய நினைவிடமோ?

......

ஸ்டாலின் என் பள்ளி தோழன், என் உயிர் நண்பன், என் முதல் காதலுக்காய் என்னுடன் நெற்குன்றம் திரைஅரங்கில், அரங்கேற்றம் படம் பார்க்க வந்தவன், பள்ளியில் ஒன்றாய் திருக்குறள் சொல்லி இருக்கிறோம். அவன் அப்பா ஒரு சிறந்த ஓவியர், அண்ணனும், அழகான குடும்பம். பள்ளி முடித்து ஆளுக்கொரு திசையில் பிரிந்தோம்,

ன்றைக்கு தென்னக ரயில்வேயில் வேலை செய்துகொண்டிருக்க வேண்டியவன், கோயம்பேடு ரவுண்டானாவில் லாரியில் அடிபட்டு சொல்லாமல் கொள்ளாமல் காற்றில் கரைந்தான். ஒரு நல்ல நட்பு இழந்தேன், முதல் காதலும், முதல் நட்பும் ஒரு சேர இழந்த என் வாழ்க்கை தராசில் நடு முள் மட்டும் குத்திக்கொண்டே இருக்கிறது. :( அந்த இடங்களை சாதா’ரண’மாக என்னால் ஒருபோதும் கடக்க முடிவதில்லை.

.........

சாலை பயணங்களில் பல விபத்துகளை பார்த்தாயிற்று, வண்டியில் விழுந்த விழுப்புண்கள் அங்க அடையாளத்துக்காய் ஏராளமாக இருக்கிறது. அதில் என் தவறுக்கானவை மிக குறைவு. சொல்லிக்கொண்டே போவதில் மனது வலிக்கும்.

துவும் நிச்சயமில்லை ஓடும் ரயிலில், கழிவரையில் பிரசவித்து அதிலுள்ள ஓட்டை வழியே கீழே விழுந்த குழந்தை சிறு கீறலும் இல்லாமல் சிரித்து பிழைத்திருக்கிறது. மல்லாக்க விழுந்ததில் வெறும் பின் மண்டை திறந்து சிரித்தபடியே இறந்துபோய் ”அய்யோ அவன எழுப்புங்க தூங்கரான் சாவல” என்று மாரில் அடித்த தாயையும் பார்த்தாயிற்று.

விவேகமில்லாத வேகம், ஒரு நொடி தவறு. ஒரே ஒரு நொடி சிந்தித்தால் போதும். தேவை நிதானம் மட்டுமே.

திரே போகும் வண்டி திடீரென நிற்காது என்ற ஒரு நம்பிக்கை மட்டுமே நாம் வண்டி ஓட்டுவதின் சாமர்த்தியம் அன்றி வேறெதுவும் இல்லை. நமக்கு பின்னாடியும் அதே நம்பிக்கையில் பலர் வருகின்றனர். வாழ்க்கை சக்கரமும் அதே நம்பிக்கையில்தான் சுழன்றுகொண்டே இருக்கிறது. நம்பிக்கைதானே வாழ்க்கை. சந்தர்ப்ப சூழ் நிலையால் நிகழ்பவைகளை மட்டுமே விபத்து என்று சொல்லலாம். மற்றவைகள் மிக கடுமையாய் தண்டிக்கப்பட வேண்டியவை.

பகிர அழைத்த சகோதரி வித்யா அவர்களுக்கு நன்றி. நிரம்ப பாரங்களை என் பக்கத்தில் இறக்கி வைத்துள்ளேன். இதுவும் அதில் ஒன்று.


வித்யா அவர்களின் பதிவு::

சாலையோரம் - தொடர் இடுகை

எனக்கும் யாரையாவது அழைக்க விருப்பம்தான்... படித்து பின்னூட்டமிடும் நண்பர்களோ, படித்துவிட்டு மட்டும் போகும் நண்பர்களோ, தயவு செய்து இது பற்றி பதிவிடுங்கள், நாமோ நமை சார்ந்தவர்களோ தினம் தினம் சந்திப்பதுதான் இது, யாருடைய பதிவையாவது படித்து தவறு செய்யும் ஒருவர் திருந்தினாலும் மகிழ்ச்சியே.




.

31 comments:

tsekar said...

Good one.Please keep writing

Vidhoosh said...

செம ஸ்பீடு .... :)
நிறைய பாரம் பதிவுல. பகிர்வதில் சோகம் குறையுமோ என்னவோ, எனக்கும் கொஞ்சம் மனசு கனத்துப் போய் விட்டுதுங்க.

-வித்யா

vasu balaji said...

ம்ம்.

Chitra said...

எதுவும் நிச்சயமில்லை ஓடும் ரயிலில், கழிவரையில் பிரசவித்து அதிலுள்ள ஓட்டை வழியே கீழே விழுந்த குழந்தை சிறு கீறலும் இல்லாமல் சிரித்து பிழைத்திருக்கிறது. மல்லாக்க விழுந்ததில் வெறும் பின் மண்டை திறந்து சிரித்தபடியே இறந்துபோய் ”அய்யோ அவன எழுப்புங்க தூங்கரான் சாவல” என்று மாரில் அடித்த தாயையும் பார்த்தாயிற்று.

விவேகமில்லாத வேகம், ஒரு நொடி தவறு. ஒரே ஒரு நொடி சிந்தித்தால் போதும். தேவை நிதானம் மட்டுமே.......அந்த படமும் உங்கள் இடுகையும், கலங்க வைத்தது. மனதில் ஒரே பாரம்.

நாடோடி said...

"இந்த பெண் ஒரு தவறும் செய்யவில்லை. ஒரு பாதுகாப்பு தலைகவசம் அணியவில்லை அவ்வளவுதான்".....
ஒரு சிறிய கவனக்குறைவு எவ்வளவு பெரிய வேதனையான முடிவை தருகிறது.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

என் கவலையும் அதுதான்.எத்தனையோ பேரின் நம்பிக்கையை ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் குலைத்துப்போடும் விபத்துக்களைக் குறித்த விழிப்புணர்வு பதிவு.மிக அருமை.
அன்புடன்,
க.நா.சாந்தி லெட்சுமணன்

ப்ரியமுடன் வசந்த் said...

good post shankar sir...

நட்புடன் ஜமால் said...

பலே பட்டறை ...

ரோஸ்விக் said...

பல குடும்பங்களின் கனவுகளைக் குலைத்த இந்த விபத்துகளை ஒன்றாகக் குழைத்து "சாலையோரம்" என்ற தலைப்பில் எம் "விழிகளின் ஓரமும் ஈரம்".

வாகன ஓட்டிகள் சிந்திக்க வேண்டும்.

'பரிவை' சே.குமார் said...

//எதிரே போகும் வண்டி திடீரென நிற்காது என்ற ஒரு நம்பிக்கை மட்டுமே நாம் வண்டி ஓட்டுவதின் சாமர்த்தியம் அன்றி வேறெதுவும் இல்லை. நமக்கு பின்னாடியும் அதே நம்பிக்கையில் பலர் வருகின்றனர். வாழ்க்கை சக்கரமும் அதே நம்பிக்கையில்தான் சுழன்றுகொண்டே இருக்கிறது. நம்பிக்கைதானே வாழ்க்கை//

விழிப்புணர்வு பதிவு.மிக அருமை

கண்ணகி said...

மனதைக் கலக்குகிறது. அதுவும் இளையதலைமுறைகள் செல்லும் வேகம்...

சீமான்கனி said...

அவசியமான இடுக்கை .... நமது கவன குறைவும் விதிகளை மதிக்காத சிலரின் அலச்சியமும் எவ்வளவு பெரிய சோகத்தில் தள்ளி விடுகிறது....

Anonymous said...

:(( அவசியமான பதிவு .

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம்..\\ விவேகமில்லாத வேகம், ஒரு நொடி தவறு. ஒரே ஒரு நொடி சிந்தித்தால் போதும். தேவை நிதானம் மட்டுமே// எல்லாரும் வலியுறுத்துகிறோம் இந்த தொடர் இடுகைகளீன் மூலமாக.. பலரது நினைவுகளில் இது எதிரொலிச்சிட்டே இருக்கட்டும்.. பல உறவுகள் நிலைத்த மகிழ்ச்சியோடு வாழட்டும் என வாழ்த்துவோம்.

மரா said...

நல்ல விசயம். நாம் செய்யும் சிறு தவறுகள்கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை புரிய வைத்துவிட்டீர் நண்பரே. தொடர்க நிம் பணி.

Romeoboy said...

நல்ல இருக்கு தலைவரே ..

ஆதி மனிதன் said...

நல்ல பதிவு மட்டுமில்லாமல் என்னையும் பதிவிட http://aathimanithan.blogspot.com/2010/01/blog-post_22.html தூண்டியதற்கு நன்றி.

"சாலையோரம் - தொடர்" இடுகையை நானும் தொடர்ந்து விட்டேன் - விபத்தில்லாமல்.

ஆதி மனிதன் said...

நல்ல பதிவு மட்டுமில்லாமல் என்னையும் பதிவிட http://aathimanithan.blogspot.com/2010/01/blog-post_22.html தூண்டியதற்கு நன்றி.

"சாலையோரம் - தொடர்" இடுகையை நானும் தொடர்ந்து விட்டேன் - விபத்தில்லாமல்.

Kumky said...

பட்டறை....

இதற்கான முழு தகுதியும் எனக்குத்தான்...

அய்யய்யோ இந்த பதிவே எனக்குத்தான்....

பைக் குறைந்தபட்ச வேகம் 80-100+

கார் குறைந்த பட்ச வேகம் 100-140+

ஏதோ பொழப்பு ஒடீட்டிருக்கு....

ஒரு இறங்கற்பா எதுக்கும் தயார் செய்து வைச்சுடுங்களேன்.....

நிலாமதி said...

தங்கள் விழிப்புணர்வுப் பதிவுக்கு நன்றி..........

சந்தனமுல்லை said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க...சொன்ன விதத்தில் நீங்கள் இறக்கி வைத்த பாரம் இப்போது எங்கள் மேல்! :-(((

Radhakrishnan said...

//விவேகமில்லாத வேகம், ஒரு நொடி தவறு. ஒரே ஒரு நொடி சிந்தித்தால் போதும். தேவை நிதானம் மட்டுமே.//

ஒவ்வொருவரும் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டியது.

பல சம்பவங்கள் எத்தனை சங்கடங்கள் உருவாக்குகின்றன.

cheena (சீனா) said...

அன்பின் சங்கர்

விபத்தில் பாதிக்கபடுபவர்களில் பலர் அடுத்தவர் செய்யும் தவறினாலேயே பாதிக்கப்படுகிறார்கள் -சாலை விதிகளை ம்திக்க வேண்டும் - கவனமாக இருக்க வேண்டும்

இடுகை நன்று

நல்வாழ்த்துகள்

S.A. நவாஸுதீன் said...

அடர்த்தியான, அழுத்தமான எழுத்து சங்கர். சாலை விதிகளை மதித்து நடப்போம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல பதிவு

கோமதி அரசு said...

நல்ல பதிவு.

விழிப்புணர்வுடன் எல்லோரும் நடத்து கொண்டால் இழப்புகளை தவிர்க்கலாம்.

வாழக வளமுடன்.

பனித்துளி சங்கர் said...

அற்புதமான பதிவு நண்பரே .உங்களின் இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் .
பகிர்வுக்கு வாழ்த்துக்கள் !

ஹேமா said...

சமுகச் சிந்தனையோடு நல்லதொரு பதிவு.தொடர்பதிவா ?நல்லதுதான்.

பின்னோக்கி said...

பதற வைக்கும் பதிவு பலா.
உலுக்கிவிட்டது மனதை.
இதைப் படித்த உடன் வேகத்தை இன்னமும் குறைக்க வேண்டும். அதிர்ஷ்டம் வேண்டும்.
அதுவும் அந்த ஊடுக்கு அடுத்த 5 பாயிண்டுகள் மனதை என்னவோ செய்தது. நண்பனை இழப்பது, அகால மரணங்கள் வடுக்கள்.

shortfilmindia.com said...

ஷங்கர்.. அருமையான கட்டுரை. இதை அழுத்தினால் பிரேக் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் தான் எல்லோருமே ஓடிக் (அ) ஓட்டிக் கொண்டிருக்கிறோம். என்பதை எல்லோரும் புரிந்தால் நிதானமாய்தான் செல்வோம்
கேபிள் சங்கர்

சாந்தி மாரியப்பன் said...

//விவேகமில்லாத வேகம், ஒரு நொடி தவறு. ஒரே ஒரு நொடி சிந்தித்தால் போதும். தேவை நிதானம் மட்டுமே//

சிந்திப்பார்களா??? நிதானம் தவறுபவர்கள். :-((