பலா பட்டறை: சின்ன சின்ன கவிதைகள் ..

சின்ன சின்ன கவிதைகள் ..



னக்கான
காதலின்
வரங்களும்
சாபங்களும்
உன் விழி ஓரத்தில்
உன் உதடோரத்தில்

அடியே கூறாமல் சன்யாசம்
கொல்கிறது...

-----------------

வாசமும், சுவையும்
சாப்பிட்ட பின்
எங்கு சென்றதென
காலைக்கடன்களில்
தலைகீழ் கேள்விக்குறியாக
நாசியின் யோசனை..

------------------

நிரம்பிவிடு.
தளும்புகிறது
மனக்குடுவை

----------------


நீ கிழிந்து தொங்கும்போதும்
என் கேள்வி எப்போதும்
உன் முகம் பற்றியதாகவே
இருக்கும்..

எனக்கேது சுருக்கங்கள்
நரைமுடி, கை நடுக்கம்
இடமதை வலமாய் காட்டும்
நிலைக்கண்ணாடி நானுடைத்து
நெடுநாட்கள் ஆகிறது..

---------------------------------

போய் சேர்ந்துவிடு கிழவி
ஒத்திகை பார்த்துப் பார்த்து
கண்ணெல்லாம் வலிக்கிறது,,

----------------------------------


நிர்வாணமாய் நீ என் அறையில்
ஓடியதை ரசிக்க நானென்ன
ஆண் எலியா..?
ஒரே அடி....
விடிந்தபின் குஞ்சுள்ள காக்கைக்கு
கடவுளின் பரிசு..
செத்த எலியின் குட்டிகளா?
அது கடவுள் பாடு...

இரவின் தியானத்தில்
கடவுளை தேடுகையில் 
இதென்ன அபத்தக் கேள்வி?? 




.

35 comments:

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

கவிதைகள் அருமை.ஒரு புத்தகத்தில் பலா பட்டறைக்கு அர்த்தம்,”பலரும் சுதந்திரமாய் உலவும் ஒரு இடம்” போட்டிருந்தது.அட! இது தான் உங்க வலைக்கும் அர்த்தமா? சூப்பர்.அப்புறம் சாப்பிட்டுக்கிட்டு உங்க பக்கத்த பாத்துக்கிட்டிருந்தா உங்க 2 வது கவித.தட்ட தள்ளிவச்சிட்டு படிச்சிட்டு தட்டத் தொட்டாலும் வாசம் போகல.

ராமலக்ஷ்மி said...

//நிரம்பிவிடு.
தளும்புகிறது
மனக்குடுவை//

அழகு.

//போய் சேர்ந்துவிடு கிழவி
ஒத்திகை பார்த்துப் பார்த்து
கண்ணெல்லாம் வலிக்கிறது,,//

வலிக்கிறது மனம்.

நாடோடி said...

கவிதைத் தொகுப்பு அனைத்தும் அருமை.......

Unknown said...

எங்க ஏரியா உள்ள வராதே.. :))

எறும்பு said...

Present sir..

எறும்பு said...

ஆல் திஸ் கவிதைஸ், அய் புரிஞ்சுபை.. கிரேட்... இப்படி புரியற மாதிரி எழுதுறத விட்டுட்டு...
:)

Chitra said...

இரவின் தியானத்தில்
கடவுளை தேடுகையில்
இதென்ன அபத்தக் கேள்வி??

....... :-)

சங்கர் said...

//நிரம்பிவிடு.
தளும்புகிறது
மனக்குடுவை//

ஏற்கனவே தளும்பும்போது எப்படி நிரம்புவது :)

தமிழ் உதயம் said...

சின்ன சின்ன கவிதைகள், அரிதாரப்பூச்சு இல்லாமல் அழகாய்.

Ashok D said...

2 & கடைசி :)

S.A. நவாஸுதீன் said...

எல்லாமே நல்லா இருக்கு.

3, 5 - டாப்பு

vasu balaji said...

ம்ம்.அப்புறம்:)

செந்தில் நாதன் Senthil Nathan said...

ரெண்டும் கடைசியும் ரெம்ப புடிச்சுது....

சீமான்கனி said...

//நிர்வாணமாய் நீ என் அறையில்
ஓடியதை ரசிக்க நானென்ன
ஆண் எலியா..?
ஒரே அடி....
விடிந்தபின் குஞ்சுள்ள காக்கைக்கு
கடவுளின் பரிசு..
செத்த எலியின் குட்டிகளா?
அது கடவுள் பாடு...

இரவின் தியானத்தில்
கடவுளை தேடுகையில்
இதென்ன அபத்தக் கேள்வி?? //

சுப்பெர்....வாழ்த்துகள்...

sathishsangkavi.blogspot.com said...

கவிதை வழக்கம் போல் கலக்கல்....

Romeoboy said...

\\போய் சேர்ந்துவிடு கிழவி
ஒத்திகை பார்த்துப் பார்த்து
கண்ணெல்லாம் வலிக்கிறது,,//

ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டியத இப்படியா முணு லைன்க்கு அடிப்பிங்க.

திவ்யாஹரி said...

அனைத்தும் அருமை அண்ணா..
புரியும்படி இருப்பதால் இன்னும் அருமை..
//நிரம்பிவிடு.
தளும்புகிறது
மனக்குடுவை//
நிரம்பி விட்டது கவிதையில் தெரிகிறது..

சைவகொத்துப்பரோட்டா said...

மனக்குடுவை நல்லா இருக்கு.

அண்ணாமலையான் said...

வழக்கம் போல கலக்கல்.....

மணிஜி said...

அகநாழிகைக்கு அடுத்த கவிதை தொகுப்பு தயார்!!

ஸ்ரீராம். said...

//போய் சேர்ந்துவிடு கிழவி
ஒத்திகை பார்த்துப் பார்த்து
கண்ணெல்லாம் வலிக்கிறது,,/

சுடும் உண்மை.
"நிரம்பிவிடு...
சூப்பர்

Priya said...

சின்ன சின்ன கவிதைகள்...... அற்புதம்!!!

ரிஷபன் said...

ரசிக்க வைத்தன..எல்லாமே..

மதுரை சரவணன் said...

sinna kavithai aanaal periya visayam. partykku paati meethu enna ivaluvu kobam , saari anuthaabam.

துபாய் ராஜா said...

சின்ன சின்ன கவிதைகள் - சிறப்பான கவிதைகள்.

மீன்துள்ளியான் said...

அருமையான குட்டி கவிதைகள் அதிலும் கிழவி கண்ணாடி ரெம்ப அருமை

அன்புடன் மலிக்கா said...

நிரம்பிவழிகிறது நிஜங்களில் பிம்பங்கள் அருமை..

CS. Mohan Kumar said...

//அகநாழிகைக்கு அடுத்த கவிதை தொகுப்பு தயார்!!//

Yes sir!! 100% true!!

Thenammai Lakshmanan said...

//நீ கிழிந்து தொங்கும்போதும்
என் கேள்வி எப்போதும்
உன் முகம் பற்றியதாகவே
இருக்கும்..//

உண்மை மற்றும் அருமை
வித்யாசம்..இதுதான் பலா...

ப்ரியமுடன் வசந்த் said...

அஞ்சாவது கவித நெம்ப யோசிக்க வச்சுடுச்சு..

:)

'பரிவை' சே.குமார் said...

//வாசமும், சுவையும்
சாப்பிட்ட பின்
எங்கு சென்றதென
காலைக்கடன்களில்
தலைகீழ் கேள்விக்குறியாக
நாசியின் யோசனை...//

கலக்கல்.

TKB காந்தி said...

”வாசமும், சுவையும்
சாப்பிட்ட பின்
எங்கு சென்றதென” :) நல்லாயிருக்கு

Paleo God said...

@க.நா.சாந்தி லெட்சுமணன்
அப்படியா..?? ஆனா இத கொஞ்ச நாள் முன்னாடி சொல்லிருந்தீங்கன்னா பேர மாத்திருக்க மாட்டேன்..:)) சாரிங்க இனிமே சாப்பிடும்போது இத படிக்கவேண்டாம்னு போட்டுடறேன்..:))

@ராமலக்ஷ்மி..
மிக்க நன்றி மேடம்..:))

@நாடோடி..
மிக்க நன்றி..:))

@முகிலன்..
ரைட்டு..:))

@எறும்பு..
இப்ப நீங்களே கவிஞர் ஆயாச்சு ..:))

@சித்ரா..
நன்றிங்க..:))

@சங்கர்
குடத்த கமுத்தி வெச்சி ட்ரை பண்ணுங்க..:))

@தமிழ் உதயம்
மிக்க நன்றிங்க..:))

@ டி.ஆர்.அசோக்..
மிக்க நன்றி தல..:))

@நவாஸ்..
நன்றி நண்பரே..:))

@வானம்பாடிகள்..
ஹி ஹி வேற ஒன்னுமில்லீங்க சார்..:))

@செந்தில் நாதன்..
மிக்க நன்றிங்க..:))

@சீமான்கனி..
மிக்க நன்றி கனி..:))

@சங்கவி..
நன்றி சங்கவி..:))

@ரோமியோ
ரைட்டு..:))

@திவ்யாஹாரி..
நன்றிம்மா ..:))

@சைவகொத்துப்பரோட்டா..
நன்றிங்க..:))

@அண்ணாமலையான்..
நன்றிங்க மலை..:))

@தண்டோரா..
அநியாயத்துக்கு நல்லவர் சார் நீங்க..:))

Paleo God said...

@ஸ்ரீராம்..
மிக்க நன்றிங்க..:))

@ப்ரியா..
மெர்சி..:))

@ரிஷபன்..:
மிக்க நன்றி ரிஷபன்..:))

@மதுரை சரவணன்..
வாங்க சரவணன் கோவம்லாம் இல்லீங்கோ ..:) டாங்க்ஸ்ஸு..:))

@துபாய் ராஜா..
மிக்க நன்றி நண்பரே ..:))

@மீன்துள்ளியான்..
நன்றி மீன்ஸ்..:)

@புலவன் புலிகேசி..
நன்றி புலவரே..:))

@அன்புடன் மலிக்கா..
மிக்க நன்றி சகோதரி..:))

@மோகன் குமார்..
நீங்களுமா..:))

@தேனம்மைலக்ஷ்மணன்..
மிக மிக நன்றி (என்னோட பழைய பேர் மறக்கலீங்க பாருங்க உங்க நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு:)) )

@வசந்த்..
நெம்ப ரோசனை உடம்புக்கு ஆகாது பாத்து கண்ணு சொல்லிப்புட்டேன்.. :) நன்றி வசந்த்.:))

@சே.குமார்..
நன்றி குமார்..:))

Paleo God said...

@TKB காந்தி..

மிக்க நன்றி நண்பரே வருகைக்கும் வாழ்த்துக்கும். உங்கள் கவிதையை எனது நூறாவது பதிவில் நான் இட்டது எனக்குத்தான் மகிழ்ச்சி..:))