பலா பட்டறை: வயா நடுக்கம் ..

வயா நடுக்கம் ..



மிக்க நன்றி நண்பர்களே, :))

போன பதிவின் கவிதைகள் காரணம் திரு.D.R.அஷோக்கின் கவிதை தான் :) அதை படித்ததும் தோன்றியதை எழுதினேன்.  ஆனால் நான் எழுதிவிட்டு பார்த்தால் திருவாளர்கள். நர்சிம், பாரா, தண்டோரா, வானம்பாடிகள் எல்லோருமே கிட்டத்தட்ட ஒரே அலைவரிசையில் எழுதி இருப்பதாகப்பட்டது, பாரா, வானம்பாடிகள் அவர்களின் பின்னூட்டம் அதை உறுதி செய்தது.

முதல் கவிதையில் பெட்ரோல் போட்டு இருசக்கர வாகனம் ஓட்டி, உணவென்று நம்பி நஞ்சை தின்று, புகையால் நானும் வானும் மாசு சூழ, இறப்பின் பின் வரும் புகையை என் வண்டியும், முன் வண்டியும் எனக்குச்சொல்வதாய் எழுதி இருந்தேன் (அப்படியா?)

இரண்டாவது ஒரு அழகான வண்ணத்துப்பூச்சியை பல்லி தின்ன பார்க்கிறது எனக்கு அழகாய் இருப்பது பல்லிக்கு உணவு, அதை தின்ற பல்லி, என் உணவில் விழுந்து நான் அதை வெளியில் கொட்ட தனது குஞ்சுக்காய் உணவு தேடிய காகம் சோறா, பல்லியா என்ற குழப்பத்தில், அதே உணவுக்காய் ஒரு நாயும், பூனையும் சண்டை இடுவது போல எழுதி இருந்தேன். (சத்தியமா நம்புங்க ! )

நீங்க வேற விதமாயும் கற்பனை செய்து கொள்ளலாம் ::)) FULL RIGHTS TO YOU ALL.:)

ஹும்ம் இதெல்லாம் யாராவது பிஹெச் டி பண்ணி சிலாகிக்க வேண்டியது. நானே உரை எழுதா வேண்டியதா போச்சு.. :)) தமிழ் தொண்டில் இதெல்ல்ல்லாம் சாதா'ரணமப்பா'.

சரி :: உச்சீவி என்றால் =  return to life, get a new lease of life, மரணத்தினின்று தப்பிப் பிழை; என்பதுதான்.

கீழ் வரும் தலைப்புகளில் ஒன்றில் ஒரு பதிவு வரும் எது உங்களுக்கு பிடித்த தலைப்பு - சொல்லுங்கள்:))

உதபானம்

உதப்பி

வயா நடுக்கம்

----------------

24.02.2010 திரிஷா கையில் பூவைத்திருக்கும் படம் போட்ட ஆனந்த விகடனில் 34  ம் பக்கத்தில் 'சுஜாதாவை பற்றி ரங்கராஜனும் ரங்கநாதனும்' மற்றும் 48-ம் பக்கத்தில் செய்..செய்யாதே என்ற சத்குரு ஜக்கி வாசுதேவ் பக்கமும் எனக்கு மிகவும் பிடித்தது. படித்தீர்களா? அப்படியே பக்கம் 62-ம்..:))    


Take Care..:))

22 comments:

பிரபாகர் said...

நண்பா!

கவிதையை படித்தேன்... பாதி புரிஞ்சது. சொல்ல வரது முழுசா புரியாததால பின்னூட்டம் போடல. இப்போ பொலிப்புரைய பாத்தாத்தான் முழுசா புரியுது. அசத்துங்க சாமி!

பிரபாகர்.

vasu balaji said...

ஆ.ஒ. இந்த அளவு பாதிக்கும்னு நினைக்கல ஷங்கர். வயா நடுக்கம்னு லிஸ்ட்ல குடுத்துட்டு அதே தலைப்புல இடுகையும் போடுற அளவுக்கா:))

Unknown said...

உதப்புக்கு என் ஓட்டு..

அப்புறம் உங்க விளக்கத்துக்கு என் கண்டனம். வலை உலகத்துல கவிதைக்கு விளக்கம் எழுதுற உரிமை தி.கு.ஜ.மு.க இளக்கிய அணித் தலைவருக்கே உள்ளது.. மீறி - தன் கவிதைக்கே எழுதினாலும் - ஒரு லட்சம் ரூபாயை கட்சியின் இலக்கிய அணிக்கு நஷ்ட ஈடாகக் கொடுக்க வேண்டும்.

vasu balaji said...

அல்லோ! நோட்ஸ் போட்டா வாங்கறது மாணவருங்க. மாணவரணித் தலைவருக்கு கட்டிங் எவ்வளவு:))

மீன்துள்ளியான் said...

சரி சரி இப்போ புரியுது எல்லாம் ..

சீமான்கனி said...

//ஹும்ம் இதெல்லாம் யாராவது பிஹெச் டி பண்ணி சிலாகிக்க வேண்டியது. நானே உரை எழுதா வேண்டியதா போச்சு.. :)) தமிழ் தொண்டில் இதெல்ல்ல்லாம் சாதா'ரணமப்பா'. //
புரியுது.... புரியுது...புரியுது.. எல்லாம் புரியுது...

Chitra said...

கோனார் தமிழ் உரைக்கு நன்றி. இப்போ, உச்சீவி.

Romeoboy said...

ஹி ஹி ஹி .. வேற ஒன்னும் சொல்ல தெரியாது பாஸ் எனக்கு

புலவன் புலிகேசி said...

புத்தகம் வாங்கி கிடக்கு..இன்னும் படிக்கல...

Jerry Eshananda said...

அந்த "வயாகராவை பத்தி கொஞ்சம் சொல்லுங்கப்பு"

அகநாழிகை said...

ஷங்கர் நல்லா எழுதியிருக்கீங்க.

உதபானம் = ‘கிணறு‘

உதப்பி = ‘தெறிக்கும் எச்சில்‘

வயா நடுக்கம் = ‘வேட்கையின் போது எழும் நடுக்கம்‘

இதுல கடைசியா இருக்கற ‘வயா நடுக்கம்‘ பற்றி எழுதுங்க ஷங்கர்.

vasu balaji said...

அப்புறம் இந்த இடுகை காப்பிரைட்ஸ் கேக்காதா?

சங்கர் said...

அய்யய்யோ எனக்கு கவித புரிஞ்சிடுச்சே :)))

சங்கர் said...

தண்டோராவை கேட்டால் இன்னும் ரெண்டு தலைப்பு கொடுப்பாரு :))

Cable சங்கர் said...

ரைட்டு..

வெள்ளிநிலா said...

நண்பா! பதிவர்களின் உலகில் ஒரு அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்து கொண்டிருக்கிறீர்கள், என்னுடைய இனிய எதிரி இனி நீங்கள்தான். ஆங்கங்கள் மூலம் உங்களோடு போட்டி போட வருகிறேன் ஷங்கர். ! சில நாட்கள் பொறுங்கள்.... போட்டியை ஆரம்பிப்போம்! மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

Vidhoosh said...

:)) inthath thalaippukalukkul enna matter irukku enkirathai poruththu?

naalaiya padhivil padichchu therinjukkaren. aamaa "akandaakaaram" patriyum eluthungalen. :))

ஜெட்லி... said...

//(சத்தியமா நம்புங்க ! )

//

நம்புறேன்....

Ashok D said...

ஹிஹி இப்போதான் புரியுது... :) நடத்துங்க...

ரவி said...

அப்படியே 27 ஆம் பக்கமும் பார்த்துவிடவும்..

ஹேமா said...

உச்சீவின்னா என்னன்னு சொன்னதுக்கு நன்றி.அதுபோலவே இப்ப கேட்டிருக்கிற மூணுமே என்னான்னு தெரில.அதனால உங்க விருப்பத்துக்கு எழுதுங்க.

Thenammai Lakshmanan said...

நன்றி நோட்ஸ் போட்டதுக்கு ஷங்கர்