பலா பட்டறை: யார் ஞானி? தொடர் பதிவு..:)

யார் ஞானி? தொடர் பதிவு..:)





தொடர் பதிவா? கூப்பிடுங்கையா பலா பட்டறைய அப்படின்னு ஆகிப்போச்சு :-) யார் ஞானி அப்படின்னு ஒரு (சீஸனுக்கேற்ற) தொடர் பதிவு. கூப்பிட்டவர் நம்ம நண்பர் அன்பு செய்வோம் ஜீவன் சிவம். நீங்களும் தொடரலாம்..:)) நண்பரின் பதிவில் உள்ள பத்தாவது பாயிண்டுக்கும் மேலே உள்ள படத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை..:))





------------




யார் ஞானி..?

முதலில் யாரையாவது ஞானி ஆக்குவது தேவையா? தேவையெனில் எதற்கு? மனிதரை தவிர்த்து மற்றெதுவுக்கும் கடவுளோ, மொழியோ, கோட்பாடுகளோ தேவையில்லாதபோது, ஆறறிவு கிடைத்த நமக்கு சொறிந்து கொள்ள உதவும் சித்தாந்தங்களும், வேதாந்தங்களும் முழுமையான ஒன்றை போதித்து இருக்கிறதா?

புத்தி தெரிந்து இறப்பது வரை ஒரு கோனார் நோட்ஸ் போல உபயோகிக்க அன்றி அதனை கட்டிக்கொண்டு அழுவதும், கிழித்தெறிந்து காறித்துப்புவதும் தேவையா? கூடலின்பார்பட்டே, அதனையே தனது சுழற்ச்சியாய் கொண்டு இயங்கும் இவ்வுலகில் ஆடை அணிந்து, அகந்தை வளர்த்து, கூடலையே தவறென்று கூடலின் வழியே வந்து, கூடலுக்காய் நேரமும், காரணங்களும், இடம், பொருள், ஏவலும் குறிக்கும் யாரின் வாழ்வும், அதனை கேட்போறும் திறந்த புத்தகமாய் இல்லாது மூடிக்கிடக்க, இங்கே யாரை ஞானியாக்க முடியும்? அப்படியே கண்டுபிடித்தாலும் அவர் சாகும் வரையில் கூடினாரா இல்லையா என படம் பிடிக்க யார் செலவு செய்வது? அப்படியே படம் பிடித்தாலும் அவன் குறியை கேள்விக்குறியாக்க நாம் கற்ற தர்க்கங்கள் வாளாயிருக்குமா?

கூச்சல்களுக்கிடையே கற்றுக்கொடுக்கப்பட்ட அறிவினை நீட்டி, முழக்கி பார்த்ததையெல்லாம் பெயர் வைத்து மாய்ந்து அதுவே வேதமென்று, புகழ்ந்தும், இகழ்ந்தும் புதிய அர்த்தங்கள் கண்டுபிடித்தும் மாட்டினால், தர்க்கம் செய்து தப்பித்தும் வரும் கூட்டத்தில் ஞானியை எங்கு தேட?? ஏன் தேடவேண்டும்?

ப்படியே உங்களின் கருத்துக்களுக்கு ஒத்துப்போகக்கூடிய ஞானிகளை நீங்கள் காண வேண்டுமென்றால், மனிதர் தவிர்த்து மற்றெல்லாவற்றையும் பாருங்கள், எந்த குருவுமின்றி, வேதங்களின்றி, தர்கங்களின்றி, தலைவனின்றி அவை தம் வேலையை செவ்வனே செய்துகொண்டிருக்கின்றன. கூடிக் கூடி பல்கி பெருகி இவ்வுலகையே நாசம் செய்துவரும் நமக்கும் உணவு அளித்து வாழ்வு கொடுக்கும் அவைகளே ஞானிகள், கடவுள், வேதம் இன்ன பிற.

வையும் எந்த பிரக்ஞையுமன்றி கூடுகின்றன தினமும். அவற்றிற்கு தெரியும் கூடுதல்களும் இருப்பின் புரிதல்களும் நம்மை விட அதிகமாய், ஏனெனில் அவை எதற்கும் பெயர் வைப்பதில்லை.

மரங்களே.... வீட்டிற்கொரு ஞானி வளருங்கள். !

42 comments:

நட்புடன் ஜமால் said...

ஓ மரங்களே.... வீட்டிற்கொரு ஞானி வளருங்கள். !]]


சாட்டை ...

ப்ரியமுடன் வசந்த் said...

//மனிதர் தவிர்த்து மற்றெல்லாவற்றையும் பாருங்கள், எந்த குருவுமின்றி, வேதங்களின்றி, தர்கங்களின்றி, தலைவனின்றி அவை தம் வேலையை செவ்வனே செய்துகொண்டிருக்கின்றன.//

well said...

பொதுவா அடுத்தவன் எழுதிவச்ச கோட்பாடுகளின் படி வாழ்ந்தா நாம அவனோட வாழ்க்கை வாழ்றோம்ன்னுதானே அர்த்தம்...

அப்போ நம்ம வாழ்க்கை யார் வாழ்வா?

vasu balaji said...

//ஓ மரங்களே.... வீட்டிற்கொரு ஞானி வளருங்கள். !//

எனி உள்குத்து?:))

என் நடை பாதையில்(ராம்) said...

யார் ஞானி? அடிக்கடி உண்மைகளை பத்திரிகைகளில் வெளியிட்டு வாங்கிக் கட்டிக் கொள்வாரே... அவரைப் பற்றியா எழுதியிருக்கிறீர்கள்?

CS. Mohan Kumar said...

சுவாமி ஷங்கரானந்தாவின் போட்டோ அருமை

சைவகொத்துப்பரோட்டா said...

படத்தில் இருப்பவரே ஞானி :))

T.V.ராதாகிருஷ்ணன் said...

Present pOttudunga

ஜீவன்சிவம் said...

அற்புதம் தோழரே...
வேறொரு கோணத்தில் அசத்திட்டீங்க

Ashok D said...

ஓ கடவுளே ... மரம் நட ஒரு இடம் கொடு..

VISA said...

adade...intha nearathula ipadi oru pathivaa?

பிரபாகர் said...

ஷங்கர்,

பக்திப்பழமா போட்டோவப்போட்டு உங்க அழும்பு தாங்கல!

ஞானியா மெயின்டைன் பண்றது எப்படிங்கறதுதான் இப்போ நிறைய பேருக்கு தேவை...

பிரபாகர்.

Jerry Eshananda said...

சாமி சரணம்

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

போட்டோல்லாம் பொருத்தமா இருக்கு!

தேவன் மாயம் said...

அவையும் எந்த பிரக்ஞையுமன்றி கூடுகின்றன தினமும். அவற்றிற்கு தெரியும் கூடுதல்களும் இருப்பின் புரிதல்களும் நம்மை விட அதிகமாய், ஏனெனில் அவை எதற்கும் பெயர் வைப்பதில்லை.
///

மரத்துக்கு புதிய விளக்கம்!!

அண்ணாமலையான் said...

காஸ்ட்யூம் கரெக்டா இருக்கு... மடமும் காலியா இருக்கு.. என்ன ரீ ஸ்டார்ட் பண்னிடுவோமா? ஆனா என்ன அசிஸ்டெண்ட்டா சேத்துக்கனும் சரியா?

ஸ்வாமி ஓம்கார் said...

இவரு பதிவின் நடையை விளக்கும் ஞானிகள் யாராவது பார்த்தால் என்னக்கு சொல்லி அனுப்புங்க :)

கார்க்கிபவா said...

உங்காளு யாருங்க? S நடிகையா p நடிகையா?

Raghu said...

ப‌லா ஆசிர‌ம‌ம்னு ஒண்ணு ஆர‌ம்பிச்சிடலாம்ங்க‌, ம‌ற‌ந்துகூட‌ 'ன‌'வை சேத்துடாதிங்க‌:)

சீமான்கனி said...

நடத்துங்கயா...
இப்டி வேற கேளம்பிடீங்களா???

ஜெட்லி... said...

ஸ்டில் பயங்கரமா இருக்கு....
அடுத்த சாமி ரெடி...
முதல்ல கேமரா ரெடி பண்ணனும்.....

நாடோடி said...

கெட்ட‌ப்பு சூப்ப‌ரா இருக்கு.......

பனித்துளி சங்கர் said...

ஏவளவோ பண்ணிட்டோம் . இதையும் ஒரு கை பார்க்க வேண்டியதுதான் .

Unknown said...

/கார்க்கி said...
உங்காளு யாருங்க? S நடிகையா p நடிகையா?//

N நடிகை.. :))

Unknown said...

மரம் வளத்தாலாவது ஆணி அடிக்கலாம், ஞானி வளத்து மரமா அடிக்கிறது??

Chitra said...

நண்பரின் பதிவில் உள்ள பத்தாவது பாயிண்டுக்கும் மேலே உள்ள படத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை..:))


..........பதிவில் உள்ள ஞானபூர்வமான விஷயங்களும் உங்கள் படமும் உங்களை பட்டறை ஆனந்தா ஆக்கும் அறிகுறி காட்டுது. ha,ha,ha....

பா.ராஜாராம் said...

//அப்படியே உங்களின் கருத்துக்களுக்கு ஒத்துப்போகக்கூடிய ஞானிகளை நீங்கள் காண வேண்டுமென்றால், மனிதர் தவிர்த்து மற்றெல்லாவற்றையும் பாருங்கள், எந்த குருவுமின்றி, வேதங்களின்றி, தர்கங்களின்றி, தலைவனின்றி அவை தம் வேலையை செவ்வனே செய்துகொண்டிருக்கின்றன.//

அருமை ஷங்கர்!

ஸ்ரீராம். said...

எல்லாம் பிரமை.

Vidhoosh said...

என்னவோ போடா மாதவா... :))

//ஸ்டில் பயங்கரமா இருக்கு....///
:)) சிரிப்பு தாங்கலை... சாமி சரணம்.

Thenammai Lakshmanan said...

நல்லா வெளங்கிப்போச்சு உங்க வீட்டுல இருக்கும் மரம் என்ன மரம் சாமி

Matangi Mawley said...

liked it.. good thought!

சாந்தி மாரியப்பன் said...

ஷங்கரானந்த சுவாமிகளின் காஸ்ட்யூம் பொருத்தமாத்தான் இருக்கு. நீளமான தலைமுடியும் தாடியும் இருந்தா இன்னும் பொருத்தமா இருக்கும் :-)))

விக்கா இருந்தா இன்னும் விசேஷம்.. மாட்டிக்கிட்டா,நான் அவனில்லைன்னு சமாளிக்க வசதியா இருக்கும் :D

சாமக்கோடங்கி said...

இப்பதான் காவி உடைகளுக்கு ஆபத்துக் காலமாச்சே.. இப்படியெல்லாம் போடோ எடுக்கலாமா..? அந்த சாமிய உதைக்க காண்டுல போறவன், வழியில உங்களப்பாத்து அப்படியே ஒரு காட்டு காட்டிட்டு போய்ட்டான்னா என்ன பண்றது......?

கடைசி வரி... நச்....

நன்றி..

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

Nandraga irunthathu shankar...

Photo super.... ;)

வினோத் கெளதம் said...

தல உடனடியா Profile pic மாத்திட்டு இந்த பதிவுல இருக்கிற படத்தை போடவும்..Seasonal 'டச்'சா இருக்கும்..:)

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

Nandraga irunthathu shankar...

Photo super.... ;)

ரோஸ்விக் said...

ஓ... பக்கங்கள் எழுதுவாரே... அவரையா அண்ணே தேடுறீங்க?? சா.நி -ஐ கேளுங்க சரியா சொல்லுவாரு...

ரோஸ்விக் said...

ஸ்ரீநயனஸ்ரீ தாராசங்கரானந்தா சுவாமிஜி! உங்கள் புகைப்படத்தை பார்த்தவுடன் எனக்கு இருந்த நெஞ்சுவலி இன்னும் சற்று கீழிறங்கி...... காணாமல் போய்விட்டது...(வலி மட்டும் தான்).

உங்க மடத்துக்கு லொகேசன் பாத்தாச்சு போல... உங்க புகைப்படத்துக்கு பின்னாடி என்னா ரம்யமா இருக்குது... வளைக்கும்போது 110 ஏக்கரா வளைச்சுருங்க...

உங்களுக்கு 100... எனக்கு 10 போதும்.... (need to fix the camera in high angle)

'பரிவை' சே.குமார் said...

சாமி சரணம்

போட்டோல்லாம் பொருத்தமா இருக்கு!

அன்புடன் அருணா said...

/ஓ மரங்களே.... வீட்டிற்கொரு ஞானி வளருங்கள். !/
ரைட்டு!

R.Gopi said...

ஸ்வாமிஜி ஷங்கரானந்தா அவர்களே .....

வீட்டிற்கொரு ஞானி வளர்ப்போம் என்பதில் “உன் வாழ்க்கை உன் கையில்” என்ற தத்துவம் உட்புகுந்து நீங்கள் ஞானியை வளர்க்க வேண்டாம்... ஞானியாக முயற்சியுங்கள் எனலாமோ??

மரா said...

அடடா சூப்பரா எழுதியிருக்கிறீங்க. இப்பதான் பாக்குறேன். அஹம் ப்ரம்மாஸ்மி...

இரசிகை said...

nice....!