பலா பட்டறை: வெண்ணை (0.08) (கொடூர கவிதைகள்)

வெண்ணை (0.08) (கொடூர கவிதைகள்)




ஞானம்!

ஒன்றுமில்லாததை தேடி அலைந்தேன்
கிடைத்ததா என்று குரு கேட்டார்
கிடைக்கவில்லை என்றேன்
தேடு! கிடைத்தவுடன் கொண்டுவா என்றார்
கிடைத்தால் என்ன செய்வீர்கள் குருவே? என்றேன்
ஒன்றுமில்லை என்றார்!



தாயம்!

பிறப்பிற்கான செய்கைகளை சிலாகித்த
நண்பனொருவன் இறப்பின் செய்கைகளாய்
அவை மாறுவதாய்ச் சொன்னவுடன்
சினம் கொண்டு எச்சரித்தான்.
மிச்ச நாட்களிலேனும் மச்சங்கள் வைத்து
சொச்சங்கள் எழுத நினைத்து சூது கட்டைகள்
விசிறினேன் ஒரு கட்டை முதுகும், ஒரு கட்டை
வயிறும் காட்டியது!



வலை

வலையில் வராதவளுக்காய்
திறந்திருந்த மடிக்கணினியில்
வலை விரித்து காத்திருந்தது
எட்டுக்கால் பூச்சி!



செங்கோல்

பாலைவனத்து கானல் நீரையும்
சென்னைவாசி கேட்டான்
குடிக்கிற தண்ணிதானே சார்!


உண்மை!

ஆடை கட்டி வந்தவர்களே
வெட்கமாயில்லை?
ரசிக்க வந்தவர்களை
மௌனமாய் கேட்டது
இயற்கை!


கிருமி!

கடவுள் வந்தால் என்ன கேட்பாய்?
என்று கேட்டவனிடம்
அது தெரியாது ஆனால்
அவர் என்ன கேட்பார் எனத்தெரியுமென்றேன்
என்ன என்று கேட்டவனுக்குச் சொன்னேன்

உங்கள யாருடா உள்ள விட்டது???


:-)
.

46 comments:

King Viswa said...

//கடவுள் வந்தால் என்ன கேட்பாய்?
என்று கேட்டவனிடம்
அது தெரியாது ஆனால்
அவர் என்ன கேட்பார் எனத்தெரியுமென்றேன்
என்ன என்று கேட்டவனுக்குச் சொன்னேன்

உங்கள யாருடா உள்ள விட்டது?//

Super.

King Viswa said...

உண்மையில் பல கவிதைகளை ரசித்தேன்.

நன்றி

Paleo God said...

வாங்க விஸ்வா. மிக்க நன்றி! :))

சாந்தி மாரியப்பன் said...

எல்லாமே அற்புதம். ஃபர்ஸ்ட் க்ளாஸ் ஞானவலைக்கு.

நசரேயன் said...

//ஒன்றுமில்லாததை தேடி அலைந்தேன்
கிடைத்ததா என்று குரு கேட்டார்//

வெண்ணையா ?

நசரேயன் said...

//கிடைக்கவில்லை என்றேன்
தேடு! கிடைத்தவுடன் கொண்டுவா என்றார்
கிடைத்தால் என்ன செய்வீர்கள் குருவே?//
அல்வா தருவேன்

நசரேயன் said...

//உங்கள யாருடா உள்ள விட்டது???//

நாங்களா வந்து மாட்டிகிட்டோம்

பாலா said...

//வாங்க விஸ்வா. மிக்க நன்றி! ://

அடடே.. அண்ணன் பதிலெல்லாம் சொல்லுறாரே....!

ஒருவேளை.. முக்கியமான பெரிய மனுசங்களுக்கு மட்டும்தானோ? ;)

King Viswa said...

//ஒருவேளை.. முக்கியமான பெரிய மனுசங்களுக்கு மட்டும்தானோ? //

என் இந்த கொலைவெறி?

பட் வை?

vasu balaji said...

எல்லாமே அருமை சங்கர். அதுவும் தாயம்:)

King Viswa said...

////ஒருவேளை.. முக்கியமான பெரிய மனுசங்களுக்கு மட்டும்தானோ? //

மறந்தே போய் விட்டேன், யார் அந்த பெரிய மனுசங்க? சொல்லவே இல்லியே?

Chitra said...

வலை

வலையில் வராதவளுக்காய்
திறந்திருந்த மடிக்கணினியில்
வலை விரித்து காத்திருந்தது
எட்டுக்கால் பூச்சி!


...... :-) எல்லாமே அக்மார்க் ரக கவிதைகள்...

Romeoboy said...

கவிதைனா இப்படி தான் இருக்கனும்,, அதாவது படிச்சா புரியர மாதிரி. ரைட் எனக்கு புரிஞ்சிடுசோ..

சீமான்கனி said...

//உண்மை!

ஆடை கட்டி வந்தவர்களே
வெட்கமாயில்லை?
ரசிக்க வந்தவர்களை
மௌனமாய் கேட்டது
இயற்கை!//

இது டாப்பு...மத்தது எல்லாம் பயங்கரமாதே இருக்கு சூப்பர் ஷங்கர்ஜி....

ஹேமா said...

ஞானம்,தாயம்,உண்மை ....
எல்லாமே பிடிச்சிருக்கு.

ஜெய்லானி said...

ரசிக்கும் படியான கவிதைகள்

பனித்துளி சங்கர் said...

//////
உண்மை!

ஆடை கட்டி வந்தவர்களே
வெட்கமாயில்லை?
ரசிக்க வந்தவர்களை
மௌனமாய் கேட்டது
இயற்கை!
////

அனைத்தும் அருமை !
அதிலும் என்னை மிகவும் கவர்ந்தது இந்த உண்மை !

க ரா said...

அருமை

Unknown said...

நல்லாருக்கு நல்லாருக்கு நல்லாருக்கு

தாயம் புரியிற அளவுக்கு நான் இன்னும் வளரலைன்னு நினைக்கிறேன்.. :))

எல் கே said...

//பாலைவனத்து கானல் நீரையும்
சென்னைவாசி கேட்டான்
குடிக்கிற தண்ணிதானே சார்!///

முதல் முறைய உங்க கவிதைகள் எனக்கு புரியுது

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

//ஆடை கட்டி வந்தவர்களே
வெட்கமாயில்லை?
ரசிக்க வந்தவர்களை
மௌனமாய் கேட்டது
இயற்கை!//
அருமை .

புலவன் புலிகேசி said...

ஒன்னுமில்ல நல்லா இருக்குன்னு சொல்ல வந்தேன்...

Prasanna said...

//மிச்ச
மச்சங்கள்
சொச்சங்கள்//

உச்ச கவிதை.. தாயம் :)

மோனி said...

//உங்கள யாருடா உள்ள விட்டது???//

நாங்களா வந்து மாட்டிகிட்டோம்

___

ரிப்பீட்டேய்...

Unknown said...

//பாலைவனத்து கானல் நீரையும்
சென்னைவாசி கேட்டான்
குடிக்கிற தண்ணிதானே சார்!//

அக்மார்க் கிண்டல் ..

டேய் யாருடா இவனை உள்ளவிட்டது ..

Sukumar said...

நைஸ் தல....

Anisha Yunus said...

ஏங்ணா?
ஏன் இந்த கொலை வெறி?
நல்லாத்தானே இருந்தீங்க?

கடைசி கவிதைல மட்டும் ஒரு சின்ன திருத்தம்.
கடவுளோட கேள்வி கண்டிப்பா பன்மைல இருக்காது, ஒருமைலதான் இருக்கும்,
இல்லீங்ணா?

settaikkaran said...

//அவர் என்ன கேட்பார் எனத்தெரியுமென்றேன்
என்ன என்று கேட்டவனுக்குச் சொன்னேன்

உங்கள யாருடா உள்ள விட்டது???//

:-))))

கலக்கலுங்கோய்! மெய்யாலுமே இதைத் தான் கேட்பாரு!

Cable சங்கர் said...

வெண்ணெய்.......:)

goma said...

பட்டை தீட்டிய கவிதைகள்....

சௌந்தர் said...

ஞானம், தாயம், வலை,செங்கோல்,உண்மை,கிருமி.
அருமை...

ARV Loshan said...

எல்லாம் ரசித்தேன்..
வலை&உண்மை .. அதிகம் ரசித்தேன்..
கலக்கல்

செ.சரவணக்குமார் said...

எல்லாமே நல்லாயிருக்கு ஷங்கர்.

VELU.G said...

எல்லா கவிதைகளுமே அருமை

VISA said...

என்ன இது இவ்வளவு அதிரடியா!!!!

மணிஜி said...

உங்கள யாருடா உள்ள விட்டது???

Radhakrishnan said...

அனைத்து கவிதைகளும் பிரமாதம் சங்கர். :) உண்மை, தாயம் மிகவும் ரசித்தேன்.

Anonymous said...

//பாலைவனத்து கானல் நீரையும்
சென்னைவாசி கேட்டான்
குடிக்கிற தண்ணிதானே சார்!//

சென்னைல மழை அடிச்சு பெய்யுதாம் :)

Vidhoosh said...

///ஒரு கட்டை முதுகும், ஒரு கட்டை
வயிறும் காட்டியது!//
அட!

///////////உங்கள யாருடா உள்ள விட்டது???//

நாங்களா வந்து மாட்டிகிட்டோம் /////////
நசர்.. எப்டிண்ணே

மாதேவி said...

ஞானம் , கிருமி, வலை பிடித்தது.

கமலேஷ் said...

தாயம் கவிதை ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு...

Anonymous said...

ஸ்ப்பா. கடைசியாக எனக்கு விளங்கிற மாதிரி எளிமையாக எழுதியதற்கு நன்றி

‍அனாமிகா.

//நீங்க ரொம்ப நல்லவங்க:) ஆனாலும் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..:))//
Dankz.

க.பாலாசி said...

அட.. எல்லாமே நல்லாருக்குங்க... அந்த முதுகும், வயிறும் சூப்பர்...

ஆமா இதுகள்ல எதுனாச்சும் கொலவெறி இருக்கா....!!!!???

அப்பறம் அந்த மடிக்கணிணிய அப்பப்ப துடைச்சி வைய்யுங்க...

Paleo God said...

அனைவருக்கும் மிக்க நன்றி!! :-)

தாராபுரத்தான் said...

வலைச்சரத்து மூலமா வந்தேன். ஏற்கனவே படித்து இருந்தாலும் மீண்டும் படிக்க ஒரு வாய்ப்புங்க..நல்ல இடுக்கை.

Unknown said...

//வலை
வலையில் வராதவளுக்காய்
திறந்திருந்த மடிக்கணினியில்
வலை விரித்து காத்திருந்தது
எட்டுக்கால் பூச்சி!
செங்கோல்
பாலைவனத்து கானல் நீரையும்
சென்னைவாசி கேட்டான்
குடிக்கிற தண்ணிதானே சார்!//

ithu 2um romba supernga...