பலா பட்டறை: பதிவுலகின் பிரம்மாவுக்கு ஒரு மனம் திறந்த மடல்!!

பதிவுலகின் பிரம்மாவுக்கு ஒரு மனம் திறந்த மடல்!!

பதிவுலகின் பிரம்மாவுக்கு ஒரு மனம் திறந்த மடல்..!!


அன்புள்ள பதிவுலகின் பிரம்மாவே நலமா? நான் நலம். இந்தப் பதிவுலகில் நான் நுழைந்து சற்றொப்ப ஒரு வருடம் ஆகப் போகும் நிலையில் இப்பொழுதுதான் நான் செய்த தவறு எனக்குப் புரிந்தது. என்ன செய்ய நன்றி மறந்தவனாகிவிட்டேன். மன்னிக்க..

பல இடங்களில் பல பேர் உங்களைப் பயன்படுத்தி பல கோடி ஹிட்ஸ்களை வாரிக்குவித்தும், வசை மாறி பொழிந்தபோதும் நீங்கள் வாளாவிருந்தது எனக்கு எப்பொழுதும் வியப்பே தந்திருக்கிறது. இவ்வளவு பொறுமையா என்று.

உங்களின் அனுமதியே இல்லாமல் எத்துனை முறை உங்களைப் பயன் படுத்தி உங்கள் பெயரைப் படுத்தி நான் ஹிட்ஸ்களையும் பாலோவர்களையும் குவித்திருக்கிறேன்? நினைக்கும்போதே உடலெல்லாம் கூசுகிறது ஒரு நன்றி சொல்ல நா வரவில்லையே என்று..

ஒரு வார்த்தை நீங்கள் கேட்டதில்லை நானும் அதையே காரணமாக எடுத்துக்கொண்டாலும் உங்களின் பெருந்தன்மை யாருக்கு வரும்.

என்ன செய்ய நானும் ஒரு சாதாரணன் என்ற நிலையே ஒரு வருடத்தில் தங்களால் பிரபலம் என்று ஆக்கப்பட்டதன் பின்விளைவும் அதனால் வந்த புகழ் போதையும், இப்பொழுதாவது என் அறிவுக் கண்ணைத் திறந்தமைக்கு நன்றி..

இந்த தீப ஒளித் திரு நாளையே உங்களுக்கு நன்றி சொல்ல வாய்ப்பளிக்க எடுத்துக்கொண்டு வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.

அப்படியே உங்கள் அனுமதியுடன் இந்த வார்த்தைகளையும் பயன் படுத்திக்கொள்கிறேன்

என்னைக் கடந்துபோகும் நண்பர்களுக்கும், சகோதர, சகோதரிகளுக்கும், பெரியவர்களுக்கும் தீபாவளி (அ) விடுமுறை தின வாழ்த்துகள். 

:))


டிஸ்கி:- பிரம்மா யார் என்பது அடுத்த இடுகையில் விளக்கப்படும் stay tuned!!

14 comments:

'பரிவை' சே.குமார் said...

Happy DIWALI to U.

கோவி.கண்ணன் said...

யாருங்க தல அந்த பிரம்மா ? :)

Anonymous said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள் :)

நட்புடன் ஜமால் said...

கடிதத்த எனது மெயிலுக்கே அனுப்பியிருக்கலாமே

ஏன் பப்ளிக்ல பதிவெல்லாம் போட்டு

ச்சே என்னமோ போங்க, உங்க பாசத்துக்கெல்லாம் ...

ஜோதிஜி said...

வாழ்த்துகள்

Jackiesekar said...

கடிதத்த எனது மெயிலுக்கே அனுப்பியிருக்கலாமே

ஏன் பப்ளிக்ல பதிவெல்லாம் போட்டு

ச்சே என்னமோ போங்க, உங்க பாசத்துக்கெல்லாம் ... //

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்யய்ய்ய

CS. Mohan Kumar said...

என்னா இது.. ஒரே சஸ்பென்சா கீது?

ஹேப்பி தீபாவளி

Unknown said...

அடுத்த இடுகையில் என்பது டூ மச் சார் ...

நேசமித்ரன் said...

ஷங்கர் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகள் நண்பா!

அதிரை என்.ஷஃபாத் said...

பதிவுலகின் பிரம்மா யாருனு தெரிஞ்சுக்கா ஆவலா இருக்கேன்

www.aaraamnilam.blogspot.com

ப்ரியமுடன் வசந்த் said...

ஹேப்பி தீபாவளி ஷங்கர் அண்ணா!

R.Gopi said...

பிரம்மா... ஓ பிரம்மா....

தகுமா.... இது தகுமா...
இது வரமா இல்லை சாபமா!!?

தோழமைகள் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

என் லேட்டஸ்ட் பதிவுகள் இதோ :

மன்மத அம்பு - கப்பலில் காதல் http://jokkiri.blogspot.com/2010/11/blog-post.html

ந‌ண்ப‌ர்க‌ள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்..
http://edakumadaku.blogspot.com/2010/11/blog-post.html

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

எம் அப்துல் காதர் said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!