பலா பட்டறை: புத்தகக் கண்காட்சியும் சில ஆச்சரியங்களும்..!

புத்தகக் கண்காட்சியும் சில ஆச்சரியங்களும்..!


கடந்த சில வருடங்களாகவே இந்த முதல் நாளில் புத்தகக் கண்காட்சிக்குப் போவதென்பது கிட்டத்தட்ட ஒரு வியாதியாகவே ஆகிவிட்ட நிலையில் இன்று கேவிஆர், எறும்பு ராஜகோபால், குட்டி’டின், சாறுசங்கர், மயில் ராவணன் புடை சூழ மாலை 5.30 மணி வாக்கில் அனுமதி இலவசத்தில் கண்காட்சிக்குள் நுழைந்தோம்.  

அவியல் கூடாரம்!

n

எல்லாம் தயார்! 


வழக்கத்தை விட இம்முறை ஸ்டால்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கும் என்று நினைக்கிறேன். நடந்து நடந்து கால் வலித்ததும் முழுமையாகக் காண முடியாததும் மிச்சம். அதுவும் முதல் நாளில் ரீப்பர்களில் ஆணி அடித்து புத்தகக் கட்டுகளைப் பிரித்துக்கொண்டிருந்த பதிப்பாளர்கள் இம்முறை 95% தயாராக இருந்தது வியப்பு. கணிசமான அளவில் மக்களின் கூட்டமும் இருந்தது. கேபிள்ஜி, கேஆர்பி, யுவக்ருஷ்ணா, அதிஷா ஆகியோரையும் காணமுடிந்தது.  எதுக்கு அங்கிட்டு இங்கிட்டு சுத்தறீங்க நம்ம கடைக்கு வாங்க பழகலாம் என்று டிஸ்கவரி வேடியப்பன் ஒரு ஸ்டால் போட்டிருக்கிறார்.

புத்தகத் திருவிழாவின் வாஸ்து பிரகாரம் ஈசான மூலையில் இருக்கும் லிச்சி ஜூஸ் கடைக்கு சென்று ஆர்டர் செய்யப்போனால் 25ரூ பாட்டில் என்றார்கள். ஒரே ஒரு போட்டோ மட்டும் எடுத்துக்கொண்டு வெளியில் வந்து ஆளுக்கொரு வாழைத்தண்டு சூப் பருகினோம்.

சீச்சீ இந்த லிச்சி புளிக்கும்..


வழக்கம்போலவே இந்த ஆண்டும் இட்லி குண்டானை ஒத்த அரங்க மேற் கூரை வடிவமைப்பு சொற்ப கூட்டத்திற்கே மூச்சு முட்டுவதாகவும், சூடாகவும், வியற்வை பெருக்கும் அளவிலும் இருந்தது. நல்ல காற்றோட்டமான வடிவமைப்பு கிடைக்க இன்னும் என்னென்ன புண்ணியம் செய்யவேண்டுமோ தெரியவில்லை. விடுமுறை நாட்களில் குழந்தைகளுடன், மனைவியுடன் கூட்ட நெரிசலில் உள்ளே செல்பவர் வெறுத்துப்போவார்கள் என்பது நிச்சயம்:((

சுஜாதாவின் மலிவு பதிப்பு புத்தகங்கள்

சுஜாதாவின் பல நாவல்கள் 15/20 ரூவாய்க்கு சல்லிசுவிலையில் பழைய மலிவுப் பதிப்பில் கிடைத்தது. அள்ளிக்கொண்டோம். 
காமிக்ஸ் ஸ்டால்


பெரிய ஆச்சர்யமாக லயன் மற்றும் முத்து காமிக்ஸ் ஒரே பண்டலாக அனைத்து இதழ்களையும் 900/- ரூபாய்க்குத் தருகிறார்கள். 30 வருடக் கனவு. அதையும் அள்ளிக்கொண்டோம். 

ஜெய் ஜாக்கி


ஜாக்கி சேகரின் அறச்சீற்றத்தில் அம்மாவே கடலூருக்குச் செல்லும்போது பபாசி மட்டும் சும்மா இருக்குமா என்ன? அவர்களும் ஒரு உலகப் பட ஸ்டாலுக்கு அனுமதி கொடுத்துவிட்டார்கள் 60ரூபாய்க்கு டிவிடிக்கள் கிடைக்கிறது.
கேவிஆர்

எம்புட்டு காமிக்ஸு.


வழக்கம் போல டூவீலருக்குப் பத்து ரூபாய் பார்க்கிங். கால்தடுக்கும் சிகப்பு நிற கார்பெட்கள் என்று களை கட்டிவிட்டது புத்தகக் கண்காட்சி. 

டிஸ்கி : எப்படியோ ஒரு இடுகை தேத்தியாச்சி. இஃகி :)))

16 comments:

vasu balaji said...

போலாமான்னு பஸ்ல கேட்டா பதிலுடாம கூட்டமா சேர்ந்து போய்ட்டு வந்ததை கண்ணடிக்கிறேன்:))

துளசி கோபால் said...

நேரடி ரிப்போர்ட்டுக்கு நன்றிகள்.

அப்ப....'எல்லாம்' வழக்கம்போல் தானா?:-)))))

Philosophy Prabhakaran said...

Useful information sir... சனிக்கிழமைக்குள் நீங்கள் சொன்ன புத்தகக்கடைகள் காலியாகாமல் இருக்க வேண்டும்...

ஜோதிஜி said...

இதுக்கு பேரு தான் சுடச்சுடச் செய்தியா?

அப்பாதுரை said...

முத்து காமிக்ஸா... அடப்பாவிகளா! (இப்படி புலம்பும்படி வச்சுட்டாங்களே...)

ம்ம்ம்... எஞ்சாய் பண்ணுங்க.

CS. Mohan Kumar said...

என்னது சுஜாதா புக்ஸ் இவ்ளோ சீப்பா கிடைக்குதா? போயிட வேண்டியது தான்

கருந்தேள் கண்ணாயிரம் said...

என்னாது புத்தக கண்காட்சி ஆரம்பிச்சிருச்சா? அந்தக் கண்காட்சியில் புத்தகங்கள் எல்லாம் விற்கப்படும் என்று ஒபாமா எனக்கு டிவிட்டரில் போன் செய்தார். அந்த செய்தியை மன்மோகன் சிங்குக்கு SMS சில் தந்தி அடித்திருக்கின்றேன். ஏனென்றால் நான் STD

rajamelaiyur said...

என்ன புத்தகம் வாங்கினிங்க ?

rajamelaiyur said...

நண்பர்களே உங்களுக்காக :

ரூபாய் 5000 மதிப்புள்ள உளவு பார்க்க உதவும் மென்பொருள் இலவசமாக(MAX KEYLOGGER)

மரா said...

என் போட்டோ போடாம பதிவு போட்டதை வன்மையா கண்ணடிக்கிறேன் :-))

சுரேகா said...

இன்னிக்கு வருவீங்களா?

வவ்வால் said...

ஷங்கர்,

புத்தக கண்காட்சிய திறந்து வைத்ததே நீங்க தான் போல இருக்கு :-)) கட்டுப்பிரிக்காத மிச்ச,சொச்ச கட்டை எல்லாம் பிரிச்சு அடுக்கிட்டு தான் வந்தீங்களா :-))

நீங்களும் காமிக்ஸ் பிரியரா? நான் அப்போ வந்த ஒரு காமிக்ஸ் விட்டதில்லை, லயன் காமிக்ஸ் ஸ்டால் இருக்கு சொன்னதும் அவசியம் கண்காட்சிக்கு போகணும் தோனுது.

உலகப்படத்தில இருந்து பலானப்படம் வரைக்கும் 20 ரூபாக்கு கிடைக்குமே, கண்காட்சில 60 ரூபாவா , கொஞ்சம் அதிகம் தான்!

இரா said...

yennaya vitutu poi suthitu vanthatha vanmaiya kanidikiren..

ippadiku,
ka.raa.

Unknown said...

//என்னது சுஜாதா புக்ஸ் இவ்ளோ சீப்பா கிடைக்குதா? போயிட வேண்டியது தான்//

அண்ணே இன்னைக்கே போங்க, இல்லைன்னா காலியாகும் அபாயம் இருக்கிறது..

வல்லிசிம்ஹன் said...

இப்படியே நடத்தியே நம்மப் ப்ழக்கப் படுத்திவிட்டார்கள். நீங்கள் சொல்லும் தடுக்கு சிவப்பு கம்பளமும் மேடும் குழியும் மறைக்கத்தான்.
இருந்தாலும் போகாமல இருக்க முடியாது.

King Viswa said...

தோழர்,
நேற்று காலையில் இருந்து கண்காட்சியில் தான் இருந்தேன். ஆனால் ஆறு மணி வாக்கில் ஒரு முக்கிய வேலை இருந்ததால் அவசரமாக வெளியேறவேண்டிய சூழல். ஆகையால் உங்களை அங்கே சந்திக்க இயலவில்லை. இன்று நம்ம எறும்பு ராஜகோபாலையும், தினேஷையும் சந்தித்து உங்களைப்பற்றி விசாரித்தேன். வாஸ்துப்படி நீங்கள் வெள்ளிகிழமை புத்த கண்காட்சிக்கு வருவதில்லைஎன்பதால் உங்களை இன்று சந்திக்க இயலவில்லை. நாளை வருவீர்களா? நான் வழக்கம் போல நம்ம காமிக்ஸ் ஸ்டாலில் தான் இருப்பேன்.