பலா பட்டறை: சிறப்பாக நடந்த பதிவர்கள் விழா - வாழ்த்தும், நன்றியும்!

சிறப்பாக நடந்த பதிவர்கள் விழா - வாழ்த்தும், நன்றியும்!

இன்றைக்கு தமிழ் பதிவர் சந்திப்பிற்கு சென்றிருந்தேன். மணிஜி, கேபிள்ஜி, அண்ணன் உண்மைத் தமிழன், எல்.கே, சுகுமார் சுவாமிநாதன், ஜாக்கி சேகர், பட்டர் ப்ளை சூர்யா, அகநாழிகை வாசு, வெள்ளிநிலா ஷர்புதீன், காவேரி கணேஷ், சுரேகா, மெட்ராஸ் பவன் சிவகுமார், வீடு திரும்பல் மோகன் ஜி, திசைகாட்டி ரோஸ்விக், சீனா ஐய்யா, நண்டு @ நொரண்டு, பிலாசபி பிரபாகரன், சங்கவி, சேட்டைக் காரர்(ன்),  பழம் பெரும் பதிவர் ஜமால், சிரிப்பு போலிஸ் ரமேஷ், திரு.லதானந்த், சிபி செந்தில் குமார், ஆயிரத்தில் ஒருவன் மணி, பெஸ்கி  போன்ற நண்பர்களை சந்தித்தேன் கூடவே பெருந்திரளான புதிய அறிமுகமில்லாத பதிவுலக  மக்கள் திரண்டிருந்தனர். வேடியப்பன் புத்தக ஸ்டால் போட்டிருந்தார். காலை முதல்  மதியம் வரை பதிவர்கள் அறிமுகம், அதன் பின்னர் கவியரங்கம் என்று  களை கட்டியது நிகழ்சிகள்.


அருமையான மதிய உணவுடன் விழா கட்டுக்கோப்பாக மிகவும் சிறப்பான அளவிலே நடத்தப்பட்டது பெரிய விஷயம் என்று நினைக்கிறேன். பல பெண் பதிவர்களும் வந்திருந்தார்கள். வயதில் மூத்த பதிவர்கள் பலர் ஆர்வத்தோடு கலந்து கொண்டது  ஆச்சரியம். 

விழா ஏற்பாடு செய்தவர்களில் பலரை நான் பார்த்ததில்லை, படித்ததில்லை. ஆனால் மிகப்பெரிய உழைப்பு அவர்களால் இங்கே யார் பெயரையும் முன்னிறுத்தாமல் தரப்பட்டிருந்தது. சுரேகா நிகழ்ச்சியை அழகாக தொகுத்து வழங்கினார். இருபத்தைந்து வருடங்களுக்கு முன் ஆர்வத்துடன் படித்த பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களை சந்தித்தது வியப்பு கலந்த மகிழ்ச்சி :)

நல்லதொரு விழாவை சிறப்பாகச் செய்து முடித்துவிட்டார்கள். அடுத்தது என்ன என்ற கேள்வி அவர்கள்  முன்னே நிற்கிறது. அதையும் சிறப்பாக சமூக அக்கறை சார்ந்து முன்னெடுத்துச் செயல் படுத்துவார்கள் என்ற நம்பிக்கை மேலோங்குகிறது. 

எங்கெங்கோ பிறந்து வளர்ந்தவர்களை ஒரு புள்ளியில் ஒன்றிணைக்கும் இந்தப் பதிவுலகம் - ஓட்டு, பின்னூட்டம், மொக்கை, கும்மி, அரசியல், வம்பு   என்ற பொழுது போக்குகள் கடந்து சமூகம் சார்ந்த உதவிகளுக்கு மிக முக்கியப் பங்காற்றும் ஒரு சக்தியாக மாறும் என்ற நம்பிக்கையில் வீடு வந்து சேர்ந்தேன்.

இந்த நிகழ்ச்சியில் ஒரு பைசா அளவுக்குக் கூட என் பங்கு இல்லை, என்றாலும், கண்ட மக்கள் அனைவரும் புதியவர்களாக இருந்தாலும் நட்பும், அன்பும், மரியாதையும், மகிழ்ச்சியும் அளித்த அவர்கள் அனைவருக்கும் நானும் ஒரு காலத்தில் பதிவர்  என்ற முறையில்  நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். :))                    
                                  

24 comments:

கும்மாச்சி said...

ஆம் சந்திப்பு சிறப்பாக நடந்தது. நெறி வரமுடியாததால் நான் இணையத்தில் கண்டுகளித்தேன்.

வவ்வால் said...

ஷங்கர்,

மின்னல் ஷங்கர்னு பேர மாத்திக்கலாம் , வேகமா பதிவுப்போட்டுட்டிங்க ,

சந்திப்பு சிறப்பாக அமைந்தது மகிழ்சியையும், நம்பிக்கையும் தருகிறது.

கொஞ்சம் படமும் போட்டிருக்கலாம்.

அடுத்து விரிவா போடும் போது படமும் இணைக்கவும்.நன்றி!

காவேரிகணேஷ் said...

அருமை ஷங்கர்..

ஸ்ரீ.... said...

சந்திப்பு குறித்த விரைவான இடுகைக்கு நன்றி. இதற்காக உழைத்த அனைத்துப் பதிவர்களுக்கும் உங்கள் பதிவின் வாயிலாக எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்ரீ....

சுரேகா.. said...

நன்றி நண்பா!

துளசி கோபால் said...

அருமை! பகிர்வுக்கு நன்றி.

அடுத்த மாதம் ஒரு மினி மாநாடு இருக்கு என்பதை மறக்காதீங்க:-)

ஜோதிஜி said...

வாய்ப்பு அமையாமல் போய்விட்டது எனக்கு வருத்தமே,

CS. Mohan Kumar said...

நன்றி ஹீரோ ஷங்கர் !

வல்லிசிம்ஹன் said...

தங்களைப் பார்த்ததில் எனக்கும் மிகவும் சந்தோஷம். பதிவர் மாநாடு பெற்ற வெற்றி அளவிடமுடியாதது. உழைத்தவர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆனான் தாங்கள் அதே பழைய கெட்டப்பில் வந்ததின் மர்மம் என்னவோ?

Anonymous said...

பகிர்வுக்கு மிக்க நன்றிகள் சகோ... !!!

எல் கே said...

எனக்கு முன்னாடி போட்டாச்சா...சரி அதெல்லாம் இருக்கட்டும். பழைய பண்நீர்செல்வமா நீங்க வரணும்...

Anonymous said...

நீங்கள் வந்ததில் மிக்க மகிழ்ச்சி சார். டேக் கேர் ஆப் யுவர் டம்மி :))

sathishsangkavi.blogspot.com said...

தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...

Paleo God said...

கும்மாச்சி - நன்றிங்க :)

வவ்வால் : கதறக் கதற படம் போடப்போறாங்க இதுல நான் வேறயா? :))

காவேரி கணேஷ் : நன்றி பாஸ் :)

ஸ்ரீ : ஆமாம் மிகப் பெரிய உழைப்பு, ஏற்பாடுகளும் சிறப்பாக இருந்தது. :)

சுரேகா : நன்றி தல :)

துளசி கோபால் : டீச்சர் நீங்க இல்லாத குறைய அங்கேயே பேசிக்கிட்டோம் :) அடுத்த மாசம் ஜமாச்சிபுடலாம்:))

ஜோதிஜி : திருப்பூர்ல ஒரு சங்கம் ஆரம்பியுங்க :))

மோகன் ஜி : நன்றி :))

வள்ளி சிம்ஹன் : உங்களை சந்தித்து பேசணும்னு நெனெச்சேன் நீங்க கிளம்பற அவசரத்தில் இருந்தீர்கள், அதனால தொந்தரவு பண்ணவில்லை. மிக்க மகிழ்ச்சி அம்மா :))

ரமேஷ் : :)))

இக்பால் செல்வன் : நன்றிங்க :))

எல்கே : வொய் திஸ் கோல வெறி மேன்? :))

சிவகுமார் : சரிங்க ஆப்பீசர் :))

சங்கவி : மகிழ்ச்சி நண்பா:))

துளசி கோபால் said...

டேங்கீஸ் ஷங்கர்.

arasan said...

மிகுந்த நன்றிகள் சார் ...

அருள் said...

பதிவர் சந்திப்பு முதல் நிகழ்வு போன்று இல்லை. சிறப்பான நிகழ்வை நடத்தியவர்களுக்கு நன்றி. நான் பங்கேற்ற முதல் பதிவர் நிகழ்வும் இதுதான்.

மது, மதம், சாதி: மிகத் தீமையானது எது?

http://arulgreen.blogspot.com/2012/08/blog-post_27.html

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றி சார்... வாழ்த்துக்கள்... (TM 5)

மாதேவி said...

நேரலையில் கண்டுகொண்டேன். பகிர்வுக்கு நன்றி.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

//எம் ஜி ஆர் மாதிரி சும்மா தக தகன்னு இருக்கீங்க பாஸ்//
ம் ...
யாரப்பாத்துயாருசொல்ரது...
ஹா...ஹா .. ஹா.. .
தங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சியான ஒன்றாக இருந்தது சகோ.

Unknown said...

மிகவும் அருமையான தகவல் நன்றி தோழரே

Unknown said...

மிகவும் அருமையான தகவல் நன்றி தோழரே

தேவன் மாயம் said...

Thank you.. i am bit busy.. so missed!

thevanmayam