பலா பட்டறை: 08/01/2011 - 09/01/2011

மலையாளக் கரையோரம்..


கபேயில் பிரம்மாண்ட பதிவர் சந்திப்பு முடிந்து நான், மணிஜி, அகநாழிகை வாசு, செல்வம் காரில் பொள்ளாச்சி நோக்கிக் கிளம்பினோம். வழியெல்லாம் வாசு மற்றும் மணிஜியின் போன் ஒலித்துக்கொண்டே இருந்தது எப்ப வருவீங்க எப்ப வருவீங்க கேட்டுக்கொண்டிருந்த அந்த மகானுபாவன் நம்ம கும்க்கியார். 

ழ கபேயில் 


ரவு சுமார் 1.30 அளவில் பிக் அப் செய்து பொள்ளாச்சி சேரும்போது காலை 8.30. ரூம் எடுத்து காலை உணவை ஒரு பிரபல பஸ்ஸர் வீட்டில் (மிக அழகான வீடு:) உண்டுவிட்டு (மெனு-சந்தகை + அரிசி பருப்புச் சோறு + சப்பாத்தி + மோர் + பறித்து சில நாட்களே ஆன பேரீச்சம் பழங்கள்) வால்பாறை செல்வதற்கான 
ப்ளானில் இறங்கினோம். பல வருடங்களுக்கு முன்பு சென்ற/கண்ட பொள்ளாச்சி வேறு. இப்பொழுது ஊரே பளபளப்பு கூடி மிக அழகாக இருந்தது. 

நாலடியார்கள்


மங்கி ஃபால்ஸ்

மிக அழகழகான வீடுகள். நாங்கள் சென்றபோது க்ளைமெட்டும் மிக அருமையாக இருந்தது. நன்றி கூறி விடைபெற்று வால்பாறை செல்லும் வழியில் குரங்குஅருவியில் ஒரு குளியல் போட்டுவிட்டு கும்க்கியார் வளைத்து, வளைத்து வண்டி ஓட்ட ஒரு கட்டத்தில் சாலையே தெரியாத அளவிற்கு பனியும் மேகமூட்டமும் அப்பிக்கொண்டிருந்தது.
வால்பாறை செல்லும் வழியில் ஒரு வளைவு


கொண்டை ஊசி வளைவுகளில் குன்ஸாக ஓட்டிக்கொண்டே வால்பாறை வந்தபோது மழை அடித்துப் பெய்துகொண்டிருந்தது. மூன்றாம் மாடியில் அறை எடுத்து குளிரை கம்பளியில் தடுத்து தூங்கி எழுந்தால் லேசான சாரலுடன் வாங்க பழகலாம் என்று வால்பாறை அழைத்தது. 

வால்பாறையில் ஒரு டீ எஸ்டேட்


வால்பாறை டு அதிரம்பள்ளி வழியில்

திரம்பள்ளி நீர்விழ்ச்சிக்கு வால்பாறை வழியாக செல்லும் இடமெல்லாம் தமிழக எல்லை வரை தேயிலைத் தோட்டம். அடுக்கடுக்காக பச்சை நிறம் மட்டும் கொண்டு வரைந்த ஒரு மாடர்ன் ஓவியம் போல ஒவ்வொரு மலைச் சரிவிற்கும், ஒவ்வொருவிதமான வடிவம் கொண்டு பார்க்கும்போதே மனது 
லேசாகியது. வார்த்தைகள் இட்டு நிரப்ப முடியாத ஒரு குதூகலம் எல்லோர் மனதிலும். சரியாக தமிழ்நாடு எல்லை முடிந்து கேரள செக்போஸ்ட் ஆரம்பிக்கும்போது, வண்டியையும் வண்டி ஓட்டுபவரையும் முழு சோதனை செய்த பிறகே அனுமதிக்கிறார்கள். 

”ட்ரிங்ஸ் அடிச்சிட்டுண்டோ”
          ”இல்ல சார்”
         ”ஹாங் அடிச்சா தா அங்க நோக்கு தவுசண்ட் ருப்பீஸ் ஃபைனானு”
(செக்போஸ்ட் அருகிலேயே கன கச்சிதமாக போலீஸ் ஸ்டேஷன்.
தெய்வத்திண்ட சொந்தம் நாட்டில் வேறு தீர்த்தங்களுக்கு அனுமதி இல்லையாம். )
தெய்வத்திண்ட நாட்டில், ஒரு காட்டில் கஜாக்கா தோஸ்த்ஸ்


பிக்சர் இன் பிக்சர்

பார்டர் தாண்டியதும் அது வேறு உலகமாகிவிட்டது. தேயிலைத் தோட்டம் என்பது காட்டை அழித்து மனிதன் உருவாக்கிய பணப்பயிர். இங்கே காட்டைக் காடாகவே வைத்திருக்கிறார்கள். யாரோ ஒருவரின் ஒரு கோப்பைத் தேனீருக்காக எவ்வளவு இழந்திருக்கிறோம் என்பது ஓங்கி உளகளக்கும் மரங்களிலும், பூச்சிகள், பறவைகளின் ஒலிகளிலும், சாலையில் சிதைந்து கிடந்த யானைகளின் சாணங்களிலும் தெரிந்தது. ஊருக்குள் வந்து துவம்சம் செய்யும் அவற்றின் மேல் கோபம் கொள்ளுதல் ஆறாம் அறிவின் உச்சகட்ட வக்கிரம் என்பது புரிந்தது. 

எப்படி இந்த மரத்த விட்டு வெச்சிருக்கானுவ?

ழி நெடுக அடர்ந்த காடு, கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர்களுக்கு சாலை குண்டும் குழியுமாக இருந்தது. 

செல்லும் வழி நெடுக பரவலாக மழை. கும்க்கி எங்கேனும் யானை தெரிகிறதா என்று இரண்டு பக்கமும் பார்த்தபடி வண்டி ஓட்டிக்கொண்டு வந்தார். . 

”யானைங்க கூட்டமா வந்தா என்னங்க பண்றது?”
”வாலப் பிடிச்சி கடிச்சா அதுங்க பயந்து ஓடிப் போயிடுமாம்”

சிகரெட் சித்தர் - அட்டேன்ஷன்!


சீட்டுக்குலுக்கிப் போட்டதில் செல்வம் பெயர் வந்தது. அவரும் தயாராகவே இருந்தார்.     

னால் யானைகள்.? ம்ஹும்ம்! கனத்த மனதுடன் அதன் சாணங்களை மிதித்து ஆதி மனித எச்சத்திற்குத் தீனி போட்டுவிட்டுக் கிளம்பினோம். 

சாலக்குடிக்கு 30 கிலோ மீட்டருக்கும் முன்னால் வருவது அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி. அதற்கும் முன்னால் நாங்கள் வந்த அந்த அடர் காட்டுவழிப்பாதை முடியும் இடம் வாழச்சல். வளைந்து நெளிந்து செல்லும் அகலமான ஆறு, கரையோரம் ஒரு சேட்டனுடைய ஹோட்டல், கேபிள்ஜி சைசில் அரிசிச்சோறு, அதே ஆற்றில் தூண்டிலில் உனவுக்காகச் சிக்கி உணவான மீன் வறுவல். ஹோவென்ற மழை. மதிய உணவை மாலையில் முடித்து அழகான அந்த ஆற்றங்கரையில் காலார நடந்து, காரெடுத்து நாங்கள் சென்ற இடம் அதிரப்பள்ளி.

நிறைய வீடுகளை ரிசார்ட்டுகளாக மாற்றி வைத்துள்ளார்கள். நாங்கள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து இரவு நெடுநேரம் இலக்கியப் பணி ஆற்றிவிட்டு. காலையில் அருவிக்குச் சென்றோம். 

தரனனா.... திரனனா.... திரனா!

வாழ்வில் மறக்கமுடியாத சில மணித்துளிகளில் இந்த அருவியைக் கண்டவாறே உட்கார்ந்திருந்ததைச் சொல்லலாம். ஆறு அமைதியாக வந்து அந்தப் பள்ளத்தாக்கில் ஆக்ரோஷமாக விழுந்து வெண்பஞ்சு துகள்களாக நீர்த்திவலைகளை மேல் நோக்கித் தள்ளும் அமைதிக்கும் ரெளத்திரத்திற்குமான அந்த விளிம்பில், எதுவுமே யோசிக்க முடியாத ஒரு ஏகாந்தம் மனதில் ஏறும். குளிக்கவோ கூப்பாடுபோடவோ மனம் நாடவில்லை. அங்கே வந்த பெரும்பாலானவர்கள் அருவியின் பிரம்மாண்டத்தில் வாயடைத்துப் போய் அமைதியாக நிற்பதைப் பார்த்தேன். 

நீயெல்லாம் மசிறுக்குக்கூடச் சமானமில்லை என்று இயற்கை அழுத்தம் திருத்தமாக மனிதனைப் பார்த்துச் சொல்லுவதைப்போல எனக்குத் தோன்றியது. இதுவரை இந்த அருவியைக் காணாதவர்கள் ஒருமுறையாவது இங்கே சென்றுவரவேண்டும் என்பது என் வேண்டுகோள். வால்பாறை வழியே சென்றுவருவது இன்னும் அற்புதமாக இருக்கும்.

நன்றி! :-)

சில விவரங்கள்::