பலா பட்டறை: 10/01/2010 - 11/01/2010

பிருந்தாவனமும் நொந்த குமாரனும்..!!

ஹும்ம் - 1

சென்ற வாரக்கடைசியில் பெங்களூரு சென்றிருந்தேன். பெண்களைவிட அழகாக நிறைய மரங்கள், புத்துக்குலுங்கும் செடிகள் ஊரெங்கும், வீடெங்கும் காணக்கிடைக்கிறது. ஏன் பெங்களூரு நல்ல இதமான குளிர்ச்சியும் மழையும் தன்னகத்தே கொண்டிருக்கிறதென்பது புரிகிறது.

ஹும்ம் - 2

அபரிமிதமான சாஃப்ட்வேர் கம்பெனிகள் வளர்ச்சிக்குத் தக்க சாலை வசதிகள் ஏதும் சிறப்பாக இல்லை, முக்கி முனகி மெட்ரோ தயாராகிக் கொண்டிருக்கிறது . ஒரு சிக்னலிலிருந்து முதல் கியர் மாற்றி அடுத்த கியர் போடுவதற்குள் அடுத்த சிக்னல் வந்துவிடுகிறது. சரியாக சிக்னல் இருக்கும் இடத்திலேயே ஒரு ஸ்பீட் ப்ரேக்கர் (எதுக்குங்க?!) பின்னாடியே சுனாமி துரத்துவதுபோல் சிக்னலை மதிக்காமல் நாலா பக்கமும் முந்தத் துடிக்கும் வாகனங்கள். 

ஹும்ம் - 3

ரயில்வே ஸ்டேஷன் எதிரிலேயே மெஜஸ்டிக் பஸ் நிலையம் ஆனால் சாலையைக் கடப்பதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது. சரி என்று சுரங்கப் பாதையைத் தேர்ந்தெடுத்தால் ஆண்களுடைய கற்புக்கே கேரண்டி இருக்காது போல!.

ஹும்ம் - 4

கேரளாவில் தனிவீடுகள் சிறப்பாகவும் அழகாகவும் கட்டப்படுகிறதென்றால், பெங்களூருவில் அடுக்ககங்கள் அழகாக இருக்கிறது. ரசித்து டிஸைன் செய்திருக்கிறார்கள் (நான் கண்டவரையில்) என்னங்க இப்படிக்குளிருதே என்றால் இன்றைக்கு வெயில் கொஞ்சம் ஜாஸ்தி என்று பதில் வருகிறது (ஹும்ம்!).

ஹும்ம் - 5

ஒரு உயர்ரக நாயை வளர்ப்பதைவிட சிரத்தையாக வளர்த்தால் மட்டுமே போனால் போகட்டும் என்று இங்கே சென்னையில் பூக்கும் ரோஜாக்கள் பெங்களூரில் வஞ்சமில்லாமல் பூக்கின்றது. அடுக்ககங்களில்கூட குறைந்தபட்சம் இரண்டு தொட்டிகளிலாவது செடிகள் வளர்க்கிறார்கள். 

ஹும்ம் - 6

மேலும் தினசரியில் படித்த இரண்டு விஷயங்கள், கழுதைப் பால் வியாபாரம் நன்றாக நடக்கிறதாம். குழந்தைகளுக்கு தருவதற்காக காரில் வந்து வாங்கிக் கொண்டு போகிறார்களாம். 

பன்னேர்கட்டா Zooவில் சிங்கமும், சிறுத்தையும் நோயால் இறந்து போயிருக்கின்றன. 

ஹும்ம் - 7

பெங்களூரு எக்ஸ்ப்ரஸில் சென்றபோது வாங்கிய 2 பஜ்ஜிகள் ரூபாய் - 10/-
பிருந்தாவன் எக்ஸ்பிரஸில் வந்தபோது (அப்பாடி தலைப்புக்கு வந்துட்டேன்) வாங்கிய 2 பஜ்ஜிகள் ரூபாய் - 14/- 40 % விலை அதிகமாக விற்கிறார்கள். விசாரித்தால் மாமூலாக வருபவர்களுக்குத் தெரியும் சார் என்று பதில் வந்தது. டெய்லி 4 ரூவா அதிகம் கொடுத்து மாமூலா பஜ்ஜி தின்றாங்களா என்று கேட்டேன். "சூடா பஜ்ஜி என்று நகர்ந்துவிட்டார்" மசால் தோசையும் இதே கொள்ளைதான். ஆனால் காபியும் டீயும் அதே ரூபாய் 5/- ஏன் 7 ரூபாய்க்கு விற்கவில்லை என்பது அவர்களுக்கே வெளிச்சம். 

ஹும்ம் - 8

வரும்போது தம்பியிடமிருந்து பல டாக்குமெண்டரிகளை காப்பி செய்து வந்தேன். பிபிசி மற்றும் நேஷனல் ஜியாக்ரபியில் காண்பிக்கப் பட்டவைதான் என்றாலும், Inside the Human Body, Bermuda Triangle மற்றும் பனாமா கால்வாயில் கப்பல்கள் செல்வது போன்றவைகள் எந்தவித விளம்பர் இடையூறும் இல்லாமல் பார்க்கும்பொழுது பிரமிக்க வைக்கிறது. குறிப்பாக ஹாங்காங்கில் கடலில் கட்டப்பட்ட விமான நிலையம் அங்கிருந்து நகருக்கு வரும் சாலைகள், கடலுக்கு அடியில் வரும் சுரங்க சாலைகள், மிக உறுதியான (டைபூன் எனப்படும் புயல்களை தாங்கக்கூடிய) தொங்கு பாலங்கள், மிகக் குறுகிய காலத்தில் (பிரிட்டிஷ், சீனாவிற்கு ஒப்படைப்பதற்குள்) கட்டி முடித்த விதம் என்று மிகவும் சிறப்பான ரசித்த டாக்குமெண்ட்ரியும் ஒன்று மேலதிக விவரங்கள். என்னது காமன் வெல்த்தும் கல்மாடியுமா? லூஸ்ல விடுங்க பாஸ் அதெல்லாம் மெகா சீரியல் கேட்டகிரி டாக்குமெண்ட்ரியில் வராது!

--

தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் நடத்திய மாடியில் தோட்டம் வளர்ப்பு பற்றிய ஒரு நாள் பயிற்சி வகுப்புக்குப் போயிருந்தேன். மிக பயனுள்ள தகவல்கள் கிடைத்தது.  நஞ்சில்லா காய்கறிகள், மலர்கள் மற்றும் அழகுச்செடிகள் வளர்ப்பு பற்றிய விளக்கங்கள் அறியக் கிடைத்தது. மாடியில் வெயிலை வெறுமனே அறுவடை செய்வதற்குப் பதிலாக, தேவைக்கேற்ப அழகான சிறிய தோட்டம் அமைக்கலாம். பாலிதீன் பைகள், மரச்சட்டங்களாலான அமைப்பில் கீரைகள் வளர்ப்பு, அழகுச்செடிகள் போன்றவை வளர்த்து சுவையான காய்கறிகளோடு, மனதிற்கும் உடலுக்கும் சுற்றுப்புறத்துக்கும் இதமான ஒரு சூழ்நிலை அமைக்க முடியும் - மனமிருந்தால் மார்கபந்து!! 

இதுமட்டுமில்லாமல் மூலிகைப் பயிர் வளர்ப்பு, மசாலா பொருட்கள், காளான் வளர்ப்பு, பால் பொருட்கள் தயாரிப்பு, சாக்லேட் தயாரிப்பு, உடனடி உணவுப் பொருட்கள் தயாரிப்பு, போன்சாய் செடி வளர்ப்பு என்று 23 தலைப்புகளும் அதற்கு மேலுமாய் பல பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ்களும் வழங்குகிறார்கள்.

மேலதிக விவரங்கள் வேண்டுவோர்:

பேராசிரியர் மற்றும் தலைவர்.
நகர்புற தோட்டக்கலை வளர்ச்சி மையம்,
புதிய எண்-44, 6-வது அவென்யூ, அண்ணா நகர்,
சென்னை - 600 040. தொ,பே - 26263484, 42170506. 

பல்கலைக் கழக இணைய தளம் : www.tnau.ac.in

 
--

மீண்டும் சந்திப்போம். நன்றி. :)

வெண்ணை (0.13 வாழ்வே மாயம்)


ஏங்க இதுக்குப் பேரு கொலு, ஆயுத பூஜைன்னெல்லாம் சொல்வாங்களே என்று கேட்டபோது, இல்லைங்க என்று சொன்னவர் விடுமுறை தின சிறப்பு பொம்மைகள் அடுக்குதல் மற்றும் அலங்காரம், அப்புறம் வாகனம் மற்றும் டூல்ஸ் பராமரிப்பு, மஞ்சள் கலர் பொடி, சிவப்பு பொடி மற்றும் பொரி தின்னுதல் அப்படின்னு பொழுது போக்கறோம் என்றார்.

எல்லா விடுமுறையிலுமா என்று கேட்டதற்கு 

இல்லீங்க வருஷத்துக்கு ஒரு முறை சிறப்பு விடுமுறைன்னு வரும் அப்ப மட்டும்.

அப்ப அடுத்த விடுமுறைக்கு என்றேன், 

வெடி மருந்தெல்லாம் பேப்பர்ல அடைச்சி பத்த வெப்போம் என்றார்.

‘அடங்கொன்னியா’ என்று நினைக்கும்போதே விடுமுறை தினச் சிறப்புத் திரைப்படங்கள் டிவியில் வரிசையாய் அணிவகுத்துக்கொண்டிருந்தது. 

மீசையைத் துடைத்துக்கொண்டு நகர்ந்தேன்.

--

மாட்டோட ’சுச்சா’வை (அதாங்க கோமியம்) செடிகளுக்கு விடுவதற்காக கலந்துகொண்டிருக்கும்போது சின்னவன் அருகேவந்து என்னப்பா இது என்று கேட்டான். பதில் சொன்னேன். நான் அன்னிக்கு வெண்டைச் செடிக்கு முன்னாடி ’மூச்சா’ போக போனதுக்கு திட்டினியே என்ற கேள்விக்கு ஞே என்று முழித்தேன். 

வேறொரு நாள் அவனே ஏதோ அண்ணனிடம் வில்லங்கம் செய்து என் அம்மாவிடம் மாட்டிக்கொண்டான். நேரே சாமி படத்திற்கு முன் நிற்க வைத்து சாமி இந்த குழந்தைக்கு நல்ல புத்தி கொடு என்ற என் அம்மாவை தடுத்தவன், ஏன் பாட்டி உனக்கு அறிவிருக்கா என்னிக்காவது இவங்க உன் கூட பேசி இருக்காங்களா இப்ப எதுக்கு அவங்களக் கூப்பிடற என்றவனை என்னிடம் கூட்டிவந்து கம்ப்ளெயிண்ட் செய்த என் அம்மாவிடம் சொன்னேன் “சத்தியமா அவன் ப்ளாக் எல்லாம் படிக்கறதில்லம்மா என்னை நம்பு”

திடீர் திடீர் என்று இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கே பதில் இல்லாத என்னிடம் போய்.....??.! (சொப்பன சுந்தரி காரெல்லாம் இல்லீங்க இது வேற :-)

--

ஹாலிவுட் பாலான்னு ஒரு மானஸ்தர் இருந்தார் திடீர்னு சொல்லாம கொள்ளாம அப்பீட் ஆயிட்டார். நானூத்தி சொச்ச ஃபாலோவர்ஸுக்கு ’நாமத்தையும், கல்லையும்’ போட்டதால செம காண்டுல இருக்கோம். ஒரு பெரிய ஆலமரம் தேடிகிட்டு இருக்கேன் கிடைச்சதும் ‘பஞ்சாயத்துதான்’.:)

--

ஆஃப் தி ரெக்கார்டா வலையுலகம் பற்றி எதுனா சொல்றீங்களா என்று பி.ப நண்பர் ஒருவர் கேட்டார். ரெக்கார்ட ஆஃப் பண்ணிடுங்க என்றேன். 

--

போன வாரம் காலை என் அம்மா படுக்கையிலிருந்து எழுந்து கிச்சனுக்கு நுழையும்போது ஒரு பாம்பு கிச்சனை நோக்கி சென்றிருக்கிறது. ஏற்கனவே நான் சொன்னதுபோல் நான் தற்பொழுது இருக்கும் இடம் பாம்புகள் கண்ணில் தென்படும் ஏரியா என்பதால், எப்பொழுது வீட்டின் எல்லைக்குள் அதைப் பார்த்தாலும் சத்தம் போட்டு கூப்பிடுங்கள் ஆனால் அது எங்கே போகிறது என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள் அதிர்வுகள் தவிர அதற்கு காது கேக்காது எவ்வளவு வேண்டுமானாலும் சத்தம் போடலாம். ஆனால் பதட்டப் படாமல் அது எங்கே செல்கிறது என்பது தெரிந்தால்தான் அதைப் பிடிக்க முடியும் என்று ஏற்கனவே வீட்டில் உள்ளவர்களைத் தயார் படுத்தி இருந்ததால், என் அம்மா சத்தம் போட்டு என்னைக் கூப்பிட்டதோடு சரியாக அது சென்ற இடத்தையும் சொன்னபடியால் மெதுவாய் ஒரு கொம்பு வைத்து அலசியதில் எலக்ட்ரிக் ரைஸ்குக்கர் அடியில் சுருண்டு படுத்திருந்தது. மெதுவாய் அழுத்தி தலையைப் பிடித்து (கையாலதாங்க) தெரு தாண்டி உள்ள ஒரு புதரில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தேன். சாரைப் பாம்பு குட்டி அது விஷமில்லாத வகை. பயந்துபோன அதன் இதய துடிப்பினை அதன் வாலைப் பிடிக்கும்போது நன்றாக உணர்ந்தேன். what a beautiful animal. விஷப் பாம்பை என்னால் இப்படிக் கையாள முடியாது அதற்காக அடிக்கவும் முடியாது. அதனைப் பிடிக்கும் அந்த ஸ்டிக் சென்னையில் பல இடங்களில் தேடிவிட்டேன் கிடைக்கவில்லை. :(

சரி இது என்னுடைய வீரசாகசத்திற்காக அல்ல. கிராமத்தில் சிகிச்சை அளிக்கும் டாக்டரிடம் பேசியபோது சிறியா நங்கை அல்லது கருந்துளசி வேலியோரம் வளர்த்தால் பாம்புகள் வராது என்றார் (அதை இனிமேதான் டெஸ்ட் பண்ணனும்). பாம்பு கடித்து வருபவர்களுக்கு நீங்க சிகிச்சை அளிக்கிறீர்களா? என்று கேட்டதற்கு இல்லை என்றவர் அதற்கான வசதிகள் சென்னை அரசு மருத்துவமனையில்தான் உள்ளது (40 கிலோமீட்டர்) அல்லது பக்கத்தில் 10 கிலோமீட்டரில் பச்சிலை மருந்து கொடுக்கிறார்கள் பெரும்பாலும் மக்கள் அங்கேதான் செல்கிறார்கள் என்றார். குணமாகிறார்களா என்று கேட்டேன் சிலர் குணமாகிறார்கள் பலர் இறக்கிறார்கள் என்றார் (அந்தச் சிலர் விஷமற்ற பாம்பு கடித்து மீண்டவர்களாக இருக்கலாம் - விஷமுள்ள பாம்புகளுக்கு ஆங்கில மருத்துவம் தவிர வேறு மாற்று இல்லை - நான் படித்தவரை) இதில் என்னைப் பாதித்தது இது போன்ற கிராமப் புரங்களில் பாம்பு கடிப்பது என்பது மிகச் சாதாரணமாக நடக்கிறது அதற்கான விழிப்புணர்வோ, முதலுதவி சிகிச்சை மையங்களோ 5 அல்லது 10 கிலோமீட்டருக்கு ஒன்று என்று அமைத்தால் மட்டுமே கடிபட்டவர்களைக் காக்க முடியும். அல்லது கிராமப் புரங்களில் சேவை செய்யும் மருத்துவர்களுக்கு அதற்கான சிறப்பு பயிற்சி அளிக்கலாம். மருந்துகள் வழங்கலாம். ஆனாலும் நான் கண்டவரையில் 1 கிலோமீட்டருக்கு ஒன்று என்று மையங்கள் அரசு திறந்திருக்கிறது பெயர் - டாஸ்மாக். 

அடுத்த அதிர்ச்சி தகவல் நிறைய வயதான பெண்கள் வாயில் வரும் புற்று நோயால் இறக்கிறார்கள் (வெற்றிலை, புகையிலை) :(

மஞ்சாகலர் மாத்திரைதானா ஊசி இல்லையா என்று கேட்ட பெண்மணியைப் பார்த்துவிட்டு என்னைப் பார்த்தார் டாக்டர். எனக்கு ஏனோ பதினாறு வயதினிலே சிரீதேவியும், அந்த பெரிய பெல்பாட்டம் கண்ணாடி போட்ட டாக்டரும் நினைவுக்கு வந்தார்கள். (கூடவே நம்ம மரு.ப்ரூனோவும்:-) 

--

நான் பல ஆண்டுகளாகவே மைக்ரேன் (ஆமாங்க ஆமாம் அந்த பாழாப் போன ஒத்தத் தலவலிதான்) கிளப் ஆயுட்கால உறுப்பினர். இப்பொழுது பேக் பெயின் மற்றும் மணிக்கட்டு வலி (நம்புங்கப்பா வயசு 38தான்) க்ளப் மெம்பர்ஷிப்புக்கு ரெகுலராக அழைப்பு வரவே அதே கிராமத்து டாக்டர் அக்குபங்சர் ட்ரை பண்ரீங்களா? என்றார். சரி என்று மைக்ரேனுடன் விடிந்த ஒரு நாளில் அக்குபங்சரை சோதிக்கக் கிளம்பினேன். சிறிய தலைமுடியை விட மெல்லிய அளவிலான ஊசிகள் கொண்டு அக்கு பாயிண்ட்ஸ் எனப்படும் அவர்கள் கற்றறிந்த இடங்களில் கை கால் தலை குத்தி ஒரு அரை மணி நேரம் அமர வைத்தார். ரைட் போயிட்டு நாளைக்கு வாங்க என்று அவர் சொல்லும்போதே மைக்ரேன் நின்று விட்டிருந்தது. ஆச்சர்யம். மணிக்கட்டு வலி மற்றும் கழுத்து வலியெல்லாம் போயே போச்ச்..  4000 வருட சிகிச்சை முறையாம் பெயின் கில்லருக்கு பதில் ட்ரை பண்ணிப் பாருங்க நண்பர்களே முக்கியமா மைக்ரேன் மெம்பர்ஸ்.   

--

என்னுடைய காமினி தொடர்கதைகளுக்கும், போன இடுகைக்கும் பின்னூட்டமிட்டு வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் 

நன்றி 

நன்றி

நன்றி. :))  
  
.

பேக் வித் எ பேங்........!!

.



மாத்திரை போட்டேன் டாக்டர்

என்ன மாத்திரை ?

மாத்திரை பேரு சட்னு நியாபகம் வரல டாக்டர். நீங்களும் போடனும் புது உலகமே விரியும். எல்லார் உடம்பிலையும் மனசுன்னு ஒன்னு படம் காமிக்குமே இங்கே உடலே மனசாகிப் பறக்கும். பூமியெல்லாம் பஞ்சுப் பொதிபோல நீங்களும் ஒரு பஞ்சின் இழைபோல பறப்பீர்கள் டாக்டர். ட்ரை பண்றீங்களா?

ரூபன் அதெல்லாமே ஒரு இல்லூஷன். நீங்க சாப்பிட்ட மாத்திரை என்பது ஒரு லாகிரி வஸ்து. ட்ரக் அது மூளையைக் குழப்பமடையச்செய்யும் ஒரு வகையான கெமிக்கலா இருக்கலாம்.. ஹெல் லாட் ஆஃப் சைட் எஃபெக்ட்ஸ் உங்க உடம்ப நாசம் பண்ணிடும். ஒரு ஐஐஎம் டாப்பர் நீங்க ஏன் இதெல்லாம் எடுத்துக்கனும்.

களவும் கற்று மற டாக்டர். ஸ்கூல் படிக்கும்போது பாங்கு போட்டிருக்கேன். பச்சையா சின்னதா கோலிகுண்டு சைஸ்ல ஒரு நார்த் இன்டியன் பீடாகாரன் கொடுத்தான். என்னய்யா இதுன்னா சிவபிரசாதம்ன்னான். உண்மையிலேயே அன்னிலேர்ந்துதான் சிவனையே எனக்கு ரொம்பப் பிடிச்சிப்போச்சு. பால்கோவால வெச்சி ஒரு உருண்டை சாப்ட்டா போதும் அவதார் மாதிரி ஒரு திவ்ய தேசம் ஒரு 24 மணி நேரம் காரண்டி. 

ஓக்கே. நவ் லிசன் ரூபன். மனித வாழ்க்கையில் முழித்துக்கொண்டு செயலாற்றுவது என்பது ஒரு குறுகிய காலம்தான். அதை இப்படியெல்லாம் போதையில் கழித்தால் அதுவும் இவ்வளவு சின்ன வயசுல டூ பேட். என்னால நல்ல மருந்துகள் கொடுத்து ட்ரீட்மெண்ட் தர முடியும். ஆனா உங்க ஒத்துழைப்பு என்பது இல்லாமல் எந்த மருந்தும் வேலை செய்யாது. 

டாக்டர் சந்தோஷம்தானே வாழ்க்கை. எல்லாருமே அதற்குத்தானே வாழ்கிறார்கள். எனக்கு இதுதான் சந்தோஷம் இதிலென்ன தப்பு. 

நியாயப் படுத்தி பேசனம்னா என்னவேணாலும் பேசலாம் ரூபன். சீரியல் கொலைகாரனுக்கு கொலை செய்வது சந்தோஷம். அதற்காக அதையும் உங்க நியாயப் படுத்தலில் சேர்த்துக்குவீங்களா? யோசியுங்க. இங்கே சந்தோஷம் என்பது நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையுமாக இருக்கனும். 

பட் டாக்டர் ஐ ஆம் பர்ஃபெக்ட்லி ஆல்ரைட். நான் யாரையும் துன்புறுத்தவில்லை. ஐ ஆம் ஹார்ம்லெஸ். ஜஸ்ட் லிவிங் மை லைஃப்.

யூ ஆர் ராங். உங்களால உங்க ஃப்ரென்ட்ஸ் பாதிக்கப் பட்டிருக்காங்க. அவங்க பேரன்ட்ஸ் நொந்து போய் இருக்காங்க. யூ அல்மேஸ்ட் கில்ட் ஒன் ஆஃப் தெம் யூ நோ.

வாட் யூ மீன் டாக்டர்.


சீ ஹியர் என்று டாக்டர் எனக்கு முதுகு காட்டிக்கொண்டிருந்த கம்ப்யூட்டர் மானிட்டரைத் திருப்பினார். CAM09 என்ற ஒரு சதுரம் செவ்வகமானது, ஒரு பெண் முகத்தில் மாஸ்க், ஆங்காங்கே ஒயர்கள்  பொருத்திக்கொண்டிருந்தார் ஒரு டாக்டர் காமரா சூம் செய்ய யார்? ஓ மை காட் காமினி

யார்னு தெரியிதா? 

டாக்டர் இது காமினி யெஸ்

அவளுக்கு என்னாச்சி என்று நான் கேட்டுக்கொண்டிருக்கும்போதே அவள் ரூமிலிருந்து டாக்டர் வெளியேறினார். 

ஒஹ் காட் டாக்டர் அவள காப்பாத்தனும் ஏன் குதிக்கறா

இது ஒரு வகையான சைட் எஃபெக்ட் எல்லாம் நீங்க அவளுக்குத் தெரியாம கொடுத்த ட்ரக்கோட விளைவுகள். பட் காமினிய குணப் படுத்திடலாம் ரொம்ப மைல்ட் சிசி தான் உள்ல போயிருக்கு.

ஆனா அவ டிப்ரெஷன்ல இருந்தா டாக்டர். அவங்க மாமாவும் அவர் பையனும் அவளோட சொத்துக்காக அவள டார்ச்சர் பண்ணிகிட்டு இருந்ததா என்கிட்ட சொன்னா. நான் ட்ரக்ஸ் யூஸ் பண்றது அவளுக்குத் தெரியுமே.

யா ஒரு வகையில அவளுக்கு டார்ச்சர் கொடுத்த ரெண்டு பேரையும் நீங்க கொடுத்த ஏதோ ட்ரக்ஸ அவங்களுக்கு கொடுத்து காமினி அல்மோஸ்ட் தன்னைக் காப்பாத்திகிட்டா.. கெட்டதிலயும் ஒரு நல்லது..

புரியல டாக்டர்

டாக்டர் மீண்டும் வேறொரு கேமராவினை மானிட்டரில் காண்பித்தார்

இரண்டு தனித்தனி ரூமில் காமினியின் மாமா பரந்தாமனும், அவர் மகன் சிவாவும்

 
சிவா சுவற்றைப் பார்த்து உட்கார்ந்திருந்தான். காமினியின் போட்டோ ஒன்று அங்கே இருந்தது. கைவிரல்களால் துப்பாக்கி செய்து..


அடுத்த பக்கத்தில் மாமா பரந்தாமன் சிரசாசனம் செய்து கொண்டிருந்தார். ஊசியுடன் நர்ஸ் வருவதைப் பார்த்து ..

ஹா ஹா நான் சத்தம் போட்டு சிரித்தேன். 

உங்களுக்கு இதெல்லாம் தமாஷா இருக்கா ரூபன்..

எக்ஸாட்லி டாக்டர்

வாட் யூ மீன்

ஐ மீன் அந்த மாத்திரை பேர் கேட்டீங்களே அதான் டாக்டர் அது

எது

தமாஷ்.. தமாஷ் மாத்திரை அதுதான் அது பேரு. ஹா ஹா 

டாக்டர் இண்டர்காமை எடுத்து நர்ஸ் கம் டு மை ரூம் என்றார்.

எனக்கு டாக்டர் ரூமிலிருந்த சிவபெருமான் படம் கொஞ்சம் கொஞ்சமாய் அவுட் ஆஃப் போகஸ் ஆகிக்கொண்டிருந்தது.

(தலைப்பு டிஸ்கி: சரியான முதுகு வலி அதான். வேறெதுனா நினெச்சீங்கன்னா கம்பெனி பொறுப்பல்ல. ஆயுத பூஜைக்காவது பட்டறைக்கு பூஜை போடனுமில்லையா அதுக்குத்தான் இந்த இடுகை.  நண்பர்கள் எல்லோருக்கும் நாளைமுதல் பின்னூட்ட டொக் டொக் ஆரம்பம் :)
(போட்டோ டிஸ்கி : ஹி ஹி..:-)


.