பலா பட்டறை: 11/01/2009 - 12/01/2009

பட்டறை கவிதைகள்







மனக்காயம்
மறைக்க
மனிதர்கள் கடற்கரையில்
அங்கு
சுவடுகள் கோடி..
பாவம்
கடற்கரைக்கு..
காயம்..






புழுதியிலும்
சகதியிலும்
வீணாய் அலைந்து திரியாதே
காற்றே.....
கேள்
அதிலென் பிரியமானவளின்
மணமிருக்கிறது மறக்காதே..










எவனோ எழுதிய காதல் கடிதங்கள் - பாகம் ஒன்று!!!






²ý ±ý¨É ¯ý º§¸¡¾¡¢Â¡ö ¿¢¨ÉòÐôÀ¡÷ì¸ ¯ýÉ¡ø ÓÊÂÅ¢ø¨ÄýÛ §¸ð¼¡ö þø¨Ä¡. þÐ ±ôÀ§Å¡ ±ÉìÌûÇ §¾¡½¢îÍ §ÅÈ Å¢¾Á¡ «ôÀ ±Ø¾¢É¾ þÐħ ±Ø¾¢ þÕ째ý. «ôÒÈõ §¸ûÅ¢ ¸‰¼Á¡É, ºí¸¼ÀÎò¾È §¸ûÅ¢ ܼ. þÐìÌ º¡¢Â¡É (±ýÛ¨¼Â) À¾¢¨Ä ¾ÃÛõÉ¡...

±øÄ¡¨ÃÔõ Áɺ¡Ã º§¸¡¾¡¢Â¡ ¿¢¨Éì¸ÈÐìÌ ´Õ ¿øÄ ÁÉÍ §ÅÏõ, «Ð ±ýÉ¢¼õ þø¨Ä «øÄÐ «ó¾ «Ç×ìÌ Å¢§Å¸õ þø¨Ä ÀìÌÅõ þø¨Ä..

þýÛõ §Á§Ä ±Ø¾¢ þÕì¸ÈÐ ±øÄ¡õ ŠÅ¡ ÀÊì¸Ä.. °ÕìÌ §À¡ÈÐìÌ Á¢ó¾¡¿¡û «Å Åó¾ôÀ ܼ ¸¡ð¼ ÁÈóÐ §À¡îÍ..±í¸ ¾í¸ §À¡Èý ±ýÈ þ¼§Á ¦¾¡¢Â¡¾§À¡Ðõ þÐ ¦À¡¢Â À¢¡¢× þøľ¡ý, þÕó¾¡Öõ ÓÊÂø, ¦ÃñΧÀÕìÌõ.. ±ýÉ¡Ä ¿¢îºÂÁ¡ ÓÊÂÄ (ŠÅ¡ ìÌõ «ôÀÊò¾¡ý ±ýÚ ¿¢¨É츢§Èý)

Á¾¢Âõ ¦º¡ýÉÀÊ ÅóÐ Àì¸òÐÄ ¯ð¸¡÷ó¾Ðõ (§º ¸¡¾Ä¢ýÛ ¦ÅǢ ¿¼ìÌõ§À¡Ð¾¡ý ¦¾¡ýÚ¸¢ÈÐ «Ð×õ º¢Ä ºÁÂõ ¾¡ý..ÁüÈ §¿Ãõ ±øÄ¡õ Á¨ÉÅ¢ ±ýÈ ÓØ «¾¢¸¡Ãò¦¾¡¼§Â ÀƸȡ Á¡¾¢¡¢§Â feeling. þó¾ ÅÂÐìÌ ¿¡ý þôÀÊ ±Ø¾Ä¡Á¡ýÛ ¦¾¡¢ÂÄ ¬É¡ þо¡ý ¯ñ¨Á.) ¿¢¨È §¸ûÅ¢ §¸ð¼¡û þôÀÊ ¬Â¢Ê «ôÀÊ ¬Â¢Ê ±ýÉ ¦ºö ' ±ý ¸¡¾Ä¡ýÛ'? §¸ð¼¡û. ±øÄ¡òÐìÌõ ±ý§É¡¼ ÁɺȢïÍ À¾¢ø ¦º¡øÄ¢ þÕ째ý. ²Èį̀È ±í¸§Ç¡¼ ±¾¢÷¸¡Äõ Àò¾¢ ´ÃÇ×측ÅÐ þó¾ ºó¾¢ô§À¡Ð¾¡ý §Àº¢ þÕ§ÀýÛ ¿¢¨É츢§Èý.

ÀÂÁ¡ þÕ측ýÛ? §¸ð¼¡. ±ùÅÇ× ¿¢ÂÂÁ¡É §¸ûÅ¢? ÀÂõ ÅÕÐ.. ¬É¡ ÀÂÓõ ¿øÄÐì̾¡§É «ôÀ ¾¡§É ¦¾Ç¢§Å¡¼ ´Õ ¦ºÂøÄ Óý¦É¢ì¨¸¦Â¡¼ ¦ºÂøÀ¼ ÓÊÔõ.

«ÅÙ¨¼Â Photo-¨Å «Å¨Ç ±ÎòÐ Åà ¦º¡øÄÅ¢ø¨Ä «ÅÇ¡ö ±ÎòÐ Åó¾¢Õó¾¡û, ±ÉìÌõ ¦ÅñΦÁýÈ ¿¢¨ÉôÒ Áɾ¢Ûû þÕó¾Ð, þô§À¡ «Å ±ÎòÐ Åó¾¢Õó¾Ð ¦ÃñÎ ¦ÀÕõ ´òÐ §À¡È Å¢„Âõ ±§¾îºÂ¡ þÕì¸Ä¡õ þÕó¾¡Öõ ÁÉÍìÌ ¦Ã¡õÀ þÉ¢¨Á¡ö þÕìÌ, þôÀʧ ´§Ã Å¢¾Á¡ö º¢ó¾¢îÍ, ¸¡¡¢ÂòÐÄ þÈí¸¢ ¦ÅüÈ¢ ¦ÀüÚ, Å¡úóÐ ¸¡ð¼Ûõ.

À¢¡¢×ýÛ ´ñÏ («Ð ±ùÅÇ× º¢È¢Â¦¾ýÈ¡Öõ) ¿¢îºÂÁ¡ö ¦¾¡¢ó¾ À¢ýÒ ¦¾¡Î¾Öõ, §ÀîÍõ, ¦ºÂÖõ ±ùÅÇ×¾¡ý Á¡È¢ô§À¡öŢθ¢ÈÐ. ¦ÃñΧÀ¡¢Û¨¼Â ¸ÕòÐì¸û ܼ ±ùÅÇ× ¯ýɾÁ¡ö ´ýÚ §º÷¸¢ÈÐ..

±ÉìÌõ ¸É׸û þÕìÌ. ±ÉìÌ  Á¨ÉŢ¡ö ÅÃô§À¡ÈÅ¨Ç ±ôÀÊ ±ôÀÊ ¦ÅîÍì¸ÉõÛ ¸É׸û þÕìÌ. But þôÀ þž¡ý Á¨ÉŢ¡ö ÅçÀ¡È¡ýÛ «Â¢ð¼ «ôÒÈõ «Å¨Ç º£È¡ðÎõ ¸É× Åó¾¡Öõ,  «ó¾ ¸É׸Ù측¸ ¿¡ý ¦¸¡Îì¸ô§À¡Ìõ Å¢¨Ä ±ýÉ? ±ýÉ ±ùÅÇ× ¸¡Äõ? ±íÌ? ¡¡¢¼ò¾¢ø? ±ô¦À¡Ð ¸É׸û «ó¾ ¸É׸û ¿¢¨ÉÅ¡Ìõ ±ýÈ ¦¸ûŢ¢ø ¸É¨Å ¿ÉÅ¡ì¸ ¦Åñʾ¢ý ¸ÊÉõ Ò¡¢óÐÅ¢ð¼Ð, «¾÷측¸ ¸ÉÅ¢¨É ¿ÉÅ¡ì¸ ¿Øמý «º¢í¸Óõ Ò¡¢óÐÅ¢ð¼Ð.  

இன்றைக்கு என்ன விஷம் உண்டீர்கள்?






ஒரு நாள் உணவை பரிசோதித்தால் மேற்கண்ட வினாவிற்கு விடை நிச்சயம் கிடைக்கும். காணி நிலமோ கை அளவு நிலமோ ஒரு நூலிழை இடம் விடாமல் சிமெண்ட் கொட்டி வீடு என்னும் கூண்டை கட்டுவதனால் பயனேதும் இல்லை. கிடைக்கும் சிறு இடங்களில் சின்ன சின்ன காய் கறி செடிகளை தொட்டியில் நட்டு பராமரித்தால் அன்றாட சமையலுக்கு உபயோகமாவதோடு, கைக்காசு கொடுத்து விஷம் வாங்கி உண்பதும் தவிர்க்கப்படும் இல்லையா? 

விதைப்பதுதானே கிடைக்கும், நஞ்சு கொண்டு விளைவிக்கும் பயிர்கள் எல்லாமே நமக்கு அமுதையா தருகிறது? இயற்கை விவசாயம் என்று தமிழில் எழுதினாலே பக்கத்தை புரட்டி சினிமா செய்திகளுக்கு மேயப்போகும் நமக்கு அமுதம் விளைவித்து door delivery யார் செய்வார்கள்? 

சுற்றுச்சூழலுக்கும், வீட்டுச்சூழலுக்கும் நலம் தரும் இதனை ஒரு குழந்தை வளர்ப்பது போல கருத்தாய் செய்தால் நமக்குதானே லாபம். விவரங்கள் அறிந்து கொள்ள முயற்சி செய்வோம், புத்தகங்கள் மற்றும் தெரிந்தவர்களை கேட்போம். சிறியதோ பெரியதோ நமக்கென ஒரு சிங்கார தோட்டம் அமைப்போம். நஞ்சை தவிர்த்து நல்லதை உண்போம்.           

        

புற முதுகு மருத்துவம்




இப்பொழுது விற்கப்படும் பெரும்பாலான இரு சக்கர வாகனங்கள் அதன் விளம்பரத்திர்கேர்ப்ப தரமானதாய் இருப்பதில்லை, அதிலும் நம் ஊரிலுள்ள சாலைகளின் நேர்த்திக்கு, வெகு சீக்கிரமாகவே இருக்கும் கொஞ்ச நஞ்ச தரமும் போய் விடுகிறது. 99 சதவிகித மக்களுக்கு முதுகு வலி கழுத்து வலி வந்து அவதிப்படுகிறார்கள். பிசியோ தெரபிஸ்டுகளை போய் பார்க்கவேண்டும் என்ற எண்ணமே பலருக்கு இருப்பதில்லை, பொது மருத்துவரால் இத்தகைய பிரச்சனைகளுக்கு உதவ முடியாது, அவர்கள் வெறும் வலி நிவாரணிகளை தந்து அப்போதைக்கு வலி இல்லாமல் செய்கிறார்களே தவிர்த்து, நிரந்தர தீர்வு என்பது பிசியோ தெரபிஸ்டுகளால் தரமுடிகிறது. மேலும் மருந்தில்லா மருத்துவம் என்னும் மிக அற்புதமான வலி நிவாரண முறை இவர்களுடையது.

முதுகு வலியை தவிர்ப்பதற்கு இவர்கள் சொல்லும் சில எளிய வழிமுறைகள்:

அ)  உட்காரும் முறை சரியாக இருக்கவேண்டும். 
ஆ) பான்ட் பாக்கெட்டில் (பின் பக்கம்) பர்ஸ் வைத்திருந்தால் கூட உட்காரும் முறை மாறுதலுக்கு உள்ளாகி வலி வர வாய்ப்புண்டு.
இ)  வண்டியில் உட்கார்ந்து ஓட்டும் முறையும்  சரியாக இல்லாவிடில் வலி ஏற்படும். 
ஈ)  உடல் வலி மற்றும் கால் வலிகளுக்கு பெரும்பாலும் வைட்டமின் குறைபாடே காரணம் தேவையான அளவு விட்டமின்களை உணவு மூலமாகவோ மாத்திரை மூலமாகவோ உட்கொள்ளும்போது வலி  
      மறைகிறது.      
உ) கால் வலிகளுக்கு முட்டி வரை மூழ்கும் அளவுக்கு பாத்திரத்தில் தாங்கக்கூடிய அளவுக்கு சுடு தண்ணீரில் உப்பு போட்டு 30 நிமிடம் வரை வைத்து எடுத்தால் வலி குறையும். 
ஊ) பின் பக்கம் முதுகு தண்டு வடங்களுக்கு ஐஸ் ஒத்தடம் குடுக்கலாம், வெந்நீர் பை களை கொண்டும் ஒத்தடம் குடுக்கலாம். 
எ)  stretching எனப்படும் சிறு சிறு உடற் பயிற்சிகள் வலியிலிருந்து காக்கும்.
ஏ) உடற் பயிற்சிகளை தினந்தோறும் செய்து வரவேண்டும். கண்டிப்பாக பிசியோ தெரபிஸ்டுகளால் அறிவுறுத்தப்படும் அளவிலேயே செய்யுங்கள். 

உடல் வலிகளுக்கு துவக்க காலத்திலேயே வலி நிவாரணிகளை தவிர்த்து, பிசியோ தெரபிஸ்டுகளை பார்ப்பது நிச்சயம் பயன் தரும்.

  
    


வெறி நாய் துரத்தும்போது என்ன செய்வீர்கள்?






என்ன இது கேள்வி? என்று நினைக்கிறீர்களா? ஆம் எல்லோருமே ஓடத்தான் செய்வோம் அனால் சற்று யோசித்து பார்க்கும்போது சாதாரணமாய் ஓடுவதற்கும்ஒன்று  நம்மை துரத்தும்போது ஓடுவதற்கும் நிறைய வித்யாசம் இருக்கிறதில்லையா? வாழ்க்கையில் இலக்கு கூட அது போன்றதுதான்.. 

இலக்கு ஒன்று. 
இங்கே ஆங்கிலத்தில் பேசுவது பெரிய விஷயமாய் பார்க்கப்படுகிறது.. அனால் தவறாகிவிடுமோ என்று கவலைபட்டே பலர் அந்த பேசும் இலக்கை தவிர்த்து விடுகிறார்கள். ஒவ்வொரு நாட்டிலும் அவரவர் இஷ்டப்படி கவலயே படாமல் புகுந்து விளையாடும் ஆங்கிலத்தில் நம் மக்கள் மட்டும் கூச்சப்பட்டே பேச தவிர்கிறார்கள். கவலைப்படாமல் பேச கற்றுக்கொண்டால் நாளடைவில் சுலபமாகிவிடும். ஆங்கில படங்கள். செய்தி வாசிப்புகள், ஆங்கிலத்தில் பேசுபவர்களுடைய உச்சரிப்பு கூர்ந்து கவனிக்க அது சுலபமாய் பிடிபட்டு போகும். நீங்கள் கவிதையோ, காவியமோ படைக்க நினைத்தால் இலக்கணம் பற்றி அதிகம் கவலை படலாம் (தாய் மொழி இலக்கணம் கரைத்து குடித்திருந்தால்)வெறும் பேச்சு பரிமாற்றத்திற்கு கவனிக்கும் ஆற்றல் இருந்தாலே போதும். மேலும் நான் கண்டவரை இங்கு பெரும்பாலும் ஆங்கிலம் பேசுபவர்களுக்கு அதன் புலமை மிகவும் கம்மிதான். மேலும் ஆங்கிலம் பேச கற்றுகொடுக்கும் புத்தகங்கள் மேலும் அயர்ச்சியையும், சோர்வையும் தருமே தவிர்த்து வேறு பெரிய பயன்கள் இல்லை.                   

இலக்கு இரண்டு:

பணம் சம்பாதிக்க கற்றுக்கொடுக்கும் அளவுக்கு, நல்லபடியாய் செலவு செய்ய மற்றும் சம்பாதித்த செல்வத்தை வைத்து என்ன செய்வது என யாரும் கற்றுகொடுப்பதில்லை. எனக்கு 
உள்ள மிகபெரிய ஆச்சர்யம் இதுதான் (சந்தேகமும் கூட) திடீரென்று நமக்கு ஏதோ ஒரு வகையில் ஜாக்பாட் அடிக்கும்போது உடனடியாய் அதைவைத்து அடுத்து என்ன செய்வது என்ற திட்டமிடல் இருக்கிறதா? திடீரென செல்வம் கிடைக்கும் பலர், குறுகிய காலத்திலேயே அதனை இழந்து பழையபடி நிற்பது பெரும்பாலும் நடக்க காரணம், சம்பாதிப்பது போல அதற்கான கனவுகள் போல, சரியான செலவிற்கான திட்டங்கள் / கனவுகளை யும்  வளர்த்துக்கொள்வோம்.

இலக்கு மூன்று:

இலக்கு இரண்டு போலவே தான் ஆனால் நாம் யோசிக்க தவிர்க்கிற விஷயம் இது. இருக்கும்போது எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்யும் நாம், திடீரென்று இவ்வுலகை பிரிந்தால் அடுத்தது என்ன என்று யோசிக்க தயங்குகிறோம். வாழ்ந்து முடிந்த காலத்திற்கு பிறகு உயில் எழுதுவது பற்றி அல்ல இது. இளமையில் வலிவு உள்ளபோது நம்மை நம்பி உள்ள குடும்பத்தை நாமில்லை எனில் யார் காப்பற்றுவார்கள் என்ற கணிப்பை எண்ணிப்பார்த்திருக்கிறோமா என்ற கேள்வி. யோசித்து பாருங்கள் திடீரென்று நாம் மறைந்தால் நம் குடும்பத்திற்கு நம்மை போலவே எல்லாம் செய்ய யார் யார் உள்ளனர் என்ற list நம்மால் சரியாக தர முடியுமா? மிக குறைவான சாலை பாதுகாப்பு விதிகளையே பல்வேறு சாக்கு போக்கு சொல்லி வெறுப்பு கொள்ளும் நாம் அவை நம் நல்லதிற்குத்தான் என எண்ணி பின் பற்றுகிறோமா? காப்பீடும் இன்ன பிற வசதிகள் இருந்தாலும், நான் இல்லை எனில் என்ன செய்வாய் என நம்மை நம்பி இருப்பவர்களுடன் ஒரு தயார் படுத்துதல் தேவை தானே.  என்ன செய்ய வாழ்க்கை முழுதும் வெறி நாய் துரத்திக்கொண்டு தான் இருக்கிறது? முடிந்த வரை கடிபடாமல் ஒடப்பழகுவோம்.                  
   
            

ஜுரத்திற்கு நன்றி சொல்வோம்






ஹைபோதலாமஸ் - ம் - குளிர் ஜுரமும்.

ஜுரம் வந்தால் ஏன் உடல் சூடாகிறது? ஏன் குளிர்கிறது? உடல் நடுங்குகிறது? இவை எல்லாவற்றிற்கும் மிக முக்கிய காரணம் - மூளையின் நடு பகுதியான ஹைபோதலாமஸ் கிட்டத்தட்ட நம் உடலின் air condition என்று கூட சொல்லலாம். சாதாரணமாக நமது உடலின் வெப்ப நிலை  98.6 பாரன்ஹீட்  ம் அல்லது 37 டிகிரி செல்சியஸ் (கொஞ்சம் கூட குறைய) இருக்கும் இதனை பராமரிப்பது ஹைபோதலாமஸ் தான். ஏதாவது கிருமிகளால் நோய் தொற்று ஏற்படும்போது சில ரசாயனங்கள் நம் உடலில் ரத்தத்தின் மூலமாக பரவும்போது ஹைபோதலாமஸ் இதனை கண்டுகொண்டு மெதுவாக நம் உடலின் வெப்பத்தை 98.6 லிருந்து  102 டிகிரி பாரன்ஹீட் ஆக அதிகரிக்க செய்கிறது. இப்படி உடல் சூட்டை அதிகரிக்க செய்வது மூலம் உள்ளே நுழைந்த வேண்டாத விருந்தாளியை சமாளிக்கலாம் என்பது அதன் திட்டம்.

ஹைபோதலாமஸ் உடல் சூட்டினை ஏற்றிய உடனேயே உடல் குலுங்க ஆரம்பிக்கிறது (குளிர் ஜுரம் மற்றும் உடல் நடுங்குதல்) ஏன்? உடலை உடனடியாக சூடு படுத்தத்தான் அதனால் தான் நமக்கு எத்தனை கம்பளி போர்த்தினாலும் குளிரும் நடுக்கமாகவுமே இருக்கிறது. ஹைபோதலாமஸ் கட்டளை இட்ட அந்த உடல் சூடு (அதாங்க ஜுரம்) உடலுக்கு வந்த உடனேயே உடல் நடுங்குவதும் குளிர் எடுப்பதும் நின்று போய் விடுகிறது.

யோசித்து பாருங்கள் இந்த ஜுரம் ஒன்றுதான் நாம் நோய் பட்டிருக்கிறோம் என்பதற்க்கான அறிகுறி, உடனே உடலை கவனிக்க நமக்கு ஹைபோதலாமஸ் இடும் மறைமுக கட்டளையும் இதுதான். உண்மையில் ஜுரம் என்பது நோய் அல்ல அது உடலில் நமக்கு தெரியாமல் நுழைந்துவிட்ட நோய் கிருமி பற்றிய எச்சரிக்கை தான்.

முக்கியமாக குழந்தைகளுக்கு ஜுரம் வரும்போது உடனடியாக Paracetamol Ibuprofen போன்ற மருத்துவர் சிபாரிசின் அடிப்படையில் உள்ள மருந்துகளை கொடுத்து ஜுரம் நிப்பாட்டுவோம். ஆனால் உண்மையில் இவ்வகை மருந்துகள் நம்முடைய ஹைபோதலாமஸ் க்கு ஜுரம் ஏற்படுத்த வேண்டாம் என்ற கட்டளையை தான் கொடுக்கிறது. ஆனால் ஜுரம் வந்த குழந்தையை மருந்து குடுக்காமல் தாமத படுத்தும்போது அதற்கு வலிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது எனவே எப்போதும் ஜுரத்திர்க்கான அறிகுறி தெரியும்போதே என்ன மருந்து கொடுத்து அழைத்து வருவதென்று டாக்டரிடம் கேட்டு வைத்துக்கொண்டு அந்த மருந்தை கையிருப்பில் வைத்துகொள்வது  நல்லது. ஜுரம் வந்தவர்களுக்கு அதிக அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும், ஜுரத்தால் வற்றிய உடம்புக்கு தண்ணீர் மிகவும் முக்கியம், நிறைய தண்ணீர் குடிப்பது ஜுரத்தை உடனே கட்டுக்குள் கொண்டுவர உதவும். அதேபோல உடலை பல துணிகள் கொண்டு போர்த்தாமல் ஓரிரு பெட்ஷீட் கொண்டு போர்த்தினாலே போதுமானது.

அதிமுக்கியம் உடனே மருத்துவரை சென்று பார்ப்பதுதான். போனமுறை டாக்டர் கொடுத்த மருந்தை இந்த முறையும் குடுக்க கூடாது ஏனென்றால் அதற்குள் அந்த மருந்துக்கு நோய் கிருமிகள் எதிர்ப்பு சக்தி பெற்று விடுவது தான். சிந்தித்து பாருங்கள் H1N1 எனப்படும் பன்றி காய்ச்சல் நோய்க்கு Tamiflu என்ற மருந்து பரிந்துரை செய்யப்பட்டும் எல்லோரும் இஷ்டம் போல பயன் படுத்த தடை ஏன் விதிக்கப்பட்டது? அந்த நோய் உங்களை தாக்குவதற்கு முன்பே அந்த மருந்தை  நீங்கள் உட்கொள்வதன் மூலம் தேவையற்ற ஒரு எதிர்ப்பு சக்தி உங்கள் உடலுக்கு கிடைக்கிறது. H1N1 தாக்கும்போது Tamiflu தவிர்த்து  வேறு மாற்று மருந்துகள் இல்லாததால் அந்த நோய் மரணத்தில் கொண்டு விட வாய்ப்புள்ளது.

பொதுவாகவே நாம் போட்டுக்கொள்ளும் தடுப்பூசிகள் எல்லாமே வீரியம் குறைக்கப்பட்ட கிருமிகள் தான். எந்த நோய் வரக்கூடாதென்று நாம் தடுப்பு ஊசி போடுகிறோமோ அந்த நோய் உண்டாக்கும் கிருமிகளை வீரியம் குறைக்க செய்து நம் உடலில் தடுப்பூசியாக போடுகிறார்கள். இதனால் மூளைக்கு ஒரு செய்தி சொல்லப்படுகிறது மேலும் உடலின் எதிர்ப்பு சக்தி வீரியம் குறைக்கப்பட்ட இந்த அழையா விருந்தாளியை நினைவில் வைத்துக்கொண்டு அடுத்தமுறை அந்த கிருமி தாக்கும்போது உடனே கண்டுணர்ந்து அதனை அழித்து நம்மை காக்கிறது.              

 படித்தவர்கள், படிக்காதவர் என்றில்லாமல் அதிக ஜுரத்தால் வலிப்பு வந்து பேச்சு மூச்சற்று கிடக்கும் குழந்தையை பார்த்து அலறி அடித்து மருத்துவ மனை வரும் பெற்றோர்களை பார்க்க நேர்ந்த போது நான் தேடி சேகரித்த தகவல்கள் தொகுப்பு இது.
       

ஆடம்பர திருமணங்களும் பெண் குழந்தை வெறுப்புகளும்








திருமணங்கள் அவரவர் வசதிக்கேற்ப எளிமையாகவும் ஆடம்பரமாகவும் பல விதங்களில் நடத்தப்படுகிறது. அநேகமாய் எல்லா மதத்திலும் இதற்கு விதிவிலக்கில்லை. உறவினர்கள் கூடி, மகிழ்ச்சிகளின் சங்கமத்தில் ஒரு ஆணும் பெண்ணும் கூட்டாய் ஒரு வாழ்க்கை நடத்த செய்யப்படும் அந்த திருமண நாளில் அவர்களுக்கு சிக்கனத்தை போதித்து சிறப்பான வாழ்வு சொல்லிதருகிறோமா என்றால் பெரும்பாலும் இல்லை என்றே சொல்ல தோன்றுகிறது. 

இப்போதெல்லாம் ஆடம்பரமும், பகட்டும், ஒப்பீடுமே திருமணங்களில் கோலோச்சுகிறது.. வாழ்க்கையில் ஒருநாள் வரும் திருமணத்தில் என்ன கணக்கு பார்ப்பது என்ற எண்ணமும் ஆடம்பரத்தின் வேர்களுக்கு உரமாகிவிட்டன. இங்கே உறவினர்கள் கூடுவதையும், களிப்பதையும் திருமணத்தை கொண்டாடுவதையும் குறை சொல்ல இதை நான் பதியவில்லை. ஆடம்பர போதை அழகான இந்த வைபவத்தை ஒரு நாள் கூத்தாக ஆக்கிவிட்டது தான் வேதனை. நன்றாக சாப்பிடும் ஒரு மனிதனால் கூட முழுவதும் உண்ண முடியாத வகையில் இலை நிறைய பதார்த்தங்களும், உணவு வகைகளும், காது கிழியும் இரைச்சல் பாட்டு கச்சேரிகளும், வெடிகளும் வான வேடிக்கைகளும் அனாவசியம் என்பது என் கருத்து. இரண்டு குடும்பங்களுக்குள் சரியான அறிமுகங்களும், வாழ்ந்து பார்த்தவர்களின் அனுபவ பகிர்தல்களும், எதிர்கால திட்டமிடலுக்கான எண்ண பகிர்தல்களுக்கும் இடமில்லாமல் இரைச்சல் ஆடம்பரங்கள் இரண்டு மனங்களின் புதிய வாழ்க்கை தொடக்கத்தை கூட்டத்தில் தொலைந்த குழந்தையாக ஆக்கிவிட்டது தான் கொடுமை.

பெண் குழந்தை பிறப்பது செலவின் ஆரம்பமாக பார்க்கப்படும், பல பெண் சிசு கொலைகளுக்கு காரணமாகும், தேவைக்கு அதிகமான ஆரோக்கியமில்லாத உணவு வகைகளுக்கு காரணமாகும் ஒரு (பெண்ணுடைய) குடும்பத்தின் நிதி வளத்தையே நிர்மூலமாக்கும் இத்தகைய ஆடம்பரங்கள் குறையும் நாளே, நல் மனித சமூகத்தின்  தொடக்க நாளாகும்.            


Dolphin மனிதர்கள்




 

தேவைகளே மனிதனின் பல கண்டுபிடுப்புகளுக்கு ஆதாரம். நெருப்புக்காக just like that நாம் பற்ற வைக்கும் ஒரு தீப்பெட்டிக்காக கற் காலத்தில் என்ன பாடு பட்டிருக்கிறார்கள், அதிலும் அந்த தீயை அணைக்காமல் வைக்க முறை வைத்து காவல் வேறு. இன்றைக்கு சர்வ சாதரணமாய் நாம் பயன்படுத்தும் பொருட்களில் நம்மின் சொகுசு வாழ்க்கைக்காக எத்தனையோ பேரின் தூக்கம் தொல்லைந்த இரவுகள் விலையாக்கப்பட்டிருக்கின்றன. நம் வாழ்க்கையும் இந்த கண்டுபிடிப்புகளுக்கு அடிமையானதும் ஆதி மனிதனின் மிக சிறந்த பல இயல்புகள் நம்மில் தொலைந்து விட்டன.  calculator கையில் இருக்கும்போது மூளை கணக்கு பற்றிய சிந்தனை இல்லாது இருப்பது போல, அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளின் அடிமைகளாகவே நாம் ஆகிவிட்டது கிட்டத்தட்ட நீச்சல் குளத்தில் வளர்க்கப்படும் டால்பின்-களை போலத்தான், ஒவ்வொருமுறை டால்பின்கள் சாகசம் பண்ணும்போதும் அவற்றிற்கு வழங்கப்படுவது இறந்த மீன்கள்தாம், மனிதர்களால் வளர்க்கப்பட்ட அவைகளை மீண்டும் கடலில் கொண்டு விட்டால் உயிருள்ள மீன்களை பிடித்து சாப்பிட தெரியாமல் இறந்துபோகும். 

நம்முடைய கண்டுபிடிப்புகளும் ஒருவகையில் அப்படித்தான் தோன்றுகிறது. தேவைகளை விட அதிகமாய் தேவையற்றவைகளை தேக்கி வைத்துக்கொண்டு எல்லா உயிர்களுக்கும் சமமான இப்பூவுலகை நச்சுப்படுத்திகொண்டு இருக்கிறோம்.     

       

பெற்றதும் கற்றதும்







'Ignorance is Bliss' என்பது பரவலான ரசிக்கும் மனோபாவத்தை நமக்கு தருகிறது. எதையும் புதியதாய் பார்க்கும்போது ரசிக்கும் ஆர்வம் கூடுகிறதே ஒழிய குறைவதில்லை. இங்கே நமக்கு கற்றுக்கொடுத்தவை எல்லாமே பிறரால் போதிக்கப்பட்டவையாகவும், அவரவர் மனக்கருத்திர்கேற்ப வடிவமைக்கப்பட்டவையாகவே இருக்கிறது. 


இங்கே மலரை மலராக பார்க்க யாருக்கும் முடிவதில்லை. எல்லா ஆராய்ச்சிகளுமே வந்த வழியை மட்டுமே சொல்லுகிறது. போகும் வழி யாருக்கும் தெரியாதபோது இருப்பை நேசிக்கும் குழந்தை பார்வை எல்லோருக்கும் தேவை.


படிப்பும் அனுபவமும் நம்முள்ளே புகுந்த பின்பு ஒரு குழந்தையின் பார்வையில் இந்த உலகை பார்ப்பது நமக்கு இயலாததாகிறது. சுய விருப்பு வெறுப்பின்றி காணும் அந்த மழலை பார்வை ஓரளவுக்கு நமக்கு இருக்குமென்றால் போர் கருவிகள் துருபிடித்து போயிருக்கும். 


அறிந்ததலிருந்து விடுதலை கிடைக்கும்போது அறியாததும் தேவையில்லையாகிறது.



பணப் பண்ணை











ஒவ்வொருமுறை வீட்டை சுத்தம் செய்யும்போதும் குப்பையாய் தூக்கிபோடும் பொருட்களில் பல ஏதோ ஒரு தருணத்தில் அதிக விலைக்கு நாம் வாங்கியவைகளாயிருக்கும். என்னதான் விழிப்பாக இருந்தாலும் மூலை முடுக்கெல்லாம் சேரும் இந்த வேண்டாத பொருட்கள் ஒட்டுமொத்தமாய் சேர்ந்து நம்மை பயமுறுத்தும்போது சரி, இன்னைக்கு எல்லாத்தையும் ஒழித்து கட்டிவிடலாம் என்று ஒரு வழியாய் ஏறக்கட்டினால் ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய பொருட்கள் ஐம்பது ரூபாய் (எடைக்கு) போனால் அதிகம். குழந்தைகளுடன் குடும்பத்தோடு எங்காவது வெளியில் செல்லும்போது இப்படி பட்ட பொருட்கள் நமக்கு தெரியாமலேயே இடத்தை ரொப்பி விடுகின்றன. அரசாங்கமே சிக்கனம் சின்னுவாக இருக்கின்ற இந்த காலத்தில் நம்முடைய செலவுகளை செய்யுமுன் இரண்டு விதமாய் யோசிக்கலாம்..


நாம் வாங்க போகும் பொருள் வரும் காலத்தில் லாபம் தருமா நஷ்டம் தருமா? அதாவது செலவா அல்லது முதலீடா?
 அந்த பொருளை உபயோகிக்கும் போதெல்லாம் நமக்கு செலவா அல்லது வரவா?
இதனை பொறுத்து செலவினை வரையறை செய்வது கூட சிக்கனத்தின் ஒரு வழிதான். அதனை விடுத்து பார்த்ததை எல்லாம் வாங்கி கண்டபடி செலவு செய்வது மிகவும் ஆபத்தானது. சில calculators நமக்கு எப்போதும் உபயோகமாக இருக்கும்...
 வங்கிகள் மற்றும் தனி நபர் கடன் வட்டி விபரங்கள் மற்றும் EMI கணக்குகளுக்கு::
இங்கே paarkkavum





 மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் சேர்த்தால் குறிப்பிட்ட வருடங்களில் எவ்வளவு வருமானம் (சதவீதத்தில்) கிடைக்கும் என்று பாருங்கள்.



ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து கடந்த வருடங்களில் மாதம் 1௦௦௦ ரூபாய் சேர்த்திருந்தால் எவ்வளவு சேர்த்திருப்போம் என்று பாருங்கள்.




 இது போன்றே சிகரெட்டினால் நாம் இழக்கும் பணத்தை ஒழுங்காக சேர்த்தால் அந்த பணம் பெருகும் விதத்தை வலது பக்கம் இருக்கும் calculator இல் காணுங்கள். இப்படி சின்ன சின்ன விஷயங்களில் கவனம் வைத்தால் அவை கூட வரும் காலங்களில் நம்மை பொருளாதார சிக்கலில்லாததாக ஆக்கும்.

ஆமாம் சிறு துளி தான் பெரு வெள்ளம்!!