Showing posts with label வெறுப்பு. Show all posts
Showing posts with label வெறுப்பு. Show all posts
ஒரு ஆதங்கம்...:(
கடவுளின் குழந்தைகள் என்ற ஒரு இடுகையில் ஏற்கனவே என் உணர்வுகளைச் சொல்லி இருந்தேன். இன்றைக்கு சந்தியா என்ற ஒரு சகோதரியின் இந்த இடுகையை படித்தபோது, மனது மிகவும் கஷ்டப்பட்டது.
பள்ளிகள் நடந்து கொள்ளும் விதம் கேவலமாயிருக்கிறது. பெரியதாக ஜம்பம் பேசும் பள்ளிகளையும், அதன் வாயிலில் தவம் கிடந்து அட்மிஷனுக்காய் அலைவதையும் நான் அறவே வெறுக்கிறேன்.
ஒரு குழந்தை என்பது குழந்தைதான் அதற்கு மேல் எந்த அளவுகோலும் கொண்டு ஒரு குழந்தையை சீர் தூக்குவது கேவலம். அக் குழந்தைக்கான உரிமையை தட்டிப்பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.
அந்த இடுகையிலுள்ள நியாயமான ஆதங்கம் மனதைப் பிசைகிறது. நல்லவேளை எனக்கு வரவில்லை என்று தாண்டிப்போக முடியவில்லை.
இந்தமாதிரியான அவலங்கள் என்று தீரும்? அரசாங்க அனுமதி பெற்று, அரசாங்கத்தின் சலுகைகளைப் பெற்று நடத்தும் ஒரு பள்ளியில், ஒரு குழந்தை மூன்றாம் வகுப்பிற்கு போவதற்கே இத்தனை வியாக்கியானம் பேசுகிறார்கள் என்றால், இனி ஒவ்வொரு படியும் தாண்ட அக்குழந்தையும், பெற்றோரும் என்ன பாடுபடப்போகிறார்கள்?
இதற்கெல்லாம் விடிவே இல்லையா? என்னதான் சிறப்பு பள்ளிகள் அல்லது அரசாங்க பள்ளிகள் என்று விவாதித்தாலும், பள்ளிகளின் இது போன்ற செயல்கள் சரியா?
இன்னும் எத்தனை குழந்தைகள் இதுபோல நிராகரிக்கப்பட்டிருக்கிறதோ என்பதை நினைக்கும்போது....
ப்ச்....
.
Subscribe to:
Posts (Atom)