பலா பட்டறை: சிறுகதை
Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

நெஞ்சுக்கு நீதி - சிறுகதை..


.


கோதண்டராமன்

வளைகுடா நாடுகளில் வேலை செய்திருக்கிறீர்களா? எனில் அங்கிருந்து ஊருக்கு விடுமுறையில் திரும்பும் சந்தோஷம் பற்றி நான் விளக்கத்தேவையில்லை. அப்படி ஒரு 50 நாள் விடுமுறையில் ஊருக்குத் திரும்புவதற்கான ஆயத்த நிலையில் என்னென்ன வாங்கிவரட்டும் என்று வீட்டுக்குப் பேசிக்கொண்டிருந்தபோதுதான் கணேசன் மாமாவைப் பார்த்தேன். ஒரே ஊர், சொந்தக்காரர்கள். மாமா எனக்கு முன்னாடியே இங்கே வேலைக்குவந்து சம்பாதித்துக்கொண்டிருப்பவர்.

”மாமா எப்படி இருக்கீங்க.”

”நல்லா இருக்கேம்ப்பா நீ எப்படி இருக்க?”

”நல்லா இருக்கேன் மாமா நைட் ஊருக்குப் போறேன் அதான் வீட்டுல பேசிக்கிட்டிருந்தேன். உங்களுக்கு எதுனா குடுத்தனுப்பனும்னா சொல்லுங்க, 50நாள் லீவுன்னு பெரிசா லக்கேஜ் எதுவும் எடுத்துட்டுப் போகல,”

”அதெல்லாம் எதுவும் வேணாம்ப்பா நல்லபடியா ஊருக்குப் போயிட்டுவா.”

”அட என்ன மாமா, பொருளா வேணாம் காசு இருந்தாக் குடுங்க, குடுத்துடறேன், கமிஷன் செலவாச்சும் மிஞ்சும்ல, எப்படியும் வீட்டுக்கு அனுப்புவீங்கள்ள, நாளைக்கு காலைல போய் சேர்ந்துடுமில்ல.”


கணேசன் மாமா

அட இது நல்ல ஐடியாவா இருக்கே, பயபுள்ள தாம் தூம்னு செலவு பண்றவன்னு கேள்விப்பட்டிருக்கேன், பொறுப்பான பயதான் போல.

”என்ன மாமா யோசிக்கிறீங்க?”

”ஒண்ணுமில்ல கோதண்டம் நீ சொல்றதும் சரிதான் ஒரு இருபத்தய்யாயிரம் வர்ற மாதிரி கைல இருக்கு, இந்தா கொண்டு வீட்ல குடுத்துடு.”

”ஆஹா, கண்டிப்பா நாளைக்குக் காலைலயே குடுத்துடறேன்.”


கோதண்டராமன்

ம்ம் நம்ம ஊரு நம்ம ஊருதான். ”ஏம்மா கொஞ்சம் வெளிய போயிட்டு வர்றேன்.”

”ஏம்ப்பா, வந்ததும் வராததுமா கிளம்பிட்ட, கொஞ்சம் தூங்கலாமில்ல.?”

”இல்லம்மா, கணேசன் மாமா வீட்டுக்கு குடுக்கச்சொல்லி கொஞ்சம் காசு குடுத்திருக்காரு அவங்க வீடு வரைக்கும் கொஞ்சம் போயிட்டு குடுத்துட்டு வந்துடறேன்.”

”சாப்பாட்டுக்கு வந்துடுப்பா.”

”சரிம்மா வந்துடறேன்.”

கையில் ஐம்பதாயிரம் கூட எடுத்துக்கொண்டேன். ஒரு வண்டி இல்லாமல் ஐம்பது நாட்கள் பொழுது போக்க முடியாது. பஸ்ஸைப்பார்த்தாலே வெறுப்பாக இருக்கிறது. வெளிநாட்டுக்குப் போய்விட்டு பஸ்ஸில் போனாலே எவனாவது கேவலமாகப் பேசக்கூடும். மார்கெட் கொஞ்சம் மாறி இருந்தது,. புதியதாக டூவீலர் கடை ஒன்று திறந்திருந்தது. 

கழுத்தில் செயினும், ஜீன்ஸும், டி ஷர்ட்டும் பார்த்த உடனே அவர் நான் பாலைவனத்தில் காசு சேர்க்கும் ஆசாமி என்று புரிந்து கொண்டிருக்கக்கூடும். 

”வாங்க சார்.”

”வண்டி ஒண்ணு எடுக்கனும்.”

”எடுங்க, சுப்பையாத் தெரு ஆறுமுகம் ஐய்யாவோட...”

”ஆமாங்க. ”

”தெரியும்.. தெரியும். வெளிநாட்லேர்ந்து எப்ப வந்தீங்க.?”

”காலைலதான்.”

”டீலர்கிட்டேர்ந்து செக் பண்ணி செலக்ட் பண்ணித்தான் நம்ம கிட்ட வண்டி வரும். எது வேணுமோ எடுத்துக்குங்க.”

சிகப்பு நிற ஹீரோ ஹோண்டாவை எடுத்தேன். மாமா காசை எடுத்து விட்டு, முழு தொகையும் பணமாகக் குடுத்துவிட்டு வண்டிக்கு புல் டேங்க் பெட்ரோல் நிரப்பினேன், பெட்ரோல் கடையில் அதிசயப் பார்வை பார்த்தார்கள். கடை திறந்ததிலேர்ந்து எவனும் முழு டேங்க் அடித்திருக்கமாட்டார்கள் போல. இதெல்லாம் ஒரு கெத்து. வெளிநாட்டில் வேலை செய்வதென்பதின் திமிர், இதையெல்லாம் இங்கேயே குண்டு சட்டியில் எறுமை ஒட்டுபவர்களுக்கு காமிக்கவேண்டும். செயினை நன்றாக வெளியில் எடுத்து விட்டுக்கொண்டேன். ஏதோ ஒன்று குறைவது போல இருந்தது, மாமாவீட்டுக்கு இன்னும் ஐந்து கிலோ மீட்டர் இருக்கிறது.

ஆங் வெத்தலை. அட எப்படி மறந்தேன்? வெத்தலை போட்டு எவ்வளவு நாளாச்சு? எதிர் வந்த ஒரு பெட்டிக்கடையில் வண்டியை ஸ்டாண்ட் போட்டு, வெற்றிலை வாங்கி சுண்னாம்பு தடவி, பாக்கு சேர்த்து வாயில் அதக்கிக்கொண்டு ஒரு சிகரெட்டையும் பற்றவைத்தேன். ஆஹா சொர்கமே என்றாலும் அது நம்மூரப் போலவருமா பாட்டு எங்கோ ஒலித்தது, 

”அட, கோதண்டம்”

குரல் வந்த திசையைப் பார்த்தால் கதிரேசன்.

”அட, கதிரு, எப்படி இருக்க?”

”நல்லா இருக்கேன். எப்ப ஊர்லேர்ந்து வந்த? ஆளே சும்மா ஜம்னு மாறிட்டயேப்பா?”

”காலைலதான் வந்தேன்.”


குழந்தை ராஜ் ஸ்ரீதர்.

”அய்யா, அவனேதான், யார்கிட்டயோ பேசிட்டு இருக்கான்.” 

”போய், பதமா கூட்டிட்டு வாய்யா.”

”சார், வணக்கம்.”

”வணக்கம். யார் சார் நீங்க”

”அதிருக்கட்டும் சார், நீங்க கண்டக்டர் தானே?”

”ஆமாங்க, நீங்க”

”அதெல்லாம் சொல்றேன், அய்யா அங்க உக்கார்ந்திருக்காங்க கொஞ்சம் வர்றீங்களா? சாவி குடுங்க வண்டிய நானே தள்ளிட்டு வர்றேன்,”

”சார் நான் எதுவும் பண்ணல சார், இவரு எங்க சொந்தக்காரர் பேசிகிட்டிருந்தேன், அவ்ளோதான்.”

”அவரும்தான் கூட வரனும், அமைதியா வந்தீங்கன்னா அமைதியா திரும்பிடலாம்.”

காவல் நிலையம்

சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன்

யார்ரா இவன் கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம சிகரெட் புடிச்சிகிட்டே உள்ள வர்றான்.

”சார்..”

”சொல்லுங்க ஏட்டு.”

”இவர்தான் சார், கண்டக்டர் கதிர்.”

”ஊதிகிட்டு இருக்காரே இவரு?”

”அவருக்கு உதவி பண்றவரு.”

”சார் என்ன சொல்றீங்க எனக்கு ஒன்னுமே புரியல, நான் என் மாமாவீட்டுக்கு அவசர வேலையாப் போகனும் ப்ளீஸ்.”

”சாருக்கு என்னா விஷயம் என்னா அர்ஜண்ட்?”

”சார் நான் அபுதாபில வேலை செய்யறேன். இன்னிக்கு காலைலதான் 50நாள் லீவுல ஊருக்கு வந்திருக்கேன், அவரு கொஞ்சம் பணம் வீட்டுக்குகுடுக்கச் சொல்லி குடுத்தனுப்பி இருக்காரு அதான் அவசரமா போகனும்.”

”ஏட்டு”

”அய்யா?” 

“எஃப் ஐ ஆர் எழுதுய்யா.”

”சரிங்கய்யா.”

”டெஸ்மா சட்டத்தில் தேடப்படும் குற்றவாளியான அரசு பேரூந்து நடத்துனர் கதிர், டெஸ்மா சட்டத்தை எதிர்த்து அரசு பேரூந்துகளின் மீது கற்களை வீசி சேதப்படுத்தியதோடு பயணிகளின் உடமைக்கும் உயிருக்கும் சேதாரம் விளைவிக்க முற்பட்டதோடு..”

”சார் நான் எதுவுமே அப்படி பண்ணல சார், இவரு பாவம் சார் இன்னிக்குத்தான் வெளிநாட்லேர்ந்து வந்துருக்காரு அவர விட்டுடுங்கசார்,”

”ஆமா சார் எனக்கு நீங்க என்ன பேசறீங்கன்னே புரியல, காசு குடுக்கனும், அவசரம் கொஞ்சம் விட்டீங்கன்னா போதும்.”

”ஓஹ் உங்க மாமா என்ன காசு குடுத்தாரு ரூபாயா ?”

”இல்ல சார் அந்த நாட்டுப் பணம்”

”நீங்க என்ன குடுக்கப்போறீங்க? அந்த நாட்டுப் பணமா?”

”இல்ல சார் நம்ம நாட்டுப் பணம்தான்”

”ஆங்.. அப்ப ஹவாலா.. ஏட்டு முதல் குற்றவாளி கதிருக்கு ஹவாலா பண உதவி செய்து அரசு பேரூந்துகளை நாசப்படுத்தியதோடு, கையில் தீப்பந்தத்துடன் பேரூந்தைக் கொளுத்தவும் முடிவு செய்திருந்த சதித்திட்டத்தை..”

”சார் தீப்பந்தமா?இது சிகரெட்டுசார்.”

”ஆமா, யார் இல்லைன்னு சொன்னா? ஆனா இதுல வெச்சாலும் எரியும்ல? போலீஸ் ஸ்டேஷன்லயே சிகரெட் புடிச்சிகிட்டு தெனாவெட்டா?”

கோதண்டராமன் வண்டியிலிருந்த மொத்த பெட்ரோலும் ஒரு கேனில் இறக்கப்பட்டுக்கொண்டிருந்தது.


”அரேபியாக்காரர்னா சும்மாவா ஏட்டு பார்த்தியா வண்டில எம்புட்டுப் பெட்ரோலு, நம்மூர்ல கார்காரன் கூட இம்புட்டுப் பெட்ரோலு ஊத்தமாட்டான்.”

--

49 வது நாள்


கணேசன் மாமா.


அய்யோ கோதண்டமா இவன்? 

மாமா என்று கேவி அழமுடியாமல் குலுங்கியவனைப் பற்றி அணைத்தவாறே வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். கோவிலுக்கு நேர்ந்துவிட்டவன் போல வெட்டப்படாத தலை முடியும் மீசை தாடியுமாய் அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. ”நைட் 11.30 க்கு ப்ளைட்டுப்பா.”

”தெரியும் மாமா.” வீட்டுக்குப் போய் குளித்தான் வரும்போது கொண்டு வந்திருந்த லக்கேஜ் பிரிக்ககூட இல்லை, அப்படியே எடுத்துக்கொண்டு வாடகைக் காரில் கிளம்பிவிட்டான். 

”எல்லாம் என்னாலத்தான் மாமா” என்றான் கதிர். ஒரு புது வண்டி வாங்கி அத ஓட்டக்கூட இல்லை.

”என்னாது புது வண்டியா?”

”ஆமாம் மாமா. அன்னிக்குத்தான் வாங்கினாரு. ஏன் அது வீட்டுக்கு வரலியா?”

போலீஸ் ஸ்டேஷனில் காச நோயாளியைப் போல பல பாகங்கள் இழந்து சாய்ந்து இருந்த அந்த ஹீரோ ஹோண்டாவை சர்வீஸ் செண்டருக்கு ஒரு மீன்பாடி வண்டியில் எடுத்துச் சென்றேன், 

”அடடா பர்ஸ்ட் சர்வீஸ் முடிஞ்சிடுச்சே? சரியான நேரத்துக்கு வர்றதில்லையா சார்?”

”பரவாயில்லைங்க.”

”ம்ம்ம்.. செகண்ட் சர்வீஸ்தான் எடுப்போம், ஆமா வண்டி எத்தினி கிலோமீட்டர் ஓடி இருக்கு?”

”அஞ்சு கிலோமீட்டர்.”

”அடடா புது வண்டிய ஓட்டாம வெச்சிருந்தாலும் தப்புத்தான் சார். சரி வண்டி எங்க இருக்கு?”
  
”இதோ..”

ஒரு மீன்பாடி வண்டியில் படுக்கவைக்கப்பட்டு, புதியதாக டெலிவரி செய்யப்பட்டு, ரெஜிஸ்ட்ரேஷன் கூட இல்லாமல், 50 நாட்களே ஆன முதல் சர்வீஸுக்கு வரும் ஒரு வண்டியை ஹீரோ ஹோண்டா ஓனர் கூட தன் வாழ்நாளில் பார்த்திருக்க மாட்டார் என்ற உண்மை அந்த சிப்பந்திக்குப் புரிய நெடு நேரமானது.


--






மூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3.


.


ஹைய்யோ இன்னும் அரை மணி நேரத்தில் அம்பாலா வந்துவிடுமே? என்று உமாவைக்கொண்டு உள்ளே ஏதோ ஒன்று இளக ஆரம்பித்திருந்தது. 'கிட்டாதாயின் வெட்டென மற’ என்பதெல்லாம் ஒருவேளை கொடுக்காப்புளிக்குவேண்டுமானால் சரியாக வரும். அந்நிய மொழிகள் செவி தட்டும் ரயில் பயணங்களில், இரண்டடி கேப்பில் எதிரில் அழகான பெண்கள் இருந்தால் எந்த ஜாடையில் குழந்தை பிறக்கும் என்பது வரைக்கும் மனசு ப்ராயாணிக்கிறது. 

’க்றீச்சென்று..’ ரயில் நின்ற ஸ்டேஷன் இந்த ரயிலுக்கானதல்ல என்பது மக்களின் பரபரப்பிலிருந்து தெரிந்தது. 

உமா கண்களாலேயே என்ன? என்று கேட்டாள். நான் உதட்டைப் பிதுக்கி தோள்களைக் குலுக்கினேன். மெதுவாக காதில் மாட்டி இருந்த ஹெட்போனை எடுத்தாள். அழகான வளையம் ஒன்று அருந்தவம் புரிந்து அவள் காதில் கம்மலாகி இருந்தது. ஒற்றை ஆள்காட்டி விரலில் பின்னப்படாத தலைமுடியை காதோரம் தள்ளிவிட்டாள். எனக்கு சுட்டுப்போட்டாலும் வராதென்றாலும் ஏனோ இவளை ஒரு கவிதையில் வர்ணித்து எழுதவேண்டும் போலிருந்தது. 

சரியாக என் ஜன்னல் கம்பியைப் பிடித்தபடி புளிச் என்று பான்பராக்கை ரயில் பெட்டிக்கும் ப்ளாட்பார்மிற்கும் இடையில் துப்பியவன் என் கையை சட்டென்று நான் எடுத்ததைப் பார்த்து ’க்யா ஹுவா?’ என்றான். முழங்கைக்கு அருகே இருந்த ப்ளாஸ்த்திரியைப் பார்த்து அவன் கேட்டான் என்று நினைத்துக்கொண்டே ஏதோ நினைவில் ‘ஒன்னுமில்லை, சின்ன உவாதான் என்றேன்’

’க்ளுக்’ என்று சிரித்தாள் உமா. ’பாகல்’ என்று தலையில் அடித்துக்கொண்டு பான்பராக் நகர்ந்ததும்தான் நான் என்ன சொன்னேன் என்று எனக்கே புரிந்தது. அவள் சிரிப்பு எனக்கும் தொற்றிக்கொண்டது. 

’சான்ஸே இல்லை’ என்றாள் உமா. என்னுடைய ஹிந்திதானே என்று நான் கன்ஃபர்ம் செய்துகொள்ளவில்லை. ஒரு பெண்ணை சிரிக்கவைப்பது சுலபமில்லை. அதுவும் யாரென்றே அறியாத ஒரு ரயில் ஸ்னேகத்தில், அதுவும் ஒரு அழகான பெண்ணை...

’இஃப் யூ டோண்ட் மைண்ட்’ என்று அவள் காலை எடுத்து என் பக்கத்தில் நீட்டிக்கொண்டாள். மிக அழகான பவழமல்லி போன்ற பாதங்களும் மெல்லிய சிகப்பு நிற நகப்பூச்சுகளுமாய். மெட்டி இல்லாத விரல்கள் தலைதீபாவளி யாருக்கு என்று கேட்டுவிடலாமா என்று தோன்றியது? ஹும்ம் கேட்டு? சொல்லுவதற்கில்லை இவள் புருஷன் கண்டிப்பாக வழுக்கைத் தலையனாகத்தானிருக்கவேண்டும். ச்சே இதென்ன இப்பொழுதெல்லாம் தாலியே ஒரு பெரிய விஷயமில்லை நான் ஏன் மெட்டியைத் தேடிக்கொண்டிருக்கிறேன்,

பச்சை மிளகாயை வதக்கியோ எண்ணெயில் பொறித்தோ உப்பு போட்டு சைடாக கொடுத்து சமோசா விற்றுக்கொண்டு வந்தவனை நிறுத்தி ஆளுக்கு இரண்டு சமோசா வாங்கிக்கொண்டோம். ஏதோ ப்ரச்சனை ரயில் இன்னும் அரை மணியோ ஒரு மணி நேரமோ தாமதமாகக் கிளம்பும் என்று சமோசா விற்பவர் மூலம் தெரியவந்தது. 

சின்னச் சின்னக் கடிகளாக சமோசாவை தின்ன ஆரம்பித்தாள். 

டது பக்கக் கீழுதட்டில் ஓட்டி இருந்த சிறிய துகளை தட்டிவிட சைகையாக என் உதட்டில் வைத்துக் காட்டினேன். புரியாமல் என்னைப் பார்த்தாள் என்ன என்றாள் தலையை ஆட்டி, நான் கை நீட்டி மெதுவாகப் பட்டும் படாமல் அந்தத் துகளைத் தட்டிவிட்டேன். ’ஏய் இவ்ளோதானா?’ என்று அதட்டிவிட்டு ’ஒரு சிகரெட் இருக்காடா, தம் அடிக்கலாம்’ என்று கேட்டாள் ஸ்வா..

அழகான பிங்க் நிற தாவணியில் மங்களகரமாக ஒரு பிகர் தம் அடிப்பதைப் பார்த்தால் எந்த ஆண்மகனாலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்பது எனக்குத் தெரியும். ஸ்வாவுக்கும் தெரியும். ஆனால் இதையெல்லாம் சொல்லி இவளிடம் ஆர்க்யூ பண்ணமுடியாது.

’வேண்டாம் எனக்குத் தலை வலிக்குது நோ ஸ்மோக்கிங் ப்ளீஸ்’ என்றேன். 

’பயந்துட்டியா’ என்று சிரித்தாள். 

’இல்ல சீரியஸாவே மைக்ரேன் வர்ற மாதிரி இருக்கு ஸ்வா.’ 

’தென் ஓக்கே’ என்று மீண்டும் சமோசாவில் ஆழ்ந்துவிட்டவளைப் பார்த்தேன். எனக்கென்று வாய்த்த இவளைப் போல வேறு யாருக்காவது கேர்ள்ப்ரெண்ட் இருப்பார்களா என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். காதலுக்கென்று ஒரு பார்முலா இருக்கிறது. பொய் அதில் ப்ரதானம். ஊடல் அதை முன்னெடுக்கும் ஒரு ஊர்தி. இவளுக்கு எல்லாமே தடாலடி. முதல் சந்திப்பிலேயே வீட்டிற்கு வந்து மிஸ்டர் சந்திரமெளலி கணக்காக என் அப்பாவை ஃப்ரெண்ட் ஆக்கிக்கொண்டு சென்ற ராட்சசி. அசால்ட்டாக ப்ரென்ச்கிஸ் அறிமுகப் படுத்தி ’ஹாப்பி பர்த் டேடா’ என்று ஹார்ட் அட்டாக்கிற்கு சமீபம் என்னை கொண்டு சென்றவள். ’லட்சுமிகரமா இருக்காடா, லவ் பண்றியா? படிப்பு முடிஞ்சி வேலை கிடைச்சதும் கல்யாணம் பண்ணிக்கோ.’ என்று அம்மா நம்பும் அளவுக்கு அப்புராணியாக வந்தவள். இவள் தம் அடிப்பதை என் அப்பா பார்த்தால் ’ரொம்ப வேண்டாம்மா உடம்புக்குக் கெடுதல்’ என்று சொல்லக்கூடும் ஆனால் அம்மா? 

’ப்ரம்மம் ஒக்கட்டே’ என்று கொலுவிற்கு வந்து பாடிய ஸ்வா ஏறக்குறைய மருமகளாகவே ஆகிப்போனாள். எனக்குத்தான் உதறலெடுத்தது. பிரியும் வரை உதறல் நிற்கவில்லை. பிரிந்த கணம் முதல் பார்க்கும் பெண்ணிடமெல்லாம் அவள் நினைவு வருவதைத் தவிர்க்கவே முடியவில்லை. 

என்னுடைய கோழைத்தனத்தின் மை கொண்டு எழுதப்பட்ட கடந்த கால வரலாற்றில் ஸ்வா ஒரு தவிர்க்க முடியாத அத்யாயம். அந்தக் கோழைத்தனம் ஒவ்வொரு முறையும் யாரையாவது பார்க்கும்போது மீண்டும் வெளியே வரும் நான் கோழை இல்லை என்று நிரூபிக்க எத்தனிக்கும். வித்தைகள் காட்டும். வசீகரிக்க ப்ரயத்தனப்படும். இன்றைக்கு இதோ எதிரில் இந்தப் பெண் உமா.

லையை சிலுப்பிக்கொண்டேன்.

’என்ன ஆச்சு? காரமா இருக்கா? தண்ணிவேணுமா?’ 

வேண்டாம் என்று தலையை ஆட்டினேன்.

;சாரி, கேக்க மறந்துட்டேன். ஆமா, உங்க பேரென்ன?’என்று கேட்டாள் உமா. 


...........


..தொடரும்...


:))))

பாகம் ஒன்று  - விதூஷ்!





.

அஞ்சாதே!

.

எட்டிப்பார்த்தபோது வெறும் புகை மூட்டமாகத்தான் இருந்தது. 

கையிலிருந்த ஒரு கேரட்டை சுவைத்துக்கொண்டிருந்தபோது சட்டென நாக்கைக் கடித்துக்கொண்டேன், துப்பியபோது சக்கையாய் விழுந்த கேரட்டிலும் உதட்டில் வழிந்த எச்சிலிலும் ரத்தம். எச்சிலைத் துப்பிவிட்டு மீண்டும் கேரட்டைக் கடித்து வாய் நிறைய அடக்கிக்கொண்டேன். உடலில் காயத்தால் ஏற்படும் வலியைக் காட்டிலும் நாக்கில் ஏற்பட்ட வலி வித்தியாசமாய் இருந்தது. 

மீண்டும் எட்டிப்பார்த்தேன். அதே வெண் பஞ்சு போர்த்திய சூசைட் பாயிண்ட். அதென்ன சூசைட் பாயிண்ட்? சூசைட் என்றால் என்ன? மரணிப்பதா? இல்லை இல்லை. மரணத்தை நிர்ணயம் செய்வது. பிறப்பிலில்லாத சுதந்திரம். உயிரோடிருப்பதிலிருந்து உண்மையான சுய விடுதலை. 

இயற்கையான மரணம் என்பது யாரோ கழுத்தைப் பிடித்து தள்ளுவதைப்போல எப்படி உயிரின் முதல் காற்று சுவாசிக்க வெளியே கால் பிடித்து இழுத்தார்களோ, அதே போல் யாரோ ’போதும் வாழ்ந்தது போய்த் தொலை’ என்று தள்ளுவதைப்போல. ஆனால் இந்த தற்கொலை, அதென்ன தற்கொலை ?எவன் வைத்தான் இந்தப் பெயர்? சுயவிடுதலை என்றால் நன்றாக இருந்திருக்குமோ? 

எங்கே இருந்தது சுயம்? ஆணும் பெண்ணும் சேர்த்து பிரதியாக்கிய ஒரு பிண்டம், கூடலின் சாட்சி, தான் மலடி இல்லை என்றும் ஆண்மகன் என்றும் நிரூபித்த இருவரின் வம்ச சாப்பா. போகட்டும் நானே என்னை மாய்த்துக்கொள்வதிலாவது சுயமானது இருக்கட்டும்.

காரட்டின் கடைசி துண்டையும் வாயில் போட்டுக்கொண்டேன். இரு கைகளையும் பரபரவென்று தேய்த்துக்கொண்டேன். எதற்கும் நன்றாக வெயில் வந்தவுடன் மேகமூட்டமில்லாதபோது ஒரு முறை பார்த்துவிட்டு குதித்துவிடலாமா? என்று தோன்றியது. போதும் வாழ்ந்தது. அடுத்த நொடி என்று எதுவும் என் கையிலில்லாதபோது என்னவென்று வாழ்வது? எதற்காக வாழ்வது? போதும் விட்டு விடுதலையாகிவிடலாம். 

தற்கொலை கோழையாம். விழாத வீரர்கள் சொல்லிவிட்டார்கள். எட்டிப்பார்க்கத் திராணியற்ற எலிக்கூட்டம். எனக்கு சிரிப்பு வந்தது. அதுதான் மறு பிறப்பொன்று இருக்கிறதே பிறகென்ன? இதிலென்ன கோழைத்தனமிருக்கிறது? என் உயிர் என் கையால் போவதென்பது எவ்வளவு சுகமானது. எல்லா வேலைகளையும் சரியாக முடித்து,. எல்லாக் கடன்களையும் அடைத்து. எனக்கென இருக்கும் பொறுப்புகள் முடித்து இதோ இங்கே முடிக்கலாமென்று வந்திருக்கிறேன். இதிலென்ன கோழைத்தனம் இருக்கிறது.  இன்னும் வாழ்வோமென்று சேர்த்துச் சேர்த்து திடீரென எவரோ அனுபவிக்கச் சாவதல்லவா கோழைத்தனம். 

திடீரென்று வந்தோம் குதித்தோமென்று இருப்பவர்களை கோழையெனச்சொல்கிறார்களோ?ஹும்ம் பைத்தியங்கள். இயற்கையாய் இறப்பவனும் இன்ன தேதிக்கு இறப்பேனென்றா சொல்லிவிட்டு இறக்கிறான். கூடலின்போதே கூடவந்த உயிரணுக்களை சாகடித்துத்தானே கருப்பையில் நுழைந்தேன். இதன் பிறகென்ன புண்ணியமும்? பாவமும்? கோழையும் வீரமும்.

வாடாத மலரென்று கொத்துக் கொத்தாய் சில பூக்கள் கொஞ்சம் தள்ளி விற்றுக்கொண்டிருந்தார்கள். நான் மட்டுமே இருந்த அந்த சூசைட் பாயிண்ட்டில் ஒருவர் ஒரு பெண் குழந்தையோடு வந்தார். அந்தக் குழந்தையின் கைகளில் அழகான மலர் கொத்து.

”மிலி த்ரோ த ஃப்ளவர்ஸ்”

மிலி என்று அழைக்கப்பட்ட அந்தப் பெண் குழந்தை சொன்ன தன் தந்தையைப் பார்த்தது. சிறிய மையிடப்பட்ட அழகிய கண்களிலிருந்து உருண்டோடிய கண்ணீர் கன்னத்தில் கோடு வழித்து புஸு புஸுவென்ற ஸ்கர்ட்டில் விழுந்து வட்டமாய் பரவியது. பூக்களைத் தூக்கி எறிந்தது அப்பாவின் பக்கம் திரும்பி அவரின் கால்களுக்குள் புதைந்து அழுதது. 

நான் அந்தத் தந்தையைப் பார்க்கவில்லை. சிரித்துவிடுவேனோ என்று உள்ளுணர்வு சொல்லியது. அந்தக்குழந்தைக்காகவாவது நான் சிரிக்காமலிருக்கவேண்டும். இவராவது முற்றுமறிந்த முட்டாள். இந்தக் குழந்தை இனிமேல்தான் கற்றறிந்து முட்டாளாகவேண்டும். நானதைத் தடுப்பானேன் என்று மீண்டும் வெண்பஞ்சு மேகங்கள் பக்கம் திரும்பிக்கொண்டேன். 

தடுப்புக்கம்பி சில்லென்று இருந்தது பிடித்தவாறே கீழே பார்க்கத்துவங்கினேன். எந்தப் பக்கம் குதிக்க வாகாயிருக்கும் மனது கணக்குப் போடத்துவங்கியது. அது மிகச் சிறிய இடமென்றாலும் தடுப்புக் கம்பி தாண்டி இரண்டு இரண்டரை அடிகள் மேடாயிருந்தது. ஒரு மரம் அடியிலிருந்து கிளை பரப்பி மேலே வந்திருந்தது. அதற்கு மேல் எதுவும் தெரியவில்லை வெறும் பனிப்போர்வைதான். மேல் கம்பியிலிருந்து ஒரே எம்பு எம்பி விடவேண்டியதுதான். 

மிலியும் அவள் அப்பாவும் அங்கேயே நின்றுகொண்டிருந்தார்கள். ச்சே இதுதான் இந்த வாழ்வின் பிரச்சனை எங்கே பார்த்தாலும் மனிதர்கள் தனிமை என்பதே இல்லாத சபிக்கப்பட்ட ஓர் உலகம். சூசைட்பாயிண்ட் என்று போர்ட் வைத்த புத்திசாலிகள் இங்கே கூட்டத்தைக்கூட்டி பூ விற்கிறார்கள், காரெட் விற்கிறார்கள், கூட்டமும் வந்து வேடிக்கைப் பார்க்கிறது. அடுத்தவன் சாவது உயிரோடிருப்பவர்களுக்கு வேடிக்கையாகிப்போன கேவலம். 

இந்த இடம் தனிமையிலல்லவா நிறைந்திருக்கவேண்டும். தன்னிஷ்டமாய் தைர்யமாய் உயிர் துறக்க முடிவெடுப்பவர்கள் வருமிடத்திற்கு தனிமையும் அமைதியும் எவ்வளவு முக்கியம்?  

”மிலி கோ கெட் சம் மோர் ஃப்ளவர்ஸ்..”

மிலி அவள் அப்பாவின் கையிலிருந்து ரூபாய் நோட்டைப் பெற்றுக்கொண்டு சில அடி தூரங்கள் தாண்டி பூ விற்றுக்கொண்டிருப்பவர்களை நோக்கி நடந்து சென்றாள். மீண்டும் இங்கே பூக்களை எறியப்போகிறார்கள். யார் இறந்தது? இந்தக் குழந்தையின் அம்மாவா? அல்லது வேறு யாராவதா? இன்று என்ன நினைவு நாளா? உயிரோடிருக்கும்போது என்றைக்காவது அந்தப்பெண்ணிற்கு பூக்கள் கொடுத்திருப்பார்களா? அல்லது இறந்து போனவருக்கு பூக்கள் பிரியமா?இங்கே எறிந்தால் மட்டும் இந்தப் பூக்கள் அவரை அடையுமா? இந்தப்பூக்களை ஏன் வீணாக்குகிறார்கள்? அது சரி இல்லையென்றால் மட்டும் இந்தப் பூக்களென்ன ஜீவித்தா இருக்கப்போகிறது. அட! ஆமாம். சில வருடங்களுக்கு இவை அப்படியே இருக்குமென்றல்லவா சொல்லி விற்கிறார்கள்.

நானும் மிலியைப் பின் தொடர்ந்து சென்றேன் வேறு கடையில் அழகான நிறங்களாய் தேர்ந்தெடுத்து ஒரு கொத்து பூக்கள் வாங்கினேன். சட்டைப்பையில் வைத்துக்கொண்டேன். பூ விற்றவன் என்னைப் பார்த்து சிரித்தான். 

“என்ன சார் சூசைட் பண்ணிக்கப்போறீங்களா?” எனக்கு திடுக்கென்றது. 

“எப்படி? ஐ மீன் ஏன் கேக்கறீங்க? ”

”எத்தினிப்பேரப் பார்த்திருப்போம். எல்லாம் ஒரு கெஸ்தான். ”

நான் மீண்டும் சூசைட் பாயிண்டைப்பார்த்தேன். மிலியின் அப்பாவும் மிலியும் மீண்டும் பூக்களை விசிறி எறிந்துவிட்டு மெல்ல திரும்பிக்கொண்டிருந்தனர். 

இல்லீங்க. சூட்டிங். லொக்கேஷன் பாக்க வந்தேன் அப்படியே வசனம் டெவலப் பண்ணலாம்னுதான். ஆனா கரெக்ட்டா மொகத்தப் படிக்கிறீங்க.” சிரித்துவிட்டு காசைக்கொடுத்துவிட்டு லாட்ஜை நோக்கி நடந்தேன். இது இந்த இடம் தற்கொலைக்கு லாயக்கே இல்லாத இடமென்று எனக்குத்தோன்றியது. ஒருவன் இறக்கப்போவதை கெஸ் செய்யுமளவிற்கு விளம்பரப்படுத்தப்பட்ட இந்த இடம் நான் விடுதலையாக ஏற்ற இடமல்ல. 

ஒரு சிகரெட் பற்றவைக்க நின்றபோது எதிரில் போன கூட்டத்தில் ஒருவன் சத்தமாக பேசிக்கொண்டு போனான்

”மதிகெட்டான் சோலைன்னு ஒன்னு இருக்குங்க தொப்பிதூக்கு பள்ளத்துக்கு போற வழில பார்க்கலாம். அடர்ந்த காடு உள்ளார போனா அவ்ளோதான். போனவங்க யாரும் திரும்பி வந்ததே இல்லை. அவ்ளோ டேஞ்சர்...”

ஸ்ஸ்ஸ்ஸ் சிகரெட்டின் முதல் புகையை ஆழ உள்ளிழுத்தேன். 

மீண்டும் வேறொருவன் குரல் கேட்டது ”அவ்ளோ டேஞ்சரா உங்களுக்கெப்படிங்க தெரியும் ?”

”போர்டே வெச்சிருக்கான் சார் கவர்ன்மெண்ட்டு. இதோ இதுமாதிரியே”

நின்று திரும்பி சூசைட் பாயிண்ட் என்று எழுதப்பட்ட பெயின்ட் உதிர்ந்துபோன அந்தப் பலகையை நான் வெறுப்பாய் பார்த்தேன். இதென்ன அறிவிப்பா? அழைப்பா? 

எங்கோ அந்தப் பாடல் கேட்டது

அப்ப னென்றும் அம்மை யென்றும்
ஆணும் பெண்ணும் கொட்டிவைச்ச
குப்பையாக வந்த உடம்பு – ஞானப்பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு!
அது புத்தனென்றும் சித்தனென்றும்
பித்தனென்றும் ஆவதென்ன
சக்கையாகப் போகும் கரும்பு! – ஞானப்பெண்ணே
சக்கையாகப் போகும் கரும்பு
பந்த பாசச் சேற்றில்
வந்து விழுந்த தேகம்!
எந்த கங்கை யாற்றில்
இந்த அழுக்குப் போகும்?

த்தூ.. சிகெரெட்டைக் கீழே போட்டு மிதித்துவிட்டு, நடக்கத்துவங்கினேன்.



.

பேக் வித் எ பேங்........!!

.



மாத்திரை போட்டேன் டாக்டர்

என்ன மாத்திரை ?

மாத்திரை பேரு சட்னு நியாபகம் வரல டாக்டர். நீங்களும் போடனும் புது உலகமே விரியும். எல்லார் உடம்பிலையும் மனசுன்னு ஒன்னு படம் காமிக்குமே இங்கே உடலே மனசாகிப் பறக்கும். பூமியெல்லாம் பஞ்சுப் பொதிபோல நீங்களும் ஒரு பஞ்சின் இழைபோல பறப்பீர்கள் டாக்டர். ட்ரை பண்றீங்களா?

ரூபன் அதெல்லாமே ஒரு இல்லூஷன். நீங்க சாப்பிட்ட மாத்திரை என்பது ஒரு லாகிரி வஸ்து. ட்ரக் அது மூளையைக் குழப்பமடையச்செய்யும் ஒரு வகையான கெமிக்கலா இருக்கலாம்.. ஹெல் லாட் ஆஃப் சைட் எஃபெக்ட்ஸ் உங்க உடம்ப நாசம் பண்ணிடும். ஒரு ஐஐஎம் டாப்பர் நீங்க ஏன் இதெல்லாம் எடுத்துக்கனும்.

களவும் கற்று மற டாக்டர். ஸ்கூல் படிக்கும்போது பாங்கு போட்டிருக்கேன். பச்சையா சின்னதா கோலிகுண்டு சைஸ்ல ஒரு நார்த் இன்டியன் பீடாகாரன் கொடுத்தான். என்னய்யா இதுன்னா சிவபிரசாதம்ன்னான். உண்மையிலேயே அன்னிலேர்ந்துதான் சிவனையே எனக்கு ரொம்பப் பிடிச்சிப்போச்சு. பால்கோவால வெச்சி ஒரு உருண்டை சாப்ட்டா போதும் அவதார் மாதிரி ஒரு திவ்ய தேசம் ஒரு 24 மணி நேரம் காரண்டி. 

ஓக்கே. நவ் லிசன் ரூபன். மனித வாழ்க்கையில் முழித்துக்கொண்டு செயலாற்றுவது என்பது ஒரு குறுகிய காலம்தான். அதை இப்படியெல்லாம் போதையில் கழித்தால் அதுவும் இவ்வளவு சின்ன வயசுல டூ பேட். என்னால நல்ல மருந்துகள் கொடுத்து ட்ரீட்மெண்ட் தர முடியும். ஆனா உங்க ஒத்துழைப்பு என்பது இல்லாமல் எந்த மருந்தும் வேலை செய்யாது. 

டாக்டர் சந்தோஷம்தானே வாழ்க்கை. எல்லாருமே அதற்குத்தானே வாழ்கிறார்கள். எனக்கு இதுதான் சந்தோஷம் இதிலென்ன தப்பு. 

நியாயப் படுத்தி பேசனம்னா என்னவேணாலும் பேசலாம் ரூபன். சீரியல் கொலைகாரனுக்கு கொலை செய்வது சந்தோஷம். அதற்காக அதையும் உங்க நியாயப் படுத்தலில் சேர்த்துக்குவீங்களா? யோசியுங்க. இங்கே சந்தோஷம் என்பது நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையுமாக இருக்கனும். 

பட் டாக்டர் ஐ ஆம் பர்ஃபெக்ட்லி ஆல்ரைட். நான் யாரையும் துன்புறுத்தவில்லை. ஐ ஆம் ஹார்ம்லெஸ். ஜஸ்ட் லிவிங் மை லைஃப்.

யூ ஆர் ராங். உங்களால உங்க ஃப்ரென்ட்ஸ் பாதிக்கப் பட்டிருக்காங்க. அவங்க பேரன்ட்ஸ் நொந்து போய் இருக்காங்க. யூ அல்மேஸ்ட் கில்ட் ஒன் ஆஃப் தெம் யூ நோ.

வாட் யூ மீன் டாக்டர்.


சீ ஹியர் என்று டாக்டர் எனக்கு முதுகு காட்டிக்கொண்டிருந்த கம்ப்யூட்டர் மானிட்டரைத் திருப்பினார். CAM09 என்ற ஒரு சதுரம் செவ்வகமானது, ஒரு பெண் முகத்தில் மாஸ்க், ஆங்காங்கே ஒயர்கள்  பொருத்திக்கொண்டிருந்தார் ஒரு டாக்டர் காமரா சூம் செய்ய யார்? ஓ மை காட் காமினி

யார்னு தெரியிதா? 

டாக்டர் இது காமினி யெஸ்

அவளுக்கு என்னாச்சி என்று நான் கேட்டுக்கொண்டிருக்கும்போதே அவள் ரூமிலிருந்து டாக்டர் வெளியேறினார். 

ஒஹ் காட் டாக்டர் அவள காப்பாத்தனும் ஏன் குதிக்கறா

இது ஒரு வகையான சைட் எஃபெக்ட் எல்லாம் நீங்க அவளுக்குத் தெரியாம கொடுத்த ட்ரக்கோட விளைவுகள். பட் காமினிய குணப் படுத்திடலாம் ரொம்ப மைல்ட் சிசி தான் உள்ல போயிருக்கு.

ஆனா அவ டிப்ரெஷன்ல இருந்தா டாக்டர். அவங்க மாமாவும் அவர் பையனும் அவளோட சொத்துக்காக அவள டார்ச்சர் பண்ணிகிட்டு இருந்ததா என்கிட்ட சொன்னா. நான் ட்ரக்ஸ் யூஸ் பண்றது அவளுக்குத் தெரியுமே.

யா ஒரு வகையில அவளுக்கு டார்ச்சர் கொடுத்த ரெண்டு பேரையும் நீங்க கொடுத்த ஏதோ ட்ரக்ஸ அவங்களுக்கு கொடுத்து காமினி அல்மோஸ்ட் தன்னைக் காப்பாத்திகிட்டா.. கெட்டதிலயும் ஒரு நல்லது..

புரியல டாக்டர்

டாக்டர் மீண்டும் வேறொரு கேமராவினை மானிட்டரில் காண்பித்தார்

இரண்டு தனித்தனி ரூமில் காமினியின் மாமா பரந்தாமனும், அவர் மகன் சிவாவும்

 
சிவா சுவற்றைப் பார்த்து உட்கார்ந்திருந்தான். காமினியின் போட்டோ ஒன்று அங்கே இருந்தது. கைவிரல்களால் துப்பாக்கி செய்து..


அடுத்த பக்கத்தில் மாமா பரந்தாமன் சிரசாசனம் செய்து கொண்டிருந்தார். ஊசியுடன் நர்ஸ் வருவதைப் பார்த்து ..

ஹா ஹா நான் சத்தம் போட்டு சிரித்தேன். 

உங்களுக்கு இதெல்லாம் தமாஷா இருக்கா ரூபன்..

எக்ஸாட்லி டாக்டர்

வாட் யூ மீன்

ஐ மீன் அந்த மாத்திரை பேர் கேட்டீங்களே அதான் டாக்டர் அது

எது

தமாஷ்.. தமாஷ் மாத்திரை அதுதான் அது பேரு. ஹா ஹா 

டாக்டர் இண்டர்காமை எடுத்து நர்ஸ் கம் டு மை ரூம் என்றார்.

எனக்கு டாக்டர் ரூமிலிருந்த சிவபெருமான் படம் கொஞ்சம் கொஞ்சமாய் அவுட் ஆஃப் போகஸ் ஆகிக்கொண்டிருந்தது.

(தலைப்பு டிஸ்கி: சரியான முதுகு வலி அதான். வேறெதுனா நினெச்சீங்கன்னா கம்பெனி பொறுப்பல்ல. ஆயுத பூஜைக்காவது பட்டறைக்கு பூஜை போடனுமில்லையா அதுக்குத்தான் இந்த இடுகை.  நண்பர்கள் எல்லோருக்கும் நாளைமுதல் பின்னூட்ட டொக் டொக் ஆரம்பம் :)
(போட்டோ டிஸ்கி : ஹி ஹி..:-)


.

தெய்வம் (சவால் சிறுகதை) III

கோவில் கட்டி கும்பாபிஷகத்துக்கு தேதி குறிச்சாச்சு இப்பப் போய் இப்படி ஆயிடுச்சே?”

”அதான்டா மாப்ள எனக்கும் கவலையா இருக்கு. தலைவராண்ட போவோம். அந்தாளு எதுனா விவரமா சொல்லுவாப்ல.””

--

யேய் கூச்சல் போடாதீங்கப்பா. ”

”என்னா தலைவரே, தொண்ட தண்ணி வத்தக் கத்தறோம், எங்க உரிமைய நசுக்கறீங்களே?”

”எலேய் யார்ரா இவன்? விட்டா தீக்குளிப்பயாட்டம் பேசறவன்!. ”

”ஏன் குளிக்கனுமா? சொல்லுங்க, அதையும் செஞ்சிடலாம். கோவில் கட்டி நாள் குறிச்சாச்சு. இப்பப் போய் இப்படி நடந்திருச்சுன்னு அவனவன் பொங்கிட்டிருக்கோம். மானம் போவுது. எதுனா செய்யுங்க. ”

”அட இருங்கப்பா என்னைய பேசவே விடாம.. நானும் மூத்த குழுவினரும் இன்னைக்கு  ராத்திரியே ட்ரெயின்லயே மெட்ராஸ் போறோம். நாளைக்கே கோட்டைல முதலமைச்சர சந்திக்கறதா ஏற்பாடு. ஏற்கனவே கலெக்டர் வரைக்கும் போய் தகவல் சொல்லியாச்சு. நாம மட்டும் இல்லைய்யா எல்லா மாவட்ட முண்ணணி தலைவர்கள், முக்கிய புள்ளிங்கல்லாம் வர்றாங்க. எலெக்‌ஷன் நேரம். கோவில் திறப்பு விழாவுக்கு எந்தப் பாதகமும் வராது. நாளைக்கு சந்திப்பு அடுத்த வாரம் கும்பாபிஷேகம். சந்தோஷம்தானே.”

தலைவரே” தூரத்திலிருந்து வந்த குரலைக்கேட்டு தலைவர் திரும்பினார். 

”என்னாப்பா? ”

”மெயின் ரோட்ல கலவரம் ஆரம்பிச்சிடுச்சய்யா? எம்.பி போன் பண்ணினாரு. வீட்டம்மா சொல்லிவிட்டாங்க. எஸ்பி வந்து வெயிட் பண்றாராம். உங்களப் பார்க்கனுமாம்.”

”தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன். ஹும் சரி அதுவும் ஒரு வகையில நல்லதுதான். இனி தமிழ் நாட்டுக்கே நம்ம கோவில் பிரபலமாயிடும். ”

”ஆனது ஆச்சி. தலைவரே மத்த ஏரியாவுலயும் சொல்லி ரோட்டுல மரத்தையெல்லாம் வெட்டி போக்குவரத்தையே ஸ்தம்பிக்கச் சொல்லுங்க. நாமளும் நம்ம பலத்தக் காட்டுவோம்.”

”ஏய் அவசரப்படாதீங்கப்பா நாளைக்கு கோட்டைக்குப் போறோம். விஷயம் பெரிசாச்சுன்னா அங்க உங்க தாத்தனா பதில் சொல்வான்.”

--

லைவர் வீட்டுக்குள் நுழைந்தபோது எஸ்பி ஊஞ்சலில் உட்கார்ந்து மோர் குடித்துக் கொண்டிருந்தார். 

”வணக்கம் எஸ்பி சார்.”

”வணக்கமெல்லாம் இருக்கட்டும். நீங்க என்ன பண்றீங்கன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமா? ஏன் இப்படி பப்ளிக்க டிஸ்ட்ரப் பண்றீங்க. அதான் நாளைக்கு முதல்வரப் பார்க்க அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்தாச்சே. இன்னும் என்ன சாலை மறியல் வெங்காயம். மொதல்ல அதெல்லாம் நிருத்தச் சொல்லுங்க.”

”சார் அதெல்லாம் நானா ஏற்பாடு பன்றேன். பக்தர்கள் கோவம். நானென்ன செய்யமுடியும்? சொல்லுங்க.”

”என்னது பக்தர்களா? வெளங்கிரும். யாருங்க பக்தன்? ரோட்ல மரம் வெட்டிப் போடறவனா? சரி விடுங்க. கோவில் இந்தூர்லதான் இருக்கு. நீங்கதான் தலைவர். முக்கிய மையமான இங்கேர்ந்து ஒரு அறிவிப்பு செஞ்சா அது பிரச்சனைய தணிக்கும். அட்லீஸ்ட் நாளைக்கு சிஎம் மை சந்திக்கிற வரைக்கும். புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கிறேன். ”

”சரிங்க சார். நானும் சொல்றேன். ஆனா இப்ப டைம் கம்மி. நைட்டே மெட்ராஸ் போறதுனால போன்லதான் பேசமுடியும். ”

”என்னமோ பண்ணுங்க. நான் வர்றேன். ”

--

1) டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

2) "ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை" என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

3) "காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே" என்று பாராட்டினார் பரந்தாமன்.

முகத்தில் சலனம் ஏதுமின்றிப் பார்த்தார் முதல்வர். 

இண்டர்காம் ஒலித்தது. ”சொல்லுங்க.”

“ அய்யா அந்த கோவில் பார்ட்டிங்க வந்திருக்காங்க.”

’வரச்சொல்லுங்க ”

வணக்கம்” என்ற கோரஸ், பழகிவிட்டிருந்த முதல்வர். ’மாண்புமிகு முதல்வருக்குக் கோரிக்கை’ என்ற காகிதத்தை காண்பித்து இந்த மூணும்தானே எடுக்கனும். 

”ஆமாங்கய்யா.”

“ இதுல என்னய்யா ப்ரச்சனை. ”

”அது ரொம்ப நெகட்டிவா இருக்குன்னு ஃபீல் பண்றோமுங்க.”

”சரி பண்ணிடலாம். எலெக்‌ஷன் வருது நல்லாட்சி தொடரனும். ஞாபகம் இருக்கில்ல.”

“ ஐய்யா நம்ம கட்சி தவிர யார் நின்னாலும் டெப்பாசிட் கிடைக்காதுங்க. அட அதுவும் நம்மூர்ல  நம்ம கட்சிக்கு ஒரு ரெக்கார்டுங்க உங்களுக்குத் தெரியாததா. ”
 
”நான் மாநிலம் முழுசுமாச் சொன்னேன்யா. இப்பத்தான் ஸ்ட்ராங்கா ஆயிட்டு வர்றீங்களே.  எதுனா கட்சி கொடின்னு திட்டமிருக்கா? ”

”அய்யோ என்னாத் தலைவரே இது?. வேணுமின்னா வெளில போய் டெல்லிக்கார நியூஸ் அம்மணிகிட்ட நிரந்தர முதல்வருக்கு நன்றின்னு சொல்லிடறோமுங்க.” 

”ஹா ஹா” என்ற முதல்வரின் சிரிப்பு அங்கு மாட்டப் பட்டிருந்த தேசப்பிதாவரைக்கும்  எதிரொலித்தது.

--

த்யம் தியேட்டரின் எதிரில் இருந்த கடையில் மசாலா சுண்டல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் சிவாவும், பரந்தாமனும். சுண்டலின் சூடா, காரமா தெரியவில்லை. இரண்டு பேர் கண்களிலும் நீர் வந்து கொண்டிருந்தது. 

”ஒம்போது வருஷம் கஷ்டப்பட்டதுக்கு பலன் கிடைச்சிருச்சின்னு நினெச்சேன். ப்ச் நமக்கு ராசியே இல்லையேப்பா. கடைசி வரைக்கும் சுண்டல் சாப்பிட்டே வாழ்க்கை முடிஞ்சிடும் போல இருக்கே.” 

”விடுங்கண்ணே அதான் அடுத்த படத்துல பார்த்துக்கலாம்னு டைரக்டர் சொல்லிட்டாரே. கண்டிப்பா செய்வாரு. ”

”டேய் சிவா அதில்லடா, படம் கிடைக்கறதில்ல பெரிசு. இந்த மாதிரி காண்ட்ரவர்ஸி ஆகிற படத்துல நம்ம சீன் பேசப்பட்டுச்சின்னா மக்கள்ட ரீச் ஆகிடுவோம். ஜெயிச்சிடலாம். அந்த சான்ஸ் போச்சி. எப்படி சிரிக்கிறா பார் என் வயிறு எரியிது.” என்று அவர் பார்த்த இடத்தில் காமினியின் பெரிய ப்ளக்ஸ் பேனர் ஜொலித்துக் கொண்டிருந்தது.

--

டிகை காமினியின் சிறப்புப் பேட்டி. Xகுளூசிவ். என்று சிமிட்டிக் கொண்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டியை சூழ்ந்து ஒரு பெரிய கும்பலே மவுண்ட்ரோட் விஜிபி முன்னால் நின்றிருந்தது.

"மிஸ் காமினி"

"சொல்லுங்க"

"தமிழ் நாட்ல ரசிகர்கள் உங்களுக்காக கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யப் போறாங்க. உங்க லேட்டஸ்ட் ஹிட் படத்துல மூணு காட்சில நீங்க சோகமா இருக்கறதப் பார்த்து முதல்வர் வரைக்கும் போய் நீக்கி இருக்காங்க. அது பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?"


"என்னை வாழ வைக்கும் தமிழ் ரசிகர்களுக்கு என் நன்றி."




.(!)(!).

டைமன்ட் வாசனை ( சவால் சிறுகதை)



”டாக்டர் காமினிக்கு ஊசின்னா பயம் கொஞ்சம் அலர்ட்டா இருங்க.” இன்ஸ்பெக்டர் ஜெயராமன் பரிவாய்ச் சொன்னார்.

”ஹே நோ ப்ராப்ளம் நான் பார்த்துக்கறேன் நீங்க ஸ்டேஷனுக்குப் போங்க.” 

டாக்டர் காமினியைப் பார்த்தார் முகத்தில் மாஸ்க் பொறுத்தி உடலெல்லாம் வயர்களால் இணைக்கப் பட்டு பீப் பீப் என்று சத்தம் போடும் கருவியால் இணைக்கப் பட்டிருந்த அந்த அறையின் கட்டிலில் மாட்டி இருந்த குறிப்பேட்டில் அடுத்த மருத்துவக் குறிப்புகளை எழுதிவிட்டு கதவைப் பூட்டிவிட்டு வெளியே சென்றார். 

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

யாருமே கவனிக்காத தருணங்கள் காமினிக்கு கிடைத்தது. சிவாவின் இருப்பிடம் நோக்கி காமினியின் பயணம் ஆரம்பித்தது. 

சிவாவின் நம்பிக்கை வீண் போகவில்லை. காமினியின் வருகையில் அவன் ஆச்சரியப் படவில்லை. எப்படியும் காமினி இங்கே வரும்போது காமினியை முடிக்க வேண்டுமென்ற திட்டமிடலில் ஒரு துப்பாக்கி எப்பொழுதுமே லொட் செய்யப்பட்டு இடது பாக்கெட்டில் தயாராகவே இருந்தது. இனி எந்த பச்சாதாபத்திற்கும் இடமில்லை. விஷயம் கை மீறிப் போய்விட்டது. சுட்டால் மட்டும் போதாது காமினியின் கடைசி டிஎன்ஏ வரைக்கும் சாம்பலாக்கிவிட்டுத்தான் மறு வேலை. 

"ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை" என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா. காமினி எந்த உணர்சியும் இல்லாது சிவாவைப் பார்த்த பார்வையில் சிவாவிற்கு வேறு யோசனை தோன்றியது. சுடுவதற்கு பதில் உணவில் விஷம் கொடுத்துவிடலாம் ரத்தம் சிந்தினால் கார்பெட் கெட்டுப் போகும் என்ற தேவையில்லாத எண்ணம் உதித்தபோது ‘பரந்தாமன்’ என்று செல் அடித்தது. 

”யெஸ் பாஸ்..”

”காமினி வந்தாச்சா? ”

”ஆச்சு பாஸ். இதோ இப்ப முடிச்சுடுவேன். ”

”நோ சிவா. ”

”ஏன் பாஸ்? ”

”நம்மாளுங்க சொதப்பிட்டாங்க. டைமண்ட கண்டுபிடிக்க முடியல. அந்த இடத்தை காமினி மட்டுமே கண்டுபிடிக்க முடியும். போலீஸ் இன்னும் காமினிய நம்புது. இன்னேரம் அவங்க காமினியத் தேடத் தொடங்கி இருப்பாங்க. அதுக்குள்ள காமினிய அனுப்பி டைமண்ட கண்டுபிடிச்சிடலாம்.    ”

”சரி சார் நான் காமினியோட ஸ்பாட்டுக்கு வந்துடறேன்.”

--

ஸ்பாட்டில் பரந்தாமன் பரிவாரங்களோடு நின்று கொண்டிருந்தார். காமினியின் அருகே வந்து காமினி டார்லிங் கமான் டார்லிங் ஃபைண்ட் த டைமண்ட் என்றார். யார்ரா டைமண்ட புதச்சது என்ற கேள்விக்கு பரிவாரத்திலிருந்து வந்த ஒருவனிடம் காமினியோட அந்த எடத்துக்கு மாறு வேஷத்துல போ, போலீஸ் இருப்பாங்க உசாரா இரு. மத்தத காமினி கிட்ட விட்டுடு. நாங்க இங்கேயே வெய்ட் பண்றோம். க்விக்.

சரியாக 50 நிமிடங்களில் காமினியும் அந்த பரிவார உருப்படியும் வந்தனர். அவன் கையிலிருந்த வெல்வெட் பையைப் பார்த்ததுமே பரந்தாமன் கண்கள் விரிந்தது. 

பரந்தாமன் ஓடிச்சென்று காமினியை அலேக்காகத் தூக்கினார். 

"காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே" என்று பாராட்டினார்.
 பரந்தாமன்.

”காமினியப் போய் கொல்லப் பார்த்தியேடா சிவா. ”

இல்ல பாஸ் இப்பவும் சொல்றேன். காமினி போலீஸ் கைல கிடைச்சா நமக்குத்தான் ஆபத்து. மொத்தத்தையும் மோப்பம் பிடிச்சிடுவாங்க, காமினிக்கு என்ன நல்லது கெட்டது தெரியும்? என்ற சிவாவை பார்த்து 

’வவ்’

என்றது காமினி வாலாட்டியபடியே..


(காமினி கொடுமைகள் - தொடரலா(ரு)ம். )



.