பலா பட்டறை: அமதி..

அமதி..



எங்கிருந்தோ சந்ததி வளர்க்கவரும்
பட்டாம்பூச்சிக்காக ஒரு பூச்செடி வளர்த்தேன்
என் பட்டறையில்..

எதிரிக்காக வாலும், வாரிசுக்காக வாயும்கொண்டு
ஒரு பல்லியும் உலவிக்கொண்டிருக்கிறது உத்திரத்தில்,
பெய்த மழை நீரின் மிச்சத்தில்
வட்ட சுழற்சி தத்துவம், கனிவு, பாசம் என
வேண்டாதவைகள் மனதில் தேக்கி
ஆறறிவினால் கவலை எழுதிக்கொண்டிருக்கிறேன்..

என் இருப்பு சூழலை மாசுபடுத்துவதையும் பொறுத்துக்கொண்டு
சுவாசிக்க காற்றும் அவ்வப்போது நிரம்பிக்கொண்டுதானிருக்கிறது
உயிர் வளர்க்கும் வெற்றிடத்தில்.

மனமில்லாத குணங்கள் கொண்ட உயிர்களில் ஏனோ நான்
இரண்டும் கொண்டு ஏங்கிக்கொண்டிருக்கிறேன்..
பட்டாம்பூச்சியை பல்லி பிடிக்குமா? என்ற கவலை எனக்கு
பல்லி பிடித்தால் எனக்கு நீரூற்றுவானா? என்ற கவலை ஏதுமின்றி
பூத்துக்கொண்டேதானிருக்கிறது பூச்செடி..


.

38 comments:

sathishsangkavi.blogspot.com said...

//எதிரிக்காக வாலும், வாரிசுக்காக வாயும்கொண்டு
ஒரு பல்லியும் உலவிக்கொண்டிருக்கிறது உத்திரத்தில்,
பெய்த மழை நீரின் மிச்சத்தில்
வட்ட சுழற்சி தத்துவம், கனிவு, பாசம் என
வேண்டாதவைகள் மனதில் தேக்கி
ஆறறிவினால் கவலை எழுதிக்கொண்டிருக்கிறேன்..//

ரசித்து ரசித்து படிக்கிறேன் இந்த வரிகளை....

அன்புடன் நான் said...

கவிதை கடின நடையில் இருக்கு. மீண்டும் மீண்டும் படித்து புரிந்துக் கொண்டேன்... நல்லாயிருக்கு..... பாராட்டுக்கள்.

Paleo God said...

வாங்க சங்கவி.. மிக்க நன்றி..:)

---

வாங்க கருணா சார் என்ன இப்படி சொல்லிட்டீங்க..? :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லாயிருக்கு.....

நட்புடன் ஜமால் said...

பல்லி பிடித்தால் எனக்கு நீரூற்றுவானா? என்ற கவலை ஏதுமின்றி
பூத்துக்கொண்டேதானிருக்கிறது பூச்செடி]]

நல்லாயிருக்கு ...

சைவகொத்துப்பரோட்டா said...

காற்றுக்கும், பூச்செடிக்கும் எத்தனை பெரிய மனது!! :))

சாந்தி மாரியப்பன் said...

//என் இருப்பு சூழலை மாசுபடுத்துவதையும் பொறுத்துக்கொண்டு
சுவாசிக்க காற்றும் அவ்வப்போது நிரம்பிக்கொண்டுதானிருக்கிறது
உயிர் வளர்க்கும் வெற்றிடத்தில்//

எளிமையான வரிகளில் வட்டச்சுழற்சி தத்துவம். க்ளாஸ் !!!

ரிஷபன் said...

வாழ்க்கை தத்துவம்?!

நிலாரசிகன் said...

நல்லா இருக்கு ஷங்கர்.

Chitra said...

கவலை ஏதுமின்றி
பூத்துக்கொண்டேதானிருக்கிறது பூச்செடி..


..............எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறீர்கள்! அருமை.

எறும்பு said...

பல்லி பிடித்தால் எனக்கு நீரூற்றுவானா? என்ற கவலை ஏதுமின்றி
பூத்துக்கொண்டேதானிருக்கிறது பூச்செடி

உண்மைத்தமிழன் said...

ஏம்ப்பா..

இதுக்கெல்லாம் யாராச்சும் கோனார் நோட்ஸ் போட மாட்டீங்களா..?

உண்மைத்தமிழன் said...

ஐயையோ..

தெரியாம மைனஸ்ல குத்துறதுக்குப் பதிலா ப்ளஸ்ல குத்திட்டனே...!

Unknown said...

வாழ்க்கை சுழற்சில

செடியை பட்டாம்பூச்சி உணவாக்கும்
பட்டாம்பூச்சியை பல்லி உணவாக்கும்
பல்லியை நீங்களா??

நாடோடி said...

கவிதை நல்லா இருக்கு சங்கர்ஜி..

மரா said...

அண்ணே நீங்க ’நித்யாதியான்’ பயிற்சி பண்ணுவீங்களோ....கவிதை ‘சர்ரியலிஸமும் புப்ஸிகோலாவும்’ படிச்ச மாதிரி இருக்கு.....நன்றி

Ashok D said...

புல்
முடி

'பரிவை' சே.குமார் said...

நல்லாயிருக்கு..... பாராட்டுக்கள்

VISA said...

இந்த மாதிரி கவிதை எல்லாம் எனக்கு விளங்காது ஏன்னா நான் எட்டாம் வகுப்பு பெயில் நீங்க ஏழாம் வகுப்பு பாஸ்.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

புதுப்புது வார்த்தைகளை அறிமுகப்படுத்துகிறீர்கள்.பதிவு அழகு!

கலகலப்ரியா said...

ரொம்ப நல்லாருக்கு ஷங்கர்..

அண்ணாமலையான் said...

அருமை

தமிழ் உதயம் said...

கவலை ஏதுமின்றி
பூத்துக்கொண்டேதானிருக்கிறது பூச்செடி..


பூக்கள் குழந்தைகளை போல். எதற்கும் கவலைப் படுவதில்லை.

DREAMER said...

அருமை...

-
DREAMER

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நன்றாக இருக்கிறது..,

vasu balaji said...

பூவின் தேன் பட்டாம்பூச்சிக்கு உணவாயினும்
பட்டாம்பூச்சி பல்லிக்கு உணவாயினும்
நீரின்றி செடி வாடியே போயினும்
ஷங்கருக்கு கவிதை கேரண்டி:))

ஸ்ரீராம். said...

அமதி?

வாழ்க்கைச் சுழற்சி.

thiyaa said...

அருமையான கவிதை

ஜெட்லி... said...

//இதுக்கெல்லாம் யாராச்சும் கோனார் நோட்ஸ் போட மாட்டீங்களா..?
//

கரெக்ட்....!!

ரீப்பீட்...

க ரா said...

ரொம்ப நலலாருக்கு.

சீமான்கனி said...

//எங்கிருந்தோ சந்ததி வளர்க்கவரும்
பட்டாம்பூச்சிக்காக ஒரு பூச்செடி வளர்த்தேன்
என் பட்டறையில்..///

ஆரம்பமே அழகு...


மனமில்லாத குணங்கள் கொண்ட உயிர்களில் ஏனோ நான்
இரண்டும் கொண்டு ஏங்கிக்கொண்டிருக்கிறேன்..
பட்டாம்பூச்சியை பல்லி பிடிக்குமா? என்ற கவலை எனக்கு
பல்லி பிடித்தால் எனக்கு நீரூற்றுவானா? என்ற கவலை ஏதுமின்றி
பூத்துக்கொண்டேதானிருக்கிறது பூச்செடி..

அருமையா வந்திருக்கு ஷங்கர்...

ஒரு சின்ன வேண்டுகோள் உங்கள் பக்கம் லோட் ஆக சமையம் அதிகம் பிடிக்கிறது...

Vidhoosh said...

ஆயாச்சு... ஆயாச்சு.. கவிஞரா ஆயாச்சு...வாழ்த்துக்கள்.

Priya said...

நல்லா இருக்கு... வாழ்த்துக்கள்.

நசரேயன் said...

//என்ற கவலை ஏதுமின்றி
பூத்துக்கொண்டேதானிருக்கிறது பூச்செடி..//

அந்த பூ கிட்ட கவுஜையை படிச்சி காட்டுனீங்களா?

Thenammai Lakshmanan said...

//மனமில்லாத குணங்கள் கொண்ட உயிர்களில் ஏனோ நான்
இரண்டும் கொண்டு ஏங்கிக்கொண்டிருக்கிறேன்..//

அருமை ஷங்கர்

kavya said...

கவிதை நடை அழகு...மனதைத் தொட்டு செல்கிறது கவிதை...

பத்மா said...

கிளாஸ் ஷங்கர் .
எதிர்பார்ப்பு இல்லாமல் பூக்கிறது செடி
எதிர்பார்க்கும் போது தான் வேதனையே .
கவலை இல்லையே என்று கவலை படும் நல் இதயம் உங்களுக்கு

Radhakrishnan said...

மிகவும் அருமையாக இருக்கிறது. சிறைப்படுத்தப்பட்ட செடியின் கவலை அநாவசியமானதும் கூட.