சென்ற பதிவிற்கு ஆதரவு அளித்த நண்பர்களுக்கு நன்றி. பல வருடங்களாக வித விதமாய் வரும் அது போன்ற மெயில்களை அழித்துவிடுவேன். ஆயினும் இன்றும் இது தொடர்கிறதென்றால், இன்னும் அப்பாவி (அல்லது பேராசை) மக்கள் இவர்களின் வலையில் விழுகிறார்கள் என்றே தெரிகிறது. சில பின்னூட்டமும், மெயில்களும் அதனை உறுதி செய்தது. (நண்பர்களின் நலன் கருதி அவற்றை நான் வெளியிடவில்லை) மற்றபடி தாமதத்திற்கு ஓர் மன்னிப்பு பிளீஸ்..:))
---
சென்னை இணைய எழுத்தாளர்கள் குழுமம் சந்திப்பு பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன். சனிக்கிழமை சந்திப்பில் அனைவரையும் காண ஆவலாய் இருக்கிறேன். நல்ல துவக்கமாய் அமைய வாழ்த்துகளும், ஆவலும்..
நாள் : 27/03/10
கிழமை ; சனிக்கிழமை
நேரம் : மாலை 6 மணி
இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
6. முனுசாமி சாலை,
மேற்கு கே.கே.நகர்.
சென்னை:
தொடர்புக்கு
மணிஜி :9340089989
M.M.Abdulla -9381377888
cablesankar -9840332666
லக்கிலுக்: 9841354308
நர்சிம் ; 9841888663
பொன்.வாசுதேவன் : 9994541010
--
கீழே உள்ளதிற்கும் ஜெட்லிக்கு நான் சொன்ன கவிதை எழுதவது எப்படிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. :))
பச்சைய நாக்குகள் கருகி நிறைந்திருந்த அடர்கானகத்தில்
என் பாதங்களின் அழுத்த ஒலிச்சிதறல்களில்
குளுமையை அனுபவித்தவாறே
கோடாலிகொண்டு விறகெறிக்க வாகாயிருக்கும்
மரத்தினைத் தேடி அலைகின்ற கண்களுக்கு
விறைத்திருக்கும் அரிசி வேகவைக்கும்
சிந்தனையில் போதி மரமும் பொருட்டாயில்லை..
------------
ராஜ கோபுரம்
அண்ணாந்து தரிசனம்.
சிறியதாக்கும் ஒரு மலை
அதையும் தொழச்சொல்லிய ஒரு கட்டளையில்
முடிவில்லா வெளி
கோடுகளாலான
அளவுகளை நகைத்துக்கொண்டிருக்கலாம்..
.



22 comments:
Post a Comment