பலா பட்டறை: சின்ன சின்ன கவிதைகள் ..

சின்ன சின்ன கவிதைகள் ..





காதலுக்கானதாய் 
ரோஜா இருப்பதில் 
வியப்பில்லை 
சரி என்றால் பூ உனக்கு 
வேண்டாம் என்றால் முள் எனக்கு ..

-------

வரம் கிடைக்குமா?
என்று தெரியாமல்  
பகுத்தறிவே 
தடுமாறும். 
இல்லாத கடவுளுக்கும், காதலுக்கும் 
பூ கொண்டு போவதை.. 

--------

ஏனோ காதல் தின 
சிகப்பு இருதய 
பலூன்களும், 
ரோஜாக்களும் தன் 
வடிவத்தை இழந்து விடுகின்றன 
மற்ற தினங்களைப் போலவே! 
இலவு காத்த கிளிக்கதை 
இன்னும் முடியவில்லை... 


Happy Valentines Day ..::))

36 comments:

Unknown said...

இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்

வல்லிசிம்ஹன் said...

இலவு காத்த கிளிகளுக்கு மெரினா கண்ணில் படுவதில்லை.ஆயிரம் ஆயிரம் சினிமாக் காதலர்கள் அங்கே நாடகம் போட்ட வண்ணம் இருக்கின்றனர். கைபேசிகளும் முகம் மறைத்த துப்பாட்டாக்களும் கதை பேசிவிட்டுக் காற்றில் கரைந்து விடுகின்றன.

Paleo God said...

@சிநேகிதி..
வாங்க சிநேகிதி.. உங்களுக்கும் வாழ்த்துக்கள்..:)


@வல்லிசிம்ஹன்..
வாங்க மேடம். நீங்க சொல்றது சரிதாங்க..:)

சைவகொத்துப்பரோட்டா said...

ஒன்னாவது எனக்கு பிடிச்சிருக்கு, வாழ்த்துக்கள் ஷங்கர்.

செ.சரவணக்குமார் said...

மூன்று கவிதைகளுமே வெகு அழகு ஷங்கர்.

நாடோடி said...

//காதலுக்கானதாய்

ரோஜா இருப்பதில்
வியப்பில்லை
சரி என்றால் பூ உனக்கு
வேண்டாம் என்றால் முள் எனக்கு ..///

நல்ல கவிதை....வாழ்த்துக்கள்

ஜெட்லி... said...

ஹலோ...என்னது இது..புதுசா trade mark எல்லாம்??
இல்ல TMக்கு வேற அர்த்தம் இருக்கா??

அகநாழிகை said...

நல்லாயிருக்குங்க கவிதை.

அதென்ன இதயத்தை நாய் கவ்வியிருக்கறா போல படம். :)

புலவன் புலிகேசி said...

மூன்றும் சூப்பர்..இரண்டில் உள்ளது டச்...

vasu balaji said...

நல்லாருக்கு எல்லாம்:)

Starjan (ஸ்டார்ஜன்) said...

இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்.

கவிதைகள் மிக அருமை

அம்பிகா said...

\\அகநாழிகை said...
அதென்ன இதயத்தை நாய் கவ்வியிருக்கறா போல படம். :)\\
கவிதைகள் நன்றாக உள்ளன.

Ramesh said...

நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்
//சரி என்றால் பூ உனக்கு
வேண்டாம் என்றால் முள் எனக்கு ..//

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

வாழ்த்துக்கள் ஷங்கர்...

அண்ணாமலையான் said...

காதல வளக்க உதவும் கவிதைகள்.... நல்லாருக்கு

சாந்தி மாரியப்பன் said...

கவிதைகள் வெகு அழகு.

ஸ்ரீராம். said...

ஒருவருக்கு வலிக்கும் என்ற எண்ணமே அடுத்தவருக்கு வலிக்கும் காதலா பூ உனக்கு முள் எனக்கு...கவிதைகள் அருமை

பா.ராஜாராம் said...

மூன்றுமே ரொம்ப பிடிச்சிருக்கு ஷங்கர்!

தமிழ் உதயம் said...

அழகின் சிரிப்பாக மலர்ந்து இருந்தது, காதல் கவிதைகள்

ரிஷபன் said...

காதல்தான் கடவுள்..

ஹேமா said...

மூன்றுமே வரிகள் உணர்வோடு.
வாழ்த்துக்கள் ஷங்கர்.

Chitra said...

வரம் கிடைக்குமா?
என்று தெரியாமல்
பகுத்தறிவே
தடுமாறும்.
இல்லாத கடவுளுக்கும், காதலுக்கும்
பூ கொண்டு போவதை..


........... :-)

கலகலப்ரியா said...

ஆஹா... ரெண்டும் நெம்ப நல்லாருக்கு... வல்லிசிம்ஹன் பதிலும் சூப்பரு....

நசரேயன் said...

//
காதலுக்கானதாய்
ரோஜா இருப்பதில்
வியப்பில்லை
சரி என்றால் பூ உனக்கு
வேண்டாம் என்றால் முள் எனக்கு ..
//

சரி தலைவா

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

காதல் கவிதைகள்.பிப்ரவரி மாதம் முழுதும் வலைப்பூக்களுக்கு காதல் ஜுரமா? நடத்துங்க,
நடத்துங்க!
நா அப்புறம் வர்றன்

பாலா said...

குஷ்டமப்பா..........!!!!!!!!!! :)

cheena (சீனா) said...

பூ உனக்கு முள் எனக்கு

இல்லாத கடவூளுக்கும் காதலுக்கும் பூ

இலவு காத்த கிளி

அத்தனையும் தோல்வி பற்றிய கவிதைகளாயினும் அருஅமி - ரசித்தேன் - நன்று

விஜய் said...

மூன்று அழகு

மூன்றாவது அழகோ அழகு

வாழ்த்துக்கள் நண்பா

விஜய்

ராமலக்ஷ்மி said...

சின்னச் சின்ன கவிதைகள் மூன்றுமே அருமை.

ப்ரியமுடன் வசந்த் said...

காதலுக்கானதாய்
ரோஜா இருப்பதில்
வியப்பில்லை
சரி என்றால் பூ உனக்கு
வேண்டாம் என்றால் முள் எனக்கு ..
//

இதுல பொருட்குற்றம் இருக்கு ஷங்கர்
எனக்கு தெரில தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா...

ப்ரியமுடன் வசந்த் said...

ஏனோ காதல் தின
சிகப்பு இருதய
பலூன்களும்,
ரோஜாக்களும் தன்
வடிவத்தை இழந்து விடுகின்றன
மற்ற தினங்களைப் போலவே!
இலவு காத்த கிளிக்கதை
இன்னும் முடியவில்லை...
//

க்ளாஸ்...

காதலர் தின வாழ்த்துக்கள் நெம்ப லேட்டாயிடுச்சுப்பா ...

Thenammai Lakshmanan said...

//இல்லாத கடவுளுக்கும், காதலுக்கும்
பூ கொண்டு போவதை..//

Excellent Shankar

Paleo God said...

சைவ.கொ.ப. - நன்றிங்க :)
சரவணக்குமார் - நன்றிங்க :)
நாடோடி - நன்றிங்க :)
ஜெட்லி - நன்றி ஜெட்லி - சும்மா..:)
அகநாழிகை - மனசுங்க..:) நன்றிங்க:)
புலிகேசி - நன்றி புலவரே :)
வானம்பாடிகள் - நன்றி சார்..:)
ஸ்டார்ஜன் - நன்றிங்க
அம்பிகா - நன்றிங்க :))
நாளைப்போவான் - நன்றிங்க :))
அண்ணாமலையான் - நன்றிங்க :))
அமைதிச்சாரல் - நன்றிங்க :))
T.V.ராதாகிருஷ்ணன் - நன்றி சார் :))
ஸ்ரீராம் - நன்றிங்க :))
பா.ரா - வாங்கண்ணே மிக்க நன்றி :))
தமிழ் உதயம் - நன்றிங்க :))
ரிஷபன் - நன்றி நண்பா :))
ஹேமா - நன்றிங்க :))
பழைமைபேசி - நன்றிங்க :))
சித்ரா - நன்றிங்க சகோதரி :))
கலகலப்ரியா - வாங்க, நன்றிங்க :))
நசரேயன் - நன்றிங்க :)) யாருங்க ??
க.நா.சாந்தி லெட்சுமணன் - நன்றிங்க :))
ஹாலிபாலி - காந்தா அக்கா அண்ணன் கூப்டுறாரு:) நன்றிங்க :))
சீனா ஐயா - வாங்க ஐயா மிக்க நன்றி :))
விஜய் - நன்றி நண்பா :))
ராமலக்ஷ்மி - நன்றிங்க :))
வசந்த் - எனக்கும் தெரியல கண்டிப்பா சொல்லுங்க வசந்த் மாத்திடலாம். மிக்க நன்றி வசந்த்.:)
தியாவின் பேனா - வாங்க ::) மிக்க நன்றி:)
தேனம்மைலக்ஷ்மணன் - மிக்க நன்றிங்க..:))

கே. பி. ஜனா... said...

மூன்றுமே முத்தான கவிதைகள்.
மூன்றாவது கவிதையில் 'தன்
வடிவத்தை' என்பது தம் வடிவத்தை என்று வந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன், சரியா?

துபாய் ராஜா said...

முத்துக்கள் மூன்று.

துபாய் ராஜா said...

முத்துக்கள் மூன்று.