பலா பட்டறை: வட்டம்..

வட்டம்..



காலம் யாருக்காவும் காத்திருப்பதில்லை
நொடிகளின் இடைவெளி சிறிதாய் இருந்தாலும்
யுகங்கள் கடந்து நடந்து கொண்டே இருக்கிறது

மேலும் கீழுமாய் ஒரே இடத்தில்
சுற்றிக்கொண்டே
வட்ட கடிகாரத்தில் வாழ்க்கை தத்துவம்

எனக்கு முன்னாலும் சந்ததிகள் இருந்தது
எனக்குப் பிறகும் இருக்கலாம்
சின்ன சின்ன அடியெடுத்து
யுகங்களின் பயணங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது

எச்சங்கள் சில படங்களாய் சுவற்றில்
மிச்சங்கள் சில மனதுக்குள்
உலகம் புரிய விழையும் என் மகனும்
அவனுக்கான படமெடுக்க ஆயத்தமாய்...

நொடி முள் நிற்கவே இல்லை..



.

37 comments:

Chitra said...

சிந்திக்க வேண்டிய கருத்து கொண்ட கவிதை. அருமை.
அந்த கடிகாரம், மணியைதான் காட்டுகிறதா?

சாந்தி மாரியப்பன் said...

//எனக்கு முன்னாலும் சந்ததிகள் இருந்தது
எனக்குப் பிறகும் இருக்கலாம்
சின்ன சின்ன அடியெடுத்து
யுகங்களின் பயணங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது//

அருமையான வரிகள்!!

சசிகுமார் said...

அருமையான பகிர்வு நண்பா, தொடர்ந்து எழுத என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

vasu balaji said...

/எச்சங்கள் சில படங்களாய் சுவற்றில்
மிச்சங்கள் சில மனதுக்குள்
உலகம் புரிய விழையும் என் மகனும்
அவனுக்கான படமெடுக்க ஆயத்தமாய்... /

classic.

நாடோடி said...

தத்துவம் நல்லா இருக்கு....

நாடோடி said...

தத்துவம் நல்லா இருக்கு....

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

உங்களுக்குப்பின்னும் நிறைய சந்ததிகள் வளர வாழ்த்துக்கள் ஹை! இன்னிக்கு நாந்தான் ஃபர்ஸ்ட்.

சைவகொத்துப்பரோட்டா said...

ஆமா, இந்த நொடி முள் நிற்கவே கூடாது :))

தமிழ் உதயம் said...

உண்மைதான். வட்ட கடிகாரத்தில் தான் வாழ்க்கை தத்துவம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நொடி முள் நிற்கவே இல்லை..//

நான் எழுதிய அரை மணி நேர நாடகம் ஒன்று.தூர்தர்ஷனில் ஒலி/ஒளி பரப்பானது.ஏ.ஆர்.எஸ்., நடித்தது.மனிதன் காலம் முழுதும் சோம்பலின்றி உழைக்க வெண்டும் என்ற கருத்தைச் சொன்ன நாடகம். நாடகத்தின் பெயர்.."விநாடி முள்"..அதுபோல நொடி கூட வீணாக்கக்கூடாது என்றிருந்தேன்.

பிரபாகர் said...

ஷங்கர்,

கவிதை யதார்த்தமா இருக்கு. ஹைதையிலிருந்து வந்ததும் கால் பண்ணுங்க!

பிரபாகர்.

க.பாலாசி said...

//எச்சங்கள் சில படங்களாய் சுவற்றில்
மிச்சங்கள் சில மனதுக்குள்
உலகம் புரிய விழையும் என் மகனும்
அவனுக்கான படமெடுக்க ஆயத்தமாய்...//

ஆழப்பதிந்த வரிகள்...ரசித்தேன்...

ஜெட்லி... said...

இதை தான் திருமலை படத்தில்
விஜய் முன்னாடியே சொன்னார்...
"வாழ்க்கை ஒரு வட்டம்னு..."!!

Ashok D said...

//இதை தான் திருமலை படத்தில்
விஜய் முன்னாடியே சொன்னார்...
"வாழ்க்கை ஒரு வட்டம்னு..."!!//
இக்கி இக்கி... கீழியிருக்கவன் மேலபோறான் மேலயிருக்கறவன் கீலவர்றான்...

ஷங்கர் time பாக்கறத விட்டுறனும் :)

Starjan (ஸ்டார்ஜன்) said...

யதார்த்தமான கவிதை நல்லாருக்கு ...

அண்ணாமலையான் said...

மிக அழகான கவிதை... வாழ்த்துக்கள்...

தராசு said...

அருமை அருமை,

அடிச்சு ஆடுங்க.

Vidhoosh said...

:)

Prathap Kumar S. said...

கவிதை சூப்பர்... ஷங்கர் ஜீ படத்துக்காக கவிதையா? கவிதைக்காக படமா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வருடங்களைக் காட்டும் கடிகாரமா அருமையா இருக்கே..

கவிதையும் அழகு..

ஹேமா said...

மனதில் வரும் இப்படியான எண்ணங்களை சரியாகக் கோர்த்து என்னால் எழுதமுடியவில்லை.
நீங்கள் அழகாக எழுதியிருக்கிறீர்கள் ஷங்கர்.உண்மை.

விக்னேஷ்வரி said...

ரொம்ப நல்லாருக்கு ஷங்கர்.

எச்சங்கள் சில படங்களாய் சுவற்றில்
மிச்சங்கள் சில மனதுக்குள் //
இது ரொம்பப் பிடிச்சிருக்கு.

Thenammai Lakshmanan said...

//எச்சங்கள் சில படங்களாய் சுவற்றில்
மிச்சங்கள் சில மனதுக்குள்//

எச்சங்களும் மிச்சங்களும் என்றென்றும் உண்டு சங்கர்

புலவன் புலிகேசி said...

//எச்சங்கள் சில படங்களாய் சுவற்றில்
மிச்சங்கள் சில மனதுக்குள்
உலகம் புரிய விழையும் என் மகனும்
அவனுக்கான படமெடுக்க ஆயத்தமாய்...
//

இங்கதான் டச்சிங்...சூப்பர்

ரிஷபன் said...

வாழ்க்கை வட்டத்தில் ஒளி வட்டம் தேடும் தவிப்பு..

Ramesh said...

///நொடி முள் நிற்கவே இல்லை..////
ம்ம்ம காலச்சக்கரம் ...

Radhakrishnan said...

மிகவும் அருமையாக இருக்கிறது.

பழமைபேசி said...

அது நிக்கவே நிக்காது... நமக்குள் ஒன்னு இருக்கே? அது என்னைக்காவது ஒரு நொடி, அந்த நொடியில நின்னுடும் சொல்றாய்ங்க....

Jerry Eshananda said...

வட்டம் மனசுக்குள் சுற்றுகிறது.

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு ஷங்கர்!

Paleo God said...

சித்ரா - மணியையும்..:)) நன்றிங்க :)
அமைதிச்சாரல் - மிக்க நன்றி:))
சசிகுமார் - வாங்க மிக்க நன்றிங்க..:))
வானம்பாடிகள் - நன்றி சார் :))
நாடோடி - நன்றி நண்பா :))
க.நா.சாந்தி லெட்சுமணன் - நன்றிங்க :)) நீங்க ஆறாவதா பர்ஸ்ட்:))
சை.கொ.ப - சரிதாங்க ;;)
நாளைப்போவான் - ரைட்டு :))
தமிழ் உதயம் - ஆமாங்க மிக்க நன்றி:))
T.V.ராதாகிருஷ்ணன் - அப்படிங்களா ? இப்ப எல்லா நாடகங்களும் மணிக்கணக்குல வீணாக்குது..:) நன்றிங்க!:)
பிரபாகர் - வாங்க பிரபா - மிக்க நன்றி நண்பரே ::))
க.பாலாசி - வாங்க பாலாசி மிக்க நன்றி :)
ஜெட்லி - வேற ஒன்னும் சொல்லலியா ? நல்ல காலம் :))
அசோக் : ரைட்டுண்ணா:))
ஸ்டார்ஜன் - நன்றி நண்பரே :)
அண்ணாமலையான் - நன்றி தல :)
தராசு : வாங்க தல சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி :)) ரைட்டு ::)
விதூஷ் - வாங்க வித்யா மேடம். மிக்க நன்றிங்க .:))
பிரதாப் - எழுதிட்டுத்தான் படம் தேடறது :) நன்றி பிரதாப்::)
முத்துலெட்சுமி - மிக்க நன்றிங்க ::))
ஹேமா - சும்மா கத விடாதீங்க :)) மிக்க நன்றி :))
விக்னேஸ்வரி - வாங்க சகோதரி, மிக்க நன்றிங்க :))
தேனம்மை - ஆமாங்க, மிக்க நன்றி ::)
புலவன் புலிகேசி - நன்றி புலவரே..:))
ரிஷபன் - சரியா சொன்னீங்க தோழா ::))
றமேஸ் - அதேதான் நன்றி :))
v.Radhakrishnan - வாங்க மிக்க நன்றிங்க:))
பழமைபேசி - நின்னாலும் அது நமக்கு மட்டும்தானே ::)) நன்றிங்க.:))
ஜெரி - வாங்க நண்பரே நன்றி :)
பா.ராஜாராம் - வாங்க. மிக்க நன்றிண்ணே :))

ப்ரியமுடன் வசந்த் said...

அண்ணா ம்ம் தொடர்ச்சியா ரன்ரேட் எகிறுது அம்புட்டுத்தேன் சொல்வேனாக்கும்...

திவ்யாஹரி said...

//எச்சங்கள் சில படங்களாய் சுவற்றில்
மிச்சங்கள் சில மனதுக்குள்//

மனதை கொள்ளை கொள்ளும் வரிகள் அண்ணா..

சீமான்கனி said...

வட்ட கடிகாரத்தில் வாழ்க்கை தத்துவம்...நல்லாருக்கு...

7..7..7...

கே. பி. ஜனா... said...

காலம் பற்றிய கவிதையின் நாலு காலமும் (column) நல்லா இருக்கு!
-- கே .பி . ஜனா

Priya said...

//மேலும் கீழுமாய் ஒரே இடத்தில்
சுற்றிக்கொண்டே
வட்ட கடிகாரத்தில் வாழ்க்கை தத்துவம்//.....ரொம்ப நல்லா இருக்கு!

கமலேஷ் said...

ரொம்ப அழகான கவிதை...