பலா பட்டறை: இதுதான் 'அது'

இதுதான் 'அது'



'அது' மேலே இருக்கும் ஆயிரத்தில் ஒருவன் டிக்கெட். இப்ப போய் விமர்சனம்னு எழுதினா அடிக்க வருவீங்க. நீங்களா படிச்ச என்னோட மொக்கைகள் நிறைய இருக்கலாம். ஆனா இதுதான் என்னோட மொத மொக்கை :)

சத்யம் போய் வருடங்கள் ஆச்சு, நெட்ல டிக்கெட் புக் பண்ணி (ஒரு பாப்கார்ன் சேர்த்து!) தியேட்டர் எப்படி மாறி இருக்குன்னு பார்க்கவும், ஆ.ஒ படத்த பார்க்க போனேன். படம் விமர்சனம் வேண்டாம், கடைசியில் a film by selvaraagavan அப்படிங்கறது எனக்கென்னமோ இந்த படத்துக்கான பிலிம் செல்வராகவன் வாங்கி கொடுத்ததை சொல்றாருன்னுதான் நினைக்கிறேன்.

அரங்கு நிறைந்திருந்தது. பல காட்சிகளில் மக்கள் இன்னும் விசில் அடிக்கிறார்கள், சிரிக்கிறார்கள். நிறைய காட்சிகளில் இன்னும் கூச்சலான கமென்ட் அடிக்கிறார்கள் (நொந்து போய்) தமிழ் படத்தில் புதிய முயற்சி என்பதெல்லாம் ஓவர் என்று நினைக்கிறேன், என்னை போல சினிமா தெரியாதவனிடம் யாராவது கேட்க்கும் பணம் கொடுத்து படமெடுக்க சொன்னால் ...

"சார் அந்த படத்துல ... அப்படின்னு ஆரம்பிச்சு .. மியூசிக், ஆர்ட், கேமரா, எல்லாரிடமும்  

 ஒரு சீன் வருமே அதே மாதிரி வைக்கணும்"
"அந்த மியுசிக் மாதிரி ஒரு பிட் "
"சார் புல் முகம் தெரியிற மாதிரி டைட் 'க்ளோஸ் அப்'ல இவங்க முகம் தெரியணும்.."
"சார் கப்பல மேலேருந்து காமிப்பாங்களே அந்த மாதிரி மூணு ஷாட்"
                          
இப்படித்தான் படமெடுத்திருப்பேன்.. இப்படித்தான் இந்த படமும் எனக்கு படுகிறது. ஒருவேளை செல்வா நிர்பந்தகளின் காரணமாய் இப்பிடி எடுத்தாரா??

ரீமாசென் முதன் முதலாய் பார்திபனை பார்த்து தன் முதுகில் புலி சின்னம் காட்டி அந்த கால தமிழில் பேசும்போது எனக்கு தொண்டை அடைத்து கண்களில் நீர் வந்தது சத்தியமாய் ஏன் என்று தெரியவில்லை! படம் முழுக்க இப்பிடி செய்யவைத்திருக்க வேண்டிய களம் ப்ச்...  

அடுத்த படமும் பார்ப்பேன் செல்வராகவன் உங்கள் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதல்ல இன்னும் உங்கள் படம் பார்க்க மக்கள் வருகிறார்கள் உங்களை மதித்து.....                  


போன பதிவுக்கு பதிலளித்த நண்பர்களுக்கு நன்றி. இந்த படத்துக்கான விமர்சனம் இப்படியும் இருந்திருந்திருக்கலாம். இது புரிந்தால் படம் பாருங்கள் என்று நான் சொல்லி இருப்பேன்..:))) யாரும் திட்டாதீங்க ப்ளீஸ் நான் பாவம்..:))           

வாத்தியார் இந்த பதிவுக்குதானே நீங்க மைனஸ் குத்தனும்??:)
.      
பி.கு. மொத காட்சி பார்த்துட்டுதான் விமர்சனம் எழுதனும்னு சட்டமா???? 

38 comments:

Vidhoosh said...

auto varuthu NGNA ...

Vidhoosh said...

check your template with someone who knows html editing. all that are listed in the second column/sidebar are gone :(

CS. Mohan Kumar said...

இதான் மேட்டரா? ரைட்டு.. ஆனா என்ன பில்ட் அப்பு!!

சங்கர் said...

நீங்க கவிதையே எழுதுங்க, 'இது'க்கு 'அது'வே பரவால்ல (நேர்ல கேட்டாவது அர்த்தம் புரிஞ்சிக்குறேன் )


இது போன பதிவுக்கான பின்னூட்டம், நேற்று இணைய இணைப்பு படுத்திய பாட்டில், இன்று இங்கே இடுகிறேன்

Chitra said...

நாட்டாமை தீர்ப்பு: உங்களை "அது" படத்தை இன்னொரு முறை பார்க்க வைக்க வேண்டும்.

ஜெட்லி... said...

நடத்துங்க....

கார்க்கிபவா said...

நான் நினைச்சேன் சகா. ஆனா அசல் படம்னு நினைச்சேன்.. :)))

நாம சொன்னா சினிமா பத்தி உனக்கு என்ணடா தெரியும்ன்னு கேட்கறாங்க

butterfly Surya said...

ஒ. இது அதானா..?? நான் அதோன்னு நினைச்சேன்.

எதுவாயிருந்தாலும் நல்லது தான்..

Anonymous said...

:)) நல்லவேளை இப்பவாவது எழுதினீங்க:))

ஸ்ரீராம். said...

கவுத்துட்டீங்களே ...

நாடோடி said...

போன பதிவுக்கு கடைசியா வந்து பின்னுட்டம் போட்டாலும் கரெக்டா போட்டேன் பார்த்தீங்களா..அதை பற்றி ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்..ம்ம்ம் ஒகே...

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

ஆனாலும் ஓவர் பில்டப்பு.சஸ்ப்நென்ஸ் தாங்கல

vasu balaji said...

தற்கொலைக்கு தூண்டுறது சட்டப்படி குற்றம் ஷங்கர்:)

சைவகொத்துப்பரோட்டா said...

ஹையோ...ஹையோ... என்ன கொடுமை சார் இது :))

Unknown said...

இதெல்ல்லாம் ரொம்ப ஓவரு...,

பிரபாகர் said...

அது தானா இது? எப்பா சாமி, இப்படியா சுத்தல்ல விடுவீரு? ஆசானும் நானும் என்னமா குழம்பி, ஏதேதோ நினச்சி... நேர்ல இருக்கு சேம் பிளட் இதுக்கு பதில்! நடத்துங்க!

பிரபாகர்.

sathishsangkavi.blogspot.com said...

ஷங்கர் அவ்வளவுதானா?

Rajan said...

நான் எதுனா தப்பான எடத்துக்கு வந்துட்டனா ?!

Priya said...

//அடுத்த படமும் பார்ப்பேன் செல்வராகவன் உங்கள் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.//...உங்க நம்பிக்கை எனக்கு புடிச்சிருக்கு:-)

Rajan said...

அவ்வ்வ்வவ் .... மாடரேசன்லாம் வெச்சா நா அப்பால கமெண்டே போடமாட்டேன் ! போங்க உங்க பேச்சு கா !

செ.சரவணக்குமார் said...

அதுதானா 'இது' ரைட் ஷங்கர்ஜி.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நான் அப்பவே சொல்லல..
எனக்கு முன்னாடியே தெரியும் அப்பு...

டவுசர் பாண்டி said...

ஐயோ !! இன்னா தல , நீங்க கூடவா ? இப்பிடி சொல்றது !! போங்க தல !! சில எடம் தவிர எல்லாமே நல்லாத்தான் கீது இன்னு என்னோட நெனப்பு , ஏனோ உங்களுக்கு மட்டும் இல்ல சில பேருக்கு புடிக்கல , எனக்கு ரொம்பவே
புட்சிது தல !! காரணம் எனக்கு
தெரில !!

புலவன் புலிகேசி said...

அய்யய்யோ முடியல...யாராவது காப்பாத்துங்கப்பா...

creativemani said...

ஐயய்யோ.... இது... நெஜ போலீஸ் ஸ்டேஷனா??? ;)

Unknown said...

ஐயா, நாந்தான் கரெக்டா சொன்னேன்.. வடை எனக்குத்தான்.. :)))

Unknown said...

அதோட உங்களோட ‘அது’வே எனக்குப் புரிஞ்சதால, எனக்கு உண்மையான அதுவும் புரிஞ்சிருச்சின்னு அர்த்தம் எடுத்துக்கலாமா...

“ஆயிரத்தில் ஒருவன் படத்தைப் புரிந்து கொண்ட முகிலன் பாண்டியர் வாழ்க வாழ்க”

“நோ நோ இப்பிடி மத்தவங்க வீட்டுக்குள்ள எல்லாம் வந்து சத்தம் போடப்பிடாது.. தொண்டர்களெல்லாம் வெளிய போங்க..”

Paleo God said...

முகிலன்..

அப்ப நீங்க சோளர் இல்லையா? படத்துல அப்படித்தான் சொல்றாங்க..:)

அமெரிக்காவுல இருக்கறதுனால நீங்க முகில சோளர் (corn) தான் :))

ஹும்ம் எப்படித்தான் கண்டுபிடிக்கிரீங்களோ..:) அடுத்தமுறை பார்க்கலாம்!

பாலா said...

யோவ்...

ஆஃபீஸுல.. வருஷத்துக்கு ஒருமுறைதான் வேலை கொடுக்கறாங்க. அந்த பிஸிலயும்.. இந்த பதிவெல்லாம் படிக்கலாம்னு வந்தா...

உங்களோட ‘அது’வை கட் பண்ணி காக்காவுக்கு போடணும்......!!!!!! :) :) :)

Romeoboy said...

இதுவா அது. நான் வேற எதுவோன்னு நினைச்சிட்டேன்.

கலகலப்ரியா said...

கொற்றமே... உற்றமே... என் சுற்றமே... இதற்கு முன்னைய இடுகையில் கலகலப்ரியாவின் பெயரிட்டு அனுப்பிய ஓலையில் கலகலப்ரியா கையொப்பமிடவில்லை.. சோழ இனச் சின்னமில்லை.. யாரோ பாண்டியர்கள் செய்த சதி... நம்பி ஏமாந்து விடாதீர்கள்...

கலகலப்ரியா said...

ஆ... கையொப்பம் மறந்து விட்டேன்... லகலகலகலக... ச்ச்சங்....(சின்னம்..)

Paleo God said...

//கொற்றமே... உற்றமே... என் சுற்றமே...//

ஆஹா இந்த தமிழ் என் பக்கம் கிடைக்க என்ன தவம் செய்தனை...

மிக்க நன்றி சகோதரி

சோழம் சோழம் சோழம் !

கலகலப்ரியா said...

//
மிக்க நன்றி சகோதரி

சோழம் சோழம் சோழம் !//

அது சோளம் சோளம் சோளம்... நீங்க பாப் கார்ன்தானே சாப்டீங்க...

'பரிவை' சே.குமார் said...

//அடுத்த படமும் பார்ப்பேன் செல்வராகவன் உங்கள் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. //

உண்மைதான் ஷங்கர்.. செல்வாவின் திறமை இதில் வீணாக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது. மேலும் கார்த்திக்கிடம் இன்னும் பருத்திவீரன் வாசனை இருக்கிறது போலும் (அமீரிடம் சண்டையிட்டாலும்...)
நேற்று படித்து குளம்பினேன்... அதனால் பின்னூட்டம் இடவில்லை... நல்லாயிருக்கு உங்க படைப்பும்... விமர்சனமும்... நன்றி

கமலேஷ் said...

வர வர உங்க அட்டூழியத்துக்கு ஒரு அளவு இல்லாம போச்சு...நடத்துங்க...

Thenammai Lakshmanan said...

எங்கே ஓட்டுப் பெட்டி முதல் முறையா மைனஸ் ஒட்டுப் போடுறது எப்பிடின்னு இங்கே டெஸ்ட் பண்ணிப்பார்ப்போம்
நர நர நர ஒண்ணுமில்லை ஷங்கர் பல்லைக் கடிகுறேன்

திவ்யாஹரி said...

//அடுத்த படமும் பார்ப்பேன் செல்வராகவன் உங்கள் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.//

righttu..

"நர நர நர ஒண்ணுமில்லை ஷங்கர்"
same blood anna..