பலா பட்டறை: உச்சீவி..

உச்சீவி..



ல கோடி ஆண்டுகள் முன்
மண்ணிற் புதைந்த திட உயிர்களின்
திரவம் உறிஞ்சி மண்ணுள் இருந்த
கனிமங்களின் சேர்க்கையில் அரை வட்ட
கடிவாளம் முறுக்கி லாடமில்லா
புரவியின் இரு வட்ட கால்கள் கொண்டு
மரபணுக்கள் மாற்றிய மண் வாசனை
கழுவப்பட்ட ஆகாரம் மென்றுறிஞ்சி
உமிழ்நீரும் கெட்ட, உடல் குருதியும்
நஞ்சான ஒரு நாளின் பயணத்தில்
பிறவியின் முடிவில் வரும் புகையது
புரவியின் பின்னால் போக்கிக்கொண்டிருந்தது...


------------------------------


ண்ணத்துப்பூச்சியின் இறக்கை
கண்களுக்கு மட்டுமா விருந்து
பல்லிக்கும்தானே என்ற கவிதை
நெய்த பகலின் சாப்பாடு
தொட்டியில் விசிறிய கணத்தில்
சோற்றோடு விழுந்த
விரைத்த பல்லியை விளிம்பில் ஒரு காகம்
பொன் குஞ்சு கூட்டின் நினைவில்
முதலில் எதை கொத்துவதென்ற யோசனையில்
பூனையும், நாயும் முதல் சண்டையை
ஆரம்பித்திருந்தது...    




.

36 comments:

Paleo God said...

நானும் கொஞ்சம் எழுதுகிறேன்..:))

மணிஜி said...

நானும் கொஞ்சம் பின்னூட்டுகிறேன்!

அண்ணாமலையான் said...

very gud....

சங்கர் said...

என்ன ஆச்சு? பெட்ரோல் பங்க்ல எதுவும் பிரச்சனையா :))

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல கருத்துள்ள கவிதை ... நல்லாருக்கு ஷங்கர்.

vasu balaji said...

எங்கப் போனாலும் சுத்தி சுத்தி அடிக்கிறாய்ங்களே:)) ரைட்டு..

சந்தனமுல்லை said...

:-)

சைவகொத்துப்பரோட்டா said...

அடியேனுக்கு "லைட்டா" கண்ண கட்டுது :))

malarvizhi said...

நல்ல கவிதை.

மீன்துள்ளியான் said...

எதோ சொல்ல வர்றீங்க . அது என்னனு தான் தெரியல ..

ஹேமா said...

கவிதை இரண்டுமே சொல்லும் சங்கதி நல்லாயிருக்கு ஷங்கர்.

தலைப்பு"உச்சீவி"புரியல.
அப்பிடீன்னா என்ன?

VISA said...

Second one is good.

butterfly Surya said...

கலங்குங்க ஷங்கர்(ஜி)

நீங்க கொஞ்சம் எழுதினாலும் அது சூப்பர் தான்.

பா.ராஜாராம் said...

நல்ல கவிதைகளுக்கு இப்ப எங்கயும் அலைய வேண்டியது இல்லை போல ஷங்கர்.வலை உலகில் நல்ல எழுத்து,காண கிடைக்கிறது.நர்சிம் கட்டுரை,பாலா சாரின் பகிரல்,அசோக் கவிதை,உங்களின் இந்த இரு கவிதைகள் என வாசித்தது எல்லாமே சந்தோசமாய் இருக்கிறது. .நம் குடும்ப வளரும் திருப்தி ஷங்கர்.

creativemani said...

ஹலோ... யாருங்க.. என்னது ராங் நம்பரா? இருந்தாலும் பேசுங்க.. பரவால்ல.. (Escapppuu... ;))

தமிழ் உதயம் said...

வண்ணத்துப்பூச்சியின் இறக்கை
கண்களுக்கு மட்டுமா விருந்து
பல்லிக்கும்தானே.......
மனதை தொட்டது.

Unknown said...

முதல் கவிதை கண்டு பிடிச்சிட்டேன்.. Food Inc. படம் பாத்திட்டீங்க...

ரெண்டாவது கவிதை?? கேபிள் சங்கர் கொத்துப்பரோட்டாவுல முன்னாடி ஒருதடவை போட்ட ஒரு ஃபிலிப்பைன் நாட்டுக் குறும்படம்?

Unknown said...

போன ரெண்டு பதிவோட எஃபக்ட்ல இருந்து இன்னும் நான் மீளலைனு புரியுதா?? :))

இனிமே இப்பிடியெல்லாம் எழுதாதீங்க.. நான் அழுதுருவேன்.

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

Wow Shankar.. pinnreenga ponga!!!

அகநாழிகை said...

நீங்களுமா..?

நடத்துங்க.

சும்மா சொன்னேன் ஷங்கர்.

நல்லாயிருந்தது.

இரண்டாவது எனக்கு ரொம்ப பிடிச்சுது.

திவ்யாஹரி said...

ஒண்ணுமே புரியல உலகத்துல..
2nd one nice அண்ணா..

துபாய் ராஜா said...

//சைவகொத்துப்பரோட்டா said...
அடியேனுக்கு "லைட்டா" கண்ண கட்டுது :))//

நானும் இதை வழிமொழிகிறேன்... :))

Cable சங்கர் said...

நானும்...கொஞ்சம்..

Cable சங்கர் said...

டெம்ப்ளேட் மாத்துங்க ஷங்கர்

ரோஸ்விக் said...

இருட்டிக்கிட்டு வருது அண்ணே... கொஞ்சம் புரிஞ்சா மாதிரி இருக்குது... :-)

எந்த பாருக்கு அண்ணேன் போனீங்க... பேருக்கு பக்கத்துல அழியாம பார்கோடு எல்லாம் இருக்குது... போட்டு தள்ளிட்டமா?? ஹை ஹை ஹை... :-))

sathishsangkavi.blogspot.com said...

Superrrrr........

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வணக்கம்.. வந்தனம்..
சாரி சார்.. மன்னிச்சுக்கோங்க..( இது மட்டும் என்னோட மண்டக்கு ஏறமாட்டிங்கிது)
அடுத்த பதிவுக்கு அரைப்பக்கத்துக்கு பின்னூட்டம் போடப் போறேன்..

ரெடியாயிருந்துக்கோங்க..

T.V.ராதாகிருஷ்ணன் said...

nallaayirukku shankar

சிநேகிதன் அக்பர் said...

கவிதை அருமை பாஸ்

மதுரை சரவணன் said...

VANNATHTHU POOCHCHI PARAKKUTHU KAVITHAI PATITHTHA UTAN MANAM MULUVATHUM. EPPADI? ARUMAI .

ஸ்வாமி ஓம்கார் said...

//டெம்ப்ளேட் மாத்துங்க ஷங்கர்//

டெம்பிளட்டை மாத்தினா மட்டும் பத்தாது.. அப்படியே தேதி பட்டையையும் கொஞ்சம் மாதவாரியா மாத்துங்க. படிக்கிறவங்களுக்கு சவுகரியமா இருக்கும் :)

எனக்கும் கேபிளுக்கு தெரிஞ்ச விஷத்தில் பின்னூட்டி இருக்கிறோம் :)

Chitra said...

தலைப்பு????? உச்சீவி - உச்சி வெயில், மண்டைய புளக்குது .......
கொஞ்சம் ...... நன்றி.

ப்ரியமுடன் வசந்த் said...

என்னத்த சொல்ல தூரமா போயிட்டே இருக்கீங்கண்ணா பாலம் உடைஞ்சுடுமோன்னு பயமா இருக்கு...

Cable சங்கர் said...

/எனக்கும் கேபிளுக்கு தெரிஞ்ச விஷத்தில் பின்னூட்டி இருக்கிறோம் :)
//

:((

Vidhoosh said...

iradaavathu romba pidichchathu. :)
arumai.

////பிரியமுடன்...வசந்த் said...
என்னத்த சொல்ல தூரமா போயிட்டே இருக்கீங்கண்ணா பாலம் உடைஞ்சுடுமோன்னு பயமா இருக்கு...
//////
:)) repeating

Thenammai Lakshmanan said...

ஷங்கர் கவித அருமை ஆனல் உதப்பி., உச்சீவி சரியா புரிஞ்சுக்கிட்டு இருக்கனான்னு தெரியல