பலா பட்டறை: கண்ணாடி..

கண்ணாடி..


போதும்.!!!

இந்நேரம் அந்த தந்தை அழுதிருக்கக்கூடும். அவரின் விருப்பமாகவே அந்த பதிவு வெளிவந்தது. நம்முடைய ஆறுதல்கள், பிரார்த்தனைகள் அவருக்கும், குடும்பத்தாருக்கும் அமைதியை தரட்டும். அடுத்தவர் சுக துக்கங்களும் நமக்கான பாடம்தான். உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் நெகிழ்ச்சியாய் இருக்கிறது. நன்றி.

எல்லாம் கடந்து போகும்'..












எத்தனையோ தாய்களின்
சூல் கொண்ட சூட்சுமத்தை
டி என் ஏ வாய்ப்பாடுகளில்
வம்ச முகவரிகள் தேடும்
விளக்கங்கள் கேட்ட என்
பிள்ளை,

ஒரே மதம், ஒன்றே இனம்
எனில் முகமும், ரேகைகளும்
வேறு வேறானதேன், உன்னிலிருந்து
நானெனினும்

நானும் நீயும் ஒன்றா
என்ற கேள்விகளில்
ஏதும் சொல்லாமல்
நான்
மெளனமாய் திரும்பிய
பக்கத்தில் ஆளுயர நிலைக்கண்ணாடி
எப்போதும் போல்
இருப்பதை இருப்பதாகவே
காட்டிக்கொண்டிருந்தது..






.



26 comments:

மணிஜி said...

உன் தந்தை சொன்னது சரியென்று நீ உணரும்போது, நீ சொல்வது தப்பென்று வாதிடும் வாரிசு வரும். கவிதை நன்றாக பிரேம் செய்யப்பட்டிருகிறது ஷங்கர்!!

எறும்பு said...

Present sir...

sathishsangkavi.blogspot.com said...

//நானும் நீயும் ஒன்றா
என்ற கேள்விகளில்
ஏதும் சொல்லாமல்
நான்
மொளனமாய் திரும்பிய
பக்கத்தில் ஆளுயர நிலைக்கண்ணாடி
எப்போதும் போல்
இருப்பதை இருப்பதாகவே
காட்டிக்கொண்டிருந்தது..//

அழகான, ஆழமான வரிகள்...

சங்கர் said...

எனக்கு பிள்ளை பிறந்த பிறகு வந்து மீண்டும் படிக்கிறேன் :)

vasu balaji said...

:(. கவிதை கேள்வி எழுப்புகிறது

S.A. நவாஸுதீன் said...

நல்லா இருக்கு சங்கர்.

///மொளனமாய்/// - மௌனமாய்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

Present Sir

Starjan (ஸ்டார்ஜன்) said...

கண்ணாடி நல்ல கண்ணாடி

சீமான்கனி said...

//மொளனமாய் திரும்பிய
பக்கத்தில் ஆளுயர நிலைக்கண்ணாடி
எப்போதும் போல்
இருப்பதை இருப்பதாகவே
காட்டிக்கொண்டிருந்தது..//
அருமை....நல்லா வந்திருக்கு நன்பரெ...வாழ்த்துகள்

மீன்துள்ளியான் said...

கவிதை நல்ல வந்து இருக்கு பலா

செ.சரவணக்குமார் said...

ரொம்ப நல்லாருக்கு நண்பா.

ஸ்ரீராம். said...

கவிதைக்கு முன் சொல்லி இருப்பது புரியவில்லை...

Vidhoosh said...

//இருப்பதை இருப்பதாகவே//
kalakkal... :)

சைவகொத்துப்பரோட்டா said...

கவிதை அருமை ஷங்கர்.

Radhakrishnan said...

அருமையான கவிதை. டி என் ஏ வில் கூட பல வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்கிறது. தாயின் டி என் ஏவும், தந்தையின் டி என் ஏவும் அல்லவா கலக்கிறது. பின்னொரு காலத்தில் குளோனிங் செய்யப்பட்டு குழந்தை உருவாகும் பட்சத்தில் நானும் நீயும் ஒன்றென கண்ணாடி போல சொல்லிக்கொள்ளலாம்.

Thenammai Lakshmanan said...

Ada arumaiya irukku Shankar
super payan ungka pillai

Unknown said...

நல்ல கவிதை.. :)

கலகலப்ரியா said...

ரொம்ப நல்லா இருக்கு ஷங்கர்..!

ஹேமா said...

கவிதை சொல்லி சிந்திக்க வைக்கிறீர்கள் ஷங்கர்.உண்மையென்றே உணர்கிறேன்.

புலவன் புலிகேசி said...

//நானும் நீயும் ஒன்றா
என்ற கேள்விகளில்
ஏதும் சொல்லாமல்
நான்
மெளனமாய் திரும்பிய
பக்கத்தில் ஆளுயர நிலைக்கண்ணாடி
எப்போதும் போல்
இருப்பதை இருப்பதாகவே
காட்டிக்கொண்டிருந்தது..//

சிந்தனையைத் தட்டி எழுப்பிய வரிகள்

அண்ணாமலையான் said...

மிக அருமையாக இருக்கிறது............

சாமக்கோடங்கி said...

வரிகள் வித்தியாசமாக உள்ளன...

வாழ்க....

நன்றி...

திவ்யாஹரி said...

//உன்னிலிருந்து நானெனினும்
நானும் நீயும் ஒன்றா
என்ற கேள்விகளில்
ஏதும் சொல்லாமல்
நான்
மெளனமாய் திரும்பிய
பக்கத்தில் ஆளுயர நிலைக்கண்ணாடி
எப்போதும் போல்
இருப்பதை இருப்பதாகவே
காட்டிக்கொண்டிருந்தது..//

நல்ல கவிதை அண்ணா.. வாழ்த்துக்கள்..

//ஸ்ரீராம். said...

கவிதைக்கு முன் சொல்லி இருப்பது புரியவில்லை...//

இதற்கு முன் எழுதிய பதிவை படித்து பாருங்கள் ஸ்ரீராம் புரியும்..

ரிஷபன் said...

பிரதிபலிக்கிறது வாழ்க்கையை

பாலா said...

சார்.. அப்பிடியே.. கீழ.. கோனார் நோட்ஸோ, நாயர் நோட்ஸோ.. போட்டீங்கன்னா.. நல்லாயிருக்கும்!

வினோத் கெளதம் said...

நான் மட்டும் என்ன புதுசா சொல்லப்போறேன்..
நல்லா இருக்குங்க..:)