பலா பட்டறை: மாயவலை..100ஆவது பதிவு..

மாயவலை..100ஆவது பதிவு..

அவரவர் உமிழ்ந்த
சொற்களிலிருந்து
முளைத்துவிடுகிறது
அவரவர் செடிகள்.

அவரவர் சொற்கள்
அவரவர் செடிகள்
அதனதன் வீரியங்கள்
அதனதன் விருட்சம்.
நீரூற்றி வளர்ப்பது மட்டும்
என் பாடு.
நோய் பட்டும்
பூச்சி தின்றும் இறந்துவிட்டன
சில செடிகள்.
வளர்ந்த மற்றவை
பூக்கத்தொடங்கி
ஒரு ஏப்ரல் மாதத்தில்
கனியத்தொடங்கின
அவரவர் பூக்கள்.
அதனதன் கனிகள்
அதனதன் சுவை
அதனதன் குணம்.
அவரவர்க்கு
அவரவர் பழங்களை
பறித்துக் கொடுப்பது மட்டும்
என் பாடு.



- கவிதை - திரு.TKB காந்தி




புத்தகமாய் தொகுப்பு : கூர்தலறம். வெளியீடு: அக நாழிகை.

இது நூல் விமர்சனமல்ல. ஆனால் மிக அழகான கவிதைகள், இந்த தொகுப்பில் நான் வாசித்தேன். அய்யனார்கம்மா, கருவேலநிழல், நீர்க்கோல வாழ்வை நச்சி இனிதான் படிக்கவேண்டும்.


13-11-2009

அன்றுதான் முதல் பதிவு. இது 100 ஆவது பதிவு. பெரியதாய் எழுதி எதுவும் கிழித்துவிடவில்லை என்றாலும். யார் மனதையும் கிழிக்கவில்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். நிச்சயம் உங்களின் தொடர் பின்னூட்டங்களும், ஓட்டுகளும், அறிமுகங்களும், ஏதும் சொல்லாமல் வெறுமனே என் பக்கம் பார்த்து எண்களில் முகம் காட்டும் நண்பர்களும், எனக்குள் கிட்டத்தட்ட இறந்துவிட்டிருந்த எழுத்து தமிழை மீட்டிவிட்டது.

தின வாழ்வைப்போலவே, பதிவுலகமும் இருக்கிறது. எழுத்துக்களிலேயே முகம் தெரிகிறது. குறள்கள் சற்று வேறுமாதிரி மாற்றிக்கொள்ள தேவையாய் இருக்கிறது. தீயினாலும், நாவினாலும் சுட்டது ஆறிவிடுமோ என்னமோ, பதிவு இன்னும் பயங்கரம் ஆறவே ஆறாது என்று புரிகிறது.

 இங்கும் நட்புகளை காண்கிறேன், நிஜ வாழ்வில் நினைத்துக்கூட பார்க்க முடியாத நட்புகள் இந்த மாய வலை தருகிறது. அப்படி எனக்கு கிடைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

நன்றி என்பதை தவிற வேறெதுவும் சொல்ல தெரியவில்லை. கவிதை, கதை, தொடர்கதை, அனுபவம், படங்கள் என எல்லாம் பகிர இங்குதான் முடிந்தது. எண்ணங்களை வெளிப்படுத்தத்தான் மிகுந்த பிரயாசை பட்டிருக்கிறோம். எனக்கே எனக்கென்று, நான் எழுதிய ஆனால் எல்லாருக்குமான ஒரு திறந்த புத்தகமாய் என் பக்கம் இருப்பதில் மகிழ்ச்சி.

100 என்பது ஒரு குறியீடுதான் விழும்போது எவ்வளவு அடிபடும் என்பதை எண்ணிக்கொண்டே ஒரு இளைப்பாரலாக இதுவரை ஏறிய படிகளில் உட்கார்ந்து பார்க்கிறேன், மற்றபடி வேறொன்றுமில்லை.

என் பக்கத்தில், எழுத்தில் ஏதேனும் குறைகள் இருப்பின் அது என்னுடையாதாகட்டும்.

நிறைகள் அனைத்தும் உங்களுக்கே சமர்ப்பணம்.


மீண்டும். மிக்க நன்றி.

ஷங்கர்...




”அடையாளங்கள்
 ஏதுமின்றியே வாழ நினைத்தேன்
 அடையாளமில்லாதவன் என்ற
 அடையாளம் என்னைப்பார்த்து
 சிரிக்கிறது..”




.


69 comments:

பிரபாகர் said...

வாழ்த்துக்கள் என் இனிய நண்பா! ரொம்ப சந்தோஷமாய் உணர்கிறேன்... விரைவான சதம் அடித்து அசத்தியிருக்கிறீர்கள். இன்னும் கலக்குங்கள்... சேம் ப்ளட் ரொம்ப சந்தோசத்தில்...

பிரபாகர்.

ராமலக்ஷ்மி said...

சதத்துக்கு என் வாழ்த்துக்கள்! அருமையான பதிவும். தொடருங்கள்!

பாலா said...

நவம்பரில் எழுத ஆரம்பிச்சி.. அதுக்குள்ள.. 100 பதிவா???

நான்... காலையில் ஒரு பதிவு போட்டு.. அடுத்த நாள் இன்னொன்னை பப்ளிஷ் பண்ணினா கூட... கொலை குற்றமாட்டம் பார்க்கறாங்க. :)

--

வாழ்த்துகள் பலா!!

எப்பா... அவரு கவிதை எழுதும்போதேல்லாம். ஏம்பா ஓட்டு போடுறீங்க?? இப்ப யாரு வினையை அறுக்கறது??? ஹும்??

புலவன் புலிகேசி said...

தல ரெண்டு மாசத்துல நூறா? வாழ்த்துக்கள்..

sathishsangkavi.blogspot.com said...

100 வது பதிவற்கு வாழ்த்துக்கள் நண்பரே...

T.V.ராதாகிருஷ்ணன் said...

100 க்கு வாழ்த்துகள்

Vidhoosh said...

அதுக்குள்ளயுமா!!! ரொம்ப மகிழ்ச்சி. நூறுக்கு வாழ்த்துக்கள்.

-வித்யா

VISA said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

Vidhoosh said...

மாய வலை !!! தலைப்பும் ரொம்ப அருமை.

Vidhoosh said...

////100 என்பது ஒரு குறியீடுதான் விழும்போது எவ்வளவு அடிபடும் என்பதை எண்ணிக்கொண்டே ஒரு இளைப்பாரலாக இதுவரை ஏறிய படிகளில் உட்கார்ந்து பார்க்கிறேன், மற்றபடி வேறொன்றுமில்லை.////

:) வேற எதுவும் சொல்லத் தோணலை. மீண்டும் .. வாழ்த்துக்கள்

சைவகொத்துப்பரோட்டா said...

புது டெம்ப் ப்ளேட், புது கவிதை, நூறு, கலக்கல் ஷங்கர்.
இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்.

Ramesh said...

வாழ்த்துக்கள் ஷங்கர்....
உங்கள் பதிவுகளே எமக்கு நிறைகள்...
வாழ்க வளமுடன்..தொடரவேண்டும் நல்லுறவுகளும் பதிவுகளும்
எப்போதும் தித்திக்கும் உங்கள் எழுத்துக்கள் மனதில்..
குறைகள் இருந்தால் பின்னூட்டத்தில் வருமே...அப்போ

////என் பக்கத்தில், எழுத்தில் ஏதேனும் குறைகள் இருப்பின் அது என்னுடையாதாகட்டும்.

நிறைகள் அனைத்தும் உங்களுக்கே சமர்ப்பணம்.////
இது வேஸ்ட் ஹிஹிஹி
என்றும் அன்புடன் இருப்போம்ல...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள்

எறும்பு said...

pudhu template...
nooru...

kodi vaalthukkal

எறும்பு said...

Till yesterday it is private...From i am following you publicaly...

:)

எறும்பு said...

Me 2 vote..

vasu balaji said...

பல நூறாய்த் தொடர வாழ்த்துகள்.

Cable சங்கர் said...

நூறு பல்லாயிரமாய் மாற வாழ்ததும் உங்கள் நண்பன்

சங்கர் said...

//ஏதும் சொல்லாமல் வெறுமனே என் பக்கம் பார்த்து எண்களில் முகம் காட்டும் நண்பர்களும்//

நானும் இந்த லிஸ்ட்ல தான் இருக்கேன் :))

வாழ்த்துகள்,

கார்க்கிபவா said...

வாழ்த்துகள் சகா..

100ல் எப்படியும் 50வது தேறும். அதனாலே இந்த சதம் மேலும் சிறப்பு பெறுகிறது

கோமதி அரசு said...

முதலில் 100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!

நல்ல கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றி சங்கர்.

இரண்டு மாதத்தில் 100வது பதிவு,மேலும் வெற்றிப்படிகளில் ஏற வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்.

ஈரோடு கதிர் said...

வாழ்த்துகள்

Ashok D said...

வாழ்த்துகள் :)

புக் வாங்கி நான் அப்படியே வெச்சியிருக்கன் :(

மணிஜி said...

100 வது பதிவற்கு வாழ்த்துக்கள்.இன்னும் பட்டென்று அறையும் கவிதைகளையும் எதிர்பார்க்கும்..

தோழமையுடன்
தண்டோரா...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சதம் அடித்ததற்க்கு வாழ்த்துக்கள்...

சீமான்கனி said...

வணக்கம்...நண்பா..நூறு அடித்து தொடர்ந்து அசத்துவதற்கு வாழ்த்துகள்....புத்தகம் பற்றிய அழகான பதிவுக்கு பாராட்டுகள்...

ப்ரியமுடன் வசந்த் said...

ஷங்கர் 100க்கு வாழ்த்துகள்...!

அருமையான பகிர்வு தொடரட்டும் சிறப்பான எழுத்துபயணம்...!

வெள்ளிநிலா said...

வாழ்த்துகள்

செ.சரவணக்குமார் said...

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சங்கர். தொடர்ந்து கலக்குங்க நண்பா.

ஆதி மனிதன் said...

நூறு வயசாயிடுச்சினா கவலை படலாம். நூறு பதிவுனா? சந்தோசபடாம இருக்க முடியுமா? சந்தோசம். நூறு ஆயிரமாக வாழ்த்துக்கள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

100க்கு வாழ்த்துக்கள்

மாதேவி said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் தொடரட்டும்.

துபாய் ராஜா said...

வாழ்த்துக்கள் ஷங்கர். வித்தியாசமான பதிவுகளும், பகிர்வுகளும் தொடரட்டும்.

அண்ணாமலையான் said...

அன்பான வாழ்த்துக்கள்....

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.பதிவும் முத்திரையான பதிவு தான்.

Unknown said...

கலக்குங்க நண்பா.வாழ்த்துகள்

Jerry Eshananda said...

வாழ்த்துகள்,தொடர்வோம்.

நாடோடி said...

வாழ்த்துக்கள் நண்பரே...தொடர்ந்து எழுதுங்கள்..படிக்க தயாராய் இருக்கிறோம்..

ஹேமா said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பலா.நிறைவான அனுபவங்கள் இன்னும் தொடரட்டும்.

கண்ணகி said...

வாழ்த்துக்கள்.அதனதன் குணம்அத்னதன் சுவை.நல்லா வந்திருக்கு கவிதை,

நட்புடன் ஜமால் said...

100 க்கு வாழ்த்துகள்.

யாரையும் கிழிக்காம - இது அருமைங்க

+1

CS. Mohan Kumar said...

மிக குறுகிய காலத்தில் நூறு அடிசிடீங்க. வாழ்த்துக்கள். வீட்டுல சொல்லி சுத்தி போட சொல்லுங்க

Radhakrishnan said...

வாழ்த்துகள் ஷங்கர். நூல் பற்றிய பார்வையும் அழகு, இந்த வலைதளம் பற்றிய பார்வையும் அழகு.

சாமக்கோடங்கி said...

எப்படியும் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆயிரத்தை தாண்டுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு வந்து விட்டது..
ஒரு உண்மை நண்பரே,,
என்னைப் பொறுத்த வரை உள் மனதில் இருப்பதே உண்மைகள்.. நம் முதலாளி நம்மைத்திட்டினால் வெளி மணம் புன்னகை செய்யும்(வேலை நிலைக்க வேண்டுமே) உள்மனம் மட்டுமே திருப்பித்திட்டும். இப்போது சொல்லுங்கள் எது நிஜம என்று..
எதற்குச் சொல்கிறேன் என்றால், நான் என் ப்ளாக்;ல் உலா வரும் போது தான், நான் என் உள் மனதோடு இயைந்து செயல்படுவதாக உணர்கிறேன்..அதனால் தான் கற்பனை பலருக்கும் பெருக்கெடுத்து ஓடுகிறது.. இங்கே கூறப்படும் பல்வேறு கருத்துகளை நேரே மற்றவரிடம் கூறிப் பாருங்கள், நேரெதிர் விளைவுகள் தான். சில சமயம் கல்லடி கூட படலாம். உதாரணத்திற்கு எனக்கு கவிதை பிடித்திருந்தாலும் என் நண்பன் என்னிடம் அதைக் கூறும் போது கிண்டல் தான் அடிப்பேன். ஏனெனில் வெளிமனம்-பொய்மனம் பல்வேறு மாயைகளுக்கு கட்டுப் பட்டது. ப்ளாக்'ல் அனைவரின் உள்மனம் பேசுகிறது நண்பரே..

எனவே இது மாய வலை இல்லை..இது உண்மை வலை..தூய வலை..

என்ன சொல்கிறீர்.. தவறு இருந்தால் திருத்துங்கள்..

நான் இரண்டு - நீங்கள் முட்டை...
நான் எட்டு - நீங்கள் நூறு..

நன்றி..

ஸ்ரீராம். said...

இங்கும் நட்புகளை காண்கிறேன், நிஜ வாழ்வில் நினைத்துக்கூட பார்க்க முடியாத நட்புகள் இந்த மாய வலை தருகிறது. அப்படி எனக்கு கிடைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி//

நன்றி.

சேவாக் சதத்தை விட வேகமாக இருக்கிறது... வாழ்த்துக்கள்.

கும்மாச்சி said...

நூறாவதுப் பதிவுக்கு வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

சாமக்கோடங்கி said...

அன்பு பலா பட்டறை அவர்களே..
//முட்டை மந்திரம் எல்லாம் வேண்டாம் பிரகாஷ்..:))
இடித்துரைத்தற்கு நன்றி, வேண்டுமென்றே செய்ய வில்லை.. //

நான் எழுதியதை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர் என்று நினைக்கிறேன்.. நான் யாரையும் இடித்துரைப்பதில்லை.. நீங்கள் அபார வளர்ச்சியைக் காட்டிக் கொண்டிருக்கிறீர் தொடருங்கள் இன்பத்தைத் தெரிவிக்க மட்டுமே எழுதினேன்.. மாய வலை என்பதற்கு என் கருத்தைத் தெரிவித்தேன். அது உங்களுக்கு எதிரானது இல்லை. நான் கடந்த வருடம் என் ப்ளாக்'ஐ ஆரம்பித்த பிறகு நீங்கள் ஆரம்பித்தீர்கள்.எனவே அதை ஒன்று - முட்டை(பூஜ்ஜியம்) என்றும் நான் இப்பொழுது வரை எட்டு இடுகைகள் இட்டுள்ளேன். அதனை எட்டு-நீங்கள் நூறு என்று குறிப்பிட்டுள்ளேன். மனதார யாரையும் புண்படுத்தும் விதத்தில் எதையும் எழுத நினைக்கவில்லை. அதை நான் செய்யவும் மாட்டேன். நான் எழுதியதில் உங்களை இடித்துரைத்ததைப் போன்று எதையும் நான் உணரவில்லை. அங்ஙனம் அமைந்திருப்பின் என்னை மன்னிக்கவும். உங்கள் மன்னிப்பை நான் திருப்பி அனுப்புகிறேன்..அது தேவை இல்லாதது.. தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி..
என்றும் நட்புடன் பிரகாஷ்..
நன்றி..

சாமக்கோடங்கி said...

//இங்கே கூறப்படும் பல்வேறு கருத்துகளை நேரே மற்றவரிடம் கூறிப் பாருங்கள்,//
"இங்கே" என்று நான் குறிப்பிடுவது பதிவுலகத்தை.. உங்கள் ப்ளாக்'ஐ என்று நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர் என நினைக்கிறேன் நண்பரே,.
மன்னிக்கவும்,,,
நன்றி...

பா.ராஜாராம் said...

அதுக்குள்ளே நூறா?

நிறைவாய் இருக்கு உங்கள் எழுத்து..தொடருங்கள்.

காந்தியின் கவிதை பகிர்வுக்கு நன்றி ஷங்கர்.

நூறுக்கு வாழ்த்துக்கள் என் ஷங்கர் மக்கா!

vasu balaji said...

நூறாவது இடுகைக்கு இன்னும் சிறப்பு ஷங்கர். யூத்ஃபுல் விகடன் குட்ப்ளாக்ஸில். http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp

முனைவர் இரா.குணசீலன் said...

வாழ்த்துக்கள் நண்பரே..

முனைவர் இரா.குணசீலன் said...

//பெரியதாய் எழுதி எதுவும் கிழித்துவிடவில்லை என்றாலும். யார் மனதையும் கிழிக்கவில்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்//


மகிழ்ச்சி நண்பரே..
இது ஒவ்வொரு வலைப்பதிவரும் மனதில் கொள்ளவேண்டிய ஒன்றாகும்.

நமது பதிவுகள் பயனுள்ளவை, பயனற்றைவை என்ற கேள்விகளுக்குக் காலம் பதில் சொல்லும்..

பின்னூட்டங்களாலும்,இடுகைகளாலும்
யார் மனதையும் துன்புறுத்தக்ககூடாது என்ற சிந்தனையைத் தூண்டியிருக்கிறீர்கள் மகிழ்ச்சி நண்பரே.

ஷங்கி said...

அன்பரே, நூறுக்கு வாழ்த்துகள்!

நீச்சல்காரன் said...

வாழ்த்துக்கள் நண்பரே

Jaleela Kamal said...

100 வது பதிவு வாழ்த்துக்கள்.

தொடருங்கள்.

உங்கள் எழுத்து பயணம் மேலும் அருமையாக தொடர வாழ்த்துக்க்கள்


நேரம் கிடைக்கும் போது வருகிறேன்.


(என் பக்கம் வந்து ஆறுதல் கமெண்ட் போட்டதற்குமிக்க நன்றி, சங்கர் சார்)

Jaleela Kamal said...

முடிந்த போது என் பதிவு பக்கமும் வந்து உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.

S.A. நவாஸுதீன் said...

ஆகா 100 ஆச்சா

ரொம்ப சந்தோசம். வாழ்த்துக்கள் சங்கர்.

தொகுப்பு பகிர்வுக்கும் நன்றி. கவிதைகள் எல்லாம் நல்லாவே இருக்கு.

///யார் மனதையும் கிழிக்கவில்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்.///

இதுதான் வேனும் சங்கர். இதை நானும் வரவேற்கிறேன். நானும் முயன்ற வரை இதையே கடைபிடிக்கிறேன்.

நர்சிம் said...

நூறுக்கும் புதுப் பேருக்கும் வாழ்த்துக்கள் ஷங்கர்..

விஜய் said...

அகமறியும்
முகமறியா நட்பே
வலைப்பூவின்
அழியா சொத்து

மேன்மேலும் பல சதமடிக்க வாழ்த்துகிறேன் (டெண்டுல்கரை தாண்டிடுவீங்கன்னு நினைக்கிறேன்)

வாழ்த்துக்களுடன் விஜய்

ஸாதிகா said...

குறுகியநாட்களில் நூறு இடுகை பதிவு செய்த தங்களுக்கு வாழ்த்துக்கள்

திவ்யாஹரி said...

2 மாசத்துல 100 பதிவா அண்ணா? வாழ்த்துக்கள்..

”அடையாளங்கள்
ஏதுமின்றியே வாழ நினைத்தேன்
அடையாளமில்லாதவன் என்ற
அடையாளம் என்னைப்பார்த்து
சிரிக்கிறது..”

இது சூப்பர் அண்ணா.. இந்த வருஷத்துக்குள்ள 100 பன்மடங்காக வாழ்த்துக்கள்..

malarvizhi said...

வாழ்த்துக்கள் நண்பரே..

சாமக்கோடங்கி said...

கவிதை'ல சும்மா சொல்றீங்கன்னு நெனைச்சேன்... ஆனா சொன்ன மாறியே ப்ளாக்'ஓட பேர மாத்தி வெச்சிடீன்களே.. இந்த உண்மை அடையாளம், பலா பட்டறை போல ஓஹோ என்று வர உளம் கனிந்த வாழ்த்துக்கள்.
நன்றி..

'பரிவை' சே.குமார் said...

அருமையான பதிவு.

Starjan (ஸ்டார்ஜன்) said...

சங்கர் அசத்திட்டீங்க !!.

100 வது பதிவுக்கு என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள் .

இன்னும் பல சதங்களை காண ஆவலோடு இருக்கும் உங்கள் ஸ்டார்ஜன்

ரிஷபன் said...

100 வது பதிவுக்கு வாழ்த்துகள்..

அன்புடன் மலிக்கா said...

அருமையான பதிவு
100 வது பதிவுக்கு என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்

நேரம்கிடைக்கும்போது இங்கும் வாருங்கள்.

http://niroodai.blogspot.com

http://fmalikka.blogspot.com

வால்பையன் said...

வாழ்த்துக்கள் தல!

TKB காந்தி said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஷங்கர். என் ’நாவினாற் சுட்ட வடு’ கவிதையை 100-வது பதிவில் அறிமுகம் செய்தைமைக்கு மிக்க நன்றிகள் :) keep rocking.