எனக்குப் பிடித்ததை
நீ சொல்வாய் என
நான் ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறேன்
உனக்குப்பிடித்ததை நான்
சொல்வேனென நீயும்
ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறாய்
காதலுமின்றி நட்புமின்றி
காரணமில்லாத உரையாடல்கள்
போதுமாயிருக்கிறது
காரணமில்லாத நம்
தொடுதல்கள் போலவே
.




23 comments:
Post a Comment