பலா பட்டறை: நூற்றுக்கு பூஜ்யம்..

நூற்றுக்கு பூஜ்யம்..

படம் நன்றி: வித்யாஜி.


100 வது பதிவில் வாழ்த்தி பின்னூட்டமிட்டு, மின் அஞ்சல் மற்றும் தொலைபேசியிலும் வாழ்த்திய அனைத்து நட்புகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். :))



நேற்று திரு.பாஸ்கர் சக்தியின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு போயிருந்தேன். வழக்கம் போல பதிவர் சந்திப்பாக முடிந்தது:) கேபிள்ஜி, தண்டோராஜி, அடலேறு, பெஸ்கி, யுவகிருஷ்ணா, அதிஷா மற்றும் எனது நண்பர் பைத்தியக்காரன் அவர்களையும் சந்தித்தேன்.

குறுகிய கால அவகாசத்தில் இட மாற்றம் செய்திருப்பினும், நிகழ்ச்சிக்கு நிறைய மக்கள் வந்திருந்தது மகிழ்ச்சியாய் இருந்தது. இயக்குனர் திரு.மகேந்திரன் அவர்கள் பேச்சை முதல் முறையாக கேட்கிறேன், வசீகரமான ஒரு குரல், நடை. திரு.ஞாநி அவர்களும் பாஸ்கர் சக்தியை பற்றி பேசினார். சமீபகாலங்களாக அவர் கூட்டங்களில் வலியுறுத்திவரும் ஹாலிஸ்டிக் அப்ரோச் எனப்படும் முழுமையான ஒரு பார்வை, ஞானம், அறிவு, செயல் இப்போதுள்ள சமூகத்திற்கு வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக சொன்னார்.

முன்னேற்ற கடிவாளங்கள் நம்மை சிறை படுத்தியதின் விளைவுதான் அந்த முழுமையான பார்வையை குருடாக்கியது என்று நினைக்கிறேன். இனி ஒரு மாதத்திற்கு மின்சாரம் கிடையாது. பெட்ரோல், டீசல் கிடையாது என்ற ஒரு அறிவிப்பு காலை செய்திகளில் வந்தால் அடுத்து என்ன என்ற ப்ளான் ‘பி’யாரிடமும் இல்லை.

மருந்துகளும், மின்சாரமும் நமக்கான தின வாழ்க்கையின் எஜமானர்களாக ஆகிவிட்டது. இதை சார்ந்தே எல்லா இயக்கமும், தனி மனித தனித்துவமும் வெளிப்பாடும் நடை போடுகிறது. அறிவியல் முதலில் ஒன்றை புகுத்துகிறது, நம்மை பழக்க வைக்கிறது, அடிமையானதும் அதற்கு விலை வைக்கிறது, பின் தொடர்ந்து நம்மை ஏதாவது ஒரு கண்டுபிடிப்பின் பெயர் கொண்ட ஸ்ட்ரா போட்டு உறிந்துகொண்டிருக்கிறது.

ஆயிரத்தெட்டு உரிமைகள் பேசினாலும், ஏதோ ஒன்றை சார்ந்திருப்பது என்பதை தவிற்க இயலாத வாழ்வு சூழலில் நாம் இருப்பதை மறுக்க இயலாது. அறிவியலை என்னதான் புகழ்ந்தாலும் அது நம்மை, மனித இனத்தை ஒரு காட்சிப்பொருள் ஆக்கி ஸூவில் வைத்துதான் பார்க்கிறது.

 அறிவியலை குறை சொல்லவில்லை. ஆனால் அது சாஸ்வதமான எதையும் தரவில்லை. எல்லாமே இதுவரை Trial & Error. ஆனால் Errorகளுக்கான பதில்கள் எப்போதும் தயாராய் இருப்பது அறிவியலின் புத்திசாலித்தனம். யூசர் மேனுவல் வழங்கும் அதன் விற்பனைகளில் நாம் வெறும் வாடிக்கையாளராய் இல்லாது அடிமையாய் ஆனதுதான் நம்மை புத்திசாலி முட்டாள்களாக வைத்துள்ளது. எல்லாவற்றையும் கேள்விகள் கேட்ட விஞ்ஞானம் பதில் சொல்லும் அளவுக்கு புத்திசாலியா? தெரியவில்லை.

நூற்று சொச்ச ஆண்டுகளில் நாம் இயற்கையை விட்டு வெகு வேகமாக ஓடி வந்த தூரம் என்பது வளர்ச்சியா? நம்முடன் ஓடி வராத மற்ற உயிரினங்களுக்கு நாம் அறியாமலும் அறிந்தும் அளித்த அநீதிகள்தான் நமது முன்னேற்றமா?
முன்னேற்றத்திற்கான கண்டுபிடிப்புகள் நம்மை சார்ந்ததாகவே இருப்பதின் சுயநலம் மிகவும் அபத்தமாக இந்த குறுகிய காலத்திலேயே எதிர் விளைவுகளின் மூலம் நாம் அனுபவித்துக்கொண்டு இருப்பதுதான் நாமது ஆறறிவு தேர்வுக்கு கிடைத்த மதிப்பெண். அது..

நூற்றுக்கு பூஜ்யம்.

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. மனிதர்களை தவிற மற்றெல்லா ஜீவராசிகளும் மொழியே தெரியாமல் கடைபிடிக்கிற வித்தை.  

மிக விரைவான பரமபத ஆட்டம் முதல் சுற்று முடிந்து, ஏணிகளில் ஏறி, பாம்புகளில் இறங்கி இரண்டாவது ஆரம்பம்,  தாய கட்டைகள் வீசுகிறேன்..

எனக்கான சோழி எடுத்து வைக்க, ஏணிகளுடனும், பாம்புகளுடனுமான எனது பயணம்..

தாயம் ஒண்ணு....




பெயர்..இனி பலா பட்டறை அல்ல ஷங்கர்தான் ::))

51 comments:

Ramesh said...

/////பெயர்..இனி பலா பட்டறை அல்ல ஷங்கர்தான் ::))////
பதிவின் பெயரை பலாபட்டறை என்றே இருக்கலாமே.. உங்கள் பெயரை ஷங்கர் என்று இடுவது நல்லது என்பது நம்ம கருத்து

நிகழ்வின் பதிவு அருமை.பகிர்வுக்கு நன்றி ஷங்கர்

செ.சரவணக்குமார் said...

அருமையான சிந்தனைகள் ஷங்கர். புத்தக வெளியீடு பற்றிய பகிர்வுக்கும் நன்றி நண்பா.

Ramesh said...

ஹேய்! என்னது இங்கேயும் சிதறல்கள்..
ஹாஹாஹாஹா

வெள்ளிநிலா said...

good to read and think. so now you are SHANKAR!

தமிழ் உதயம் said...

நீங்கள் சொல்வதெல்லாம் சரி தான். மின்சாரம், பெட்ரோல் மற்றும் பல வற்றுக்கு அடிமையானது யார் குற்றம். எல்லாம் நம் வசதி வாய்ப்புக்காக நாம் தேடிக் கொண்டது தானே. நீங்கள் சொல்வது போல் எதுவுமே கிடைக்காது என்ற நிலை வந்தாலும் மனிதனால் வாழ முடியும். வேறு வழி இல்லை என்கிற நிலை வரும் போது வேறு வழியின்றி வாழ்ந்து தான் தீருவான். ஈழத்தில் யாழ் குடா நாட்டில் ஐந்து வருஷ காலம் மின்சாரமின்றி வாழ்ந்தார்கள் தமிழர்கள். என் அபிமான இயக்குனர் மகேந்திரனை நீங்கள் சந்தித்தது எனக்கு மகிழ்ச்சி.

சீமான்கனி said...

//ஆயிரத்தெட்டு உரிமைகள் பேசினாலும், ஏதோ ஒன்றை சார்ந்திருப்பது என்பதை தவிற்க இயலாத வாழ்வு சூழலில் நாம் இருப்பதை மறுக்க இயலாது. அறிவியலை என்னதான் புகழ்ந்தாலும் அது நம்மை, மனித இனத்தை ஒரு காட்சிப்பொருள் ஆக்கி ஸூவில் வைத்துதான் பார்க்கிறது//

உண்மை ஷங்கர்ஜி ...நல்ல பகிர்வு...

மீன்துள்ளியான் said...

பதிவு நல்ல இருக்கு . என்ன பெயரை மாத்திட்டீங்க

துபாய் ராஜா said...

மனித இனம் எதிர்நோக்கவிருக்கும் இன்றியமையாத விஷயங்களை எளிமையாக எடுத்து சொல்லியிருப்பது அருமை.

S.A. நவாஸுதீன் said...

அறிவியலின் ப்ளஸ் மைனஸ் குறித்த உங்களின் பார்வை வித்தியாசமாத்தான் இருக்கு சங்கர்.

///போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. மனிதர்களை தவிற மற்றெல்லா ஜீவராசிகளும் மொழியே தெரியாமல் கடைபிடிக்கிற வித்தை.////

சரிதான்.

Unknown said...

நூத்தி ஒண்ணுக்கு வாழ்த்துகள் - (நாங்க டிஃபரண்ட்டு)

நாடோடி said...

என்ன சங்கர் ஜீ எதும் பெயர் மாற்று நிபுணர்களை பார்த்தீகளா?......

எறும்பு said...

//பெயர்..இனி பலா பட்டறை அல்ல ஷங்கர்தான் ::))//

தானைத்தலைவர் ஷங்கர் வாழ்க!!!

தானைத்தலைவர் ஷங்கர் வாழ்க!!!

தானைத்தலைவர் ஷங்கர் வாழ்க!!!

சங்கர் said...

//கேபிள்ஜி, தண்டோராஜி, அடலேறு, பெஸ்கி, யுவகிருஷ்ணா, அதிஷா மற்றும் எனது நண்பர் பைத்தியக்காரன் அவர்களையும் சந்தித்தேன்//

இதுக்கு என்ன அர்த்தம் :))

அவ்வவ்வ்வ்வ்வ்வ்வவ்வ்வ்

சங்கர் said...

//இனி ஒரு மாதத்திற்கு மின்சாரம் கிடையாது.//

அப்பாடா, இந்த பதிவருங்க தொல்லை இல்லாம நிம்மதியா இருக்கலாம் :))

சங்கர் said...

//அறிவியலை குறை சொல்லவில்லை. ஆனால் அது சாஸ்வதமான எதையும் தரவில்லை. //

சுவாமி ஓம்காரை சந்தித்த பாதிப்பு இன்னும் விலகவில்லையோ :))

vasu balaji said...

நல்ல சிந்தனை. அடுத்த ரவுண்டுக்கு பாராட்டுகள்.

அண்ணாமலையான் said...

ரைட்டு..

Radhakrishnan said...

//ஆயிரத்தெட்டு உரிமைகள் பேசினாலும், ஏதோ ஒன்றை சார்ந்திருப்பது என்பதை தவிற்க இயலாத வாழ்வு சூழலில் நாம் இருப்பதை மறுக்க இயலாது. //

நல்லதொரு சிந்தனையைத் தூண்டும் அழகிய பதிவு.

புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது குறித்து மகிழ்ச்சி.

சாமக்கோடங்கி said...

//நம்முடன் ஓடி வராத மற்ற உயிரினங்களுக்கு நாம் அறியாமலும் அறிந்தும் அளித்த அநீதிகள்தான் நமது முன்னேற்றமா?//

இந்த வரிகளுக்காக உங்கள் காலில் கூட விழலாம்..

அருமை..

நன்றி..

நட்புடன் ஜமால் said...

முதல் கருத்தே எமதும் ...

நட்புடன் ஜமால் said...

முதல் கருத்தே எமதும் ...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நல்ல கருத்துக்கள்..
தொடரட்டும் உங்கள் பணி பாலா.. சாரி.. சாரி ஷங்கர் அவர்களே...

ஸ்ரீராம். said...

//"போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. மனிதர்களை தவிற மற்றெல்லா ஜீவராசிகளும் மொழியே தெரியாமல் கடைபிடிக்கிற வித்தை."//

மனிதன்தான் 'அத்தனைக்கும் ஆசைப் படு' என்று புதுமொழி கண்டு விட்டானே...
நல்ல பதிவு... யோசிக்க வேண்டிய விஷயம்தான்...

மரா said...

@ சங்கர்
//எனது நண்பர் பைத்தியக்காரன் அவர்களையும் சந்தித்தேன்//
ரெண்டு பேரும் கிளாஸ்மேட்...அம்புட்டுதேன்.வேறொண்ணுமில்லை.... :)

101க்கு வாழ்த்துக்கள்.

ரிஷபன் said...

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. மனிதர்களை தவிற மற்றெல்லா ஜீவராசிகளும் மொழியே தெரியாமல் கடைபிடிக்கிற வித்தை..

நிறைய யோசிக்க வைத்தது.. நல்ல பதிவு.

பிரபாகர் said...

சங்கர் நமது ’நண்பர்’ பைத்தியக்காரனை கேட்டதாய் சொன்னீரா?

ஷங்கராய் தாயம் ஒண்ணு, அருமை...

பிரபாகர்.

அன்புடன் அருணா said...

ஓ நீங்கதானா?

பழமைபேசி said...

சிந்தனைகளை கிளறி விட்டது....

பின்னோக்கி said...

சதம் அடித்ததை புதிய டெம்ளேட்டுடன் கொண்டாடியதற்கு வாழ்த்துக்கள் சங்கர்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான சிந்தனைகள்

நல்லாருக்கு

ப்ரியமுடன் வசந்த் said...

மிகச்சிறப்பான பார்வை ஷங்கர்

ஆனா இங்கே விஞ்ஞானம் அஃறிணையா? மனிதனா?

யூசர் மேனுவல் எழுதியது மனிதன்தான்னு நினைக்கிறேன்...!

தாயக்கட்டை உருட்டியாச்சு தாயம் ஒண்ணும் விழுந்திருச்சி இனி வெட்டணுமே எதை வெட்டப்போறீங்க? அறியாமையையா? இல்லை விஞ்ஞானத்தையா?

பாலா said...

டியர் மிஸ்டர் ஷங்கர்..,

எங்களிடம் சொல்லாமல்.. பலான பட்டறையை மூடியதில்.. துளியும் உடன்பாடில்லை!! :) :)

அப்புறம்.. தமிழில் பதிவு எழுதவும்!! பைத்தியக்காரனை பார்த்த எஃபெக்ட்டில், இந்தப் பதிவு முழுக்க பின்நவீனத்தில் எழுதப் பட்டுள்ளது போல் ஒரு தோற்றம்.

-பலான பட்டறை ரசிகர்(கள்)! :)

பாலா said...

100/100

(புரிஞ்சிருந்தா.. இம்புட்டு மார்க் கெடச்சிருக்காது. :)) )

ஜெட்லி... said...

நூறாவதுக்கு வாழ்த்துக்கள்.....
பாலோயார்ஸ்க்கு சொன்னேன்...

வினோத் கெளதம் said...

நான் கூட டைரக்டர் ஷங்கர் பதிவுக்கு தான் வந்து விட்டேன்னோ என்று ஒரு நிமிடம் நினைத்தேன்..:)

'பரிவை' சே.குமார் said...

புத்தக வெளியீடு பற்றிய பகிர்வுக்கு நன்றி நண்பா.

ரவி said...

me the 100

புலவன் புலிகேசி said...

//பெயர்..இனி பலா பட்டறை அல்ல ஷங்கர்தான் ::))//

ஏன் தல மாத்திட்டீங்க?

கே.என்.சிவராமன் said...

அன்பின் ஷங்கர்,

'வம்சி' பதிப்பகத்தின் 3 சிறுகதைத் தொகுப்புகள் வெளியீட்டு விழா குறித்து தொகுப்பு அருமையாக இருக்கிறது.

அன்பின் சங்கர்,

////கேபிள்ஜி, தண்டோராஜி, அடலேறு, பெஸ்கி, யுவகிருஷ்ணா, அதிஷா மற்றும் எனது நண்பர் பைத்தியக்காரன் அவர்களையும் சந்தித்தேன்//

இதுக்கு என்ன அர்த்தம் :))//

ஷங்கரும் நானும் பள்ளிக் காலத்தோழர்கள். வேலூர், காந்திநகர் டான்போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். ஒன்றாக புளியம் பழம் அடித்து தின்றவர்கள். ஒன்றாக சைட் அடித்தவர்கள். ஒன்றாக வளர்ந்தவர்கள்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

பாலா said...

நோ.. நோ...!!

என்னென்ன அர்த்தம்னா...

01. வந்த கூட்டத்தில்.. பைத்தியக்காரன் மட்டும்தான்.. ஷங்கரின் நண்பர். கேபிள் - etc எல்லாம் நண்பர்கள் கிடையாது.

02. லிஸ்டை பார்த்தால்.. சமீபத்தில் நடந்த ‘சாரு’ மோதலில்... ஷங்கர் எந்தப் பக்கத்துக்கு சப்போர்ட்ட்னு.. தன் ‘நண்பர்’ மூலமா சொல்லியிருக்கார்.

ஹைய்யா... பத்த வச்சாச்சி!!! :)

--

குட் நைட்!! :)

Vidhoosh said...

////நூற்றுக்கு பூஜ்யம்.

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. மனிதர்களை தவிற மற்றெல்லா ஜீவராசிகளும் மொழியே ////
///Followers (101) ///

மொழி தெரிந்து 101/101 இல்ல வாங்கி இருக்கீங்க :))

//எங்களிடம் சொல்லாமல்.. பலான பட்டறையை மூடியதில்.. துளியும் உடன்பாடில்லை!! :) :)////
அதே அதே... திருப்பதில மொட்டையை காணோம்னு தேடராமாதிரி 'ஷங்கரை' எப்படி அடையாளம் கண்டுபிடிக்கிறது. பலா பட்டறைன்னு பேரு வச்ச காரணமாவது சொல்லி இருந்தா மன்னிச்சு விட்டு இருப்போம்.
"புது வீட்டு" பேர மாத்தினத்துக்கு வாஸ்து கீஸ்து காரணமா?? :))


புது டெம்பிளேட் நன்றாக இருக்கு.


////வேலூர், காந்திநகர் டான்போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். ஒன்றாக புளியம் பழம் அடித்து தின்றவர்கள். ஒன்றாக சைட் அடித்தவர்கள். ஒன்றாக வளர்ந்தவர்கள்.///
ஸோ.... நீங்க வேலூரு ..... :)) நல்லது நல்லது..

--வித்யா

Paleo God said...

@றமேஸ்..
பெயரில் என்ன இருக்கிறது? வேணா ஒரு ஓட்டு பொட்டி வெச்சிடறேன்..:) நன்றி.

@சரவணக்குமார்..
மிக்க நன்றி நண்பரே..:)

@றமேஸ்..
உங்க கிட்ட இருந்துதான் சுட்டேன்..:)

@வெள்ளி நிலா..
மிக்க நன்றி.:)

@தமிழ் உதயம்..
வேறு வழியின்றி என்பதுதான் எனக்கு வலிக்கிறது நண்பரே. அதுதான் வழியாக இருந்தது, வழி தவறியதால் வந்த வினையைத்தான் அப்படி குறிப்பிட்டேன். யாரையும் புண்படுத்துவது நோக்கமல்ல. நியூசிலாண்டின் அருகில் பாப்பா நியூ கினியாவின் ஒரு தீவில் அன்னிய சுரங்க நிருவனங்களின் அட்டூழியத்தால் எதுவும் கிடைக்காத நிலையிலும், வெறும் தேங்காய் எண்ணை கொண்டே அவர்கள் ஜெனெரேட்டரும், ஜீப்பும் ஓட்டிய டாக்குமெண்டரியும், சுனாமியில் தப்பித்த அந்தமான் பழங்குடி மக்களின் அறிவும் பார்த்து பிரமித்தவன் நான்.

உண்மையில் திரு.மகேந்திரன் அவர்கள் பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது..:))

கருத்துக்கு மிக்க நன்றி.

Paleo God said...

@சீமான்கனி..
மிக்க நன்றி கனி.:))

@மீந்துள்ளியான்..
:)) என் பெயர் பிடிக்கவில்லையா??:)

@ துபாய் ராஜா..
மிக்க நன்றி ராஜா..:))

@ நவாஸ்..
மிக்க நன்றி நவாஸ்..:)

@முகிலன்..
:) ரைட்டு../ நன்றி..:))

@எறும்பு..
யாருங்க அவரு..?? :))

@சங்கர்..
அவரே சொல்லிட்டார் பாருங்க..:))
அவ்வளவுதானா??:))
ஸ்வாமிக்கும் இந்த பாதிப்பு இருக்கும்.:))

@வானம்பாடிகள்..
மிக்க நன்றி ஐயா..:))

@அண்ணாமலையான்..
சரிங்க தல..:)) நன்றி.

@வெ.இரா..
மிக்க நன்றி.

Paleo God said...

@பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி..
நாமெல்லாம் இயற்கையின் காலில்தான் விழவேண்டும் நண்பரே.. மன்னிப்பு கிடைக்குமா தெரியாது..:( உங்கள் எழுத்தும் மிக அருமை. வாழ்த்துக்கள்..:))

@ ஜமால்..
சரிங்க.. ஓட்டு பெட்டி வெச்சிடலாம்..:)) நன்றி.:)

@பட்டாபட்டி..
மிக்க நன்றி..:))

@ஸ்ரீராம்..
அத்தனைக்கும் ஆசை ’படுத்தும்’ ..மிக்க நன்றி..:))

@மயில்ராவணன்..
இனி போன்ல பேசும்போது கவனமா பேசறேன்..:) நன்றி..:)

@ரிஷபன்..
மிக்க நன்றி தோழரே..:))

@பிரபாகர்..
சொன்னேன் நண்பா, மிக்க மகிழ்ச்சி என்று சொன்னார்..:))

Paleo God said...

@அன்புடன் அருணா..
புரியலைங்க..:(

@பழமைபேசி..
மிக்க நன்றி..:))

@பின்னோக்கி.
மிக்க நன்றி நண்பரே..:))

@ஸ்டார்ஜன்..
மிக்க நன்றி..:))

@வசந்த்..
மனிதன்தான்..
அதே..
பரமபதத்தில் ஏறுவதும்,இறங்குவதும்தானே..நான் யாரை வெட்டப்போகிறேன்..:))நன்றி

@ஹாலிபாலி..
நீங்க தப்பான விலாசத்துக்கு வந்துட்டீங்க, பலான பட்டறை அல்ல போர்ட் என் படத்துக்கு கீழ இருக்கே பார்க்கலியா..??

100/100 அதனாலதாங்க 100/0.:)
சந்தோஷமா?..:))

@ஜெட்லி..
நன்றி..:)

@வினோத்
இது வேறயா.. :)) நன்றி.

@சே.குமார்..
நன்றி குமார், அடுத்தமுறை நீங்களும் வாங்களேன்..:))

@செந்தழல் ரவி..
வாங்க ரவி.. மிக்க நன்றி..:))

@புலவன் புலிகேசி..
மாறலைங்க, இயல்புக்கு வந்துட்டேன்..:) நன்றி.:)

Paleo God said...

@பைத்தியக்காரன்..
மிக்க நன்றி..:)

( சிவா.. 19 வருடத்திற்கு முன்பு என்ற வார்த்தை விட்டுபோயிற்று:))

@ஹாலிபாலி..
01.ஆமாங்க அவர்மட்டும்தான் பள்ளிகால தோழர், மற்றவர்கள் எல்லாம் அவர் உட்பட இலக்கிய நண்பர்கள்.

02. நான் புளியம்பழம் தாண்டி எது மேலயும் கல்லடிச்சதில்லைங்க..

வெடிக்கலைல்ல..ஏன்னா..டம்மி பீஸு:))

@வித்யா..
ஆமாங்க அது தெரியலன்னா கோடிக்கணக்குல இருந்திருக்கும்..:))

கீஸ்து பத்தி ஒரு பதிவு போட்டு என்னன்னு சொன்னீங்கன்னா அதுதான் காரணமான்னு சொல்லிடரேன்..:)
மிக்க நன்றிங்க..:))

சங்கர் said...

@ஹாலிபாலி..

பத்தவைக்கலாம்னு பாத்தா, இப்படி தண்ணி ஊத்துறாங்களே :))

கலகலப்ரியா said...

//முகிலன் said...

நூத்தி ஒண்ணுக்கு வாழ்த்துகள் - (நாங்க டிஃபரண்ட்டு)//

repeattu... =)))

Paleo God said...

@சங்கர்..
:))

@ப்ரியா..
வாங்க..
நீங்களுமா...:)

திவ்யாஹரி said...

//முகிலன் said...

நூத்தி ஒண்ணுக்கு வாழ்த்துகள் - (நாங்க டிஃபரண்ட்டு)//

repeattu... =)))

me too anna.. :)

Chitra said...

first century அடித்தமைக்கு வாழ்த்துக்கள்! தொடர்ந்து தூள் கிளப்புங்க, ஷங்கர் சார்.