பலா பட்டறை: சின்ன சின்ன கவிதைகள்..

சின்ன சின்ன கவிதைகள்..




ஒவ்வொரு காலடி ஓசைக்கும் 
கதவு திறந்து,,
ஊருக்கு போன அப்பா..
-------------------------------------------

வியர்வை வாசனை
விற்கக் கூட்டம்..
கடற்கரை..

-------------------------------------------

எட்டடி யானை
சுருட்டிய துதிக்கை 
எதிரே பிச்சைக்காரி..

------------------------------------------

நீ கொடுத்துச்
சென்ற   
வளையலை போலவே 
விட்டுச்சென்ற 
ரோஜாவை போலவே 
என்னையும் 
விட்டுச்சென்றாய் 
உன் நினைவுகளுக்கு 
மத்தியில் 

தனியாய்.....  
--------------------------------------------

5 comments:

ரிஷபன் said...

சின்ன சின்ன அழகான பதிவுகள்

என் நடை பாதையில்(ராம்) said...

பிச்சைக்காரி... சூப்பர்

thiyaa said...

அருமை!

நிலாரசிகன் said...

இன்று உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பரே :)

ப்ரியமுடன் வசந்த் said...

அழகு..