பலா பட்டறை: எனக்கான மரணம் உணரும் வரை

எனக்கான மரணம் உணரும் வரை




என் பொருட்டு
ஏதேனும்
உதித்துக்கொன்டுதான்
இருக்கிறது

தினம் தினம்

எனக்கான மூச்சுக்காற்று
எனக்கான உணவு
எனக்கான நேரம்
எனக்கான மகிழ்ச்சிகள்
எனக்கான சோகங்கள்
எனக்கான பிரச்சனைகள்
எனக்கான வெளிச்சம்
எனக்கான சொந்தங்கள்
எனக்கான எண்ணங்கள்
எனக்கான கவிதைகள்
எனக்கான அறிவுரைகள்
எனக்கான நட்புகள்

என
பிறந்ததிலிருந்து
நான் என்ற அகந்தையின்
மரணம் உணரும் வரை

என் பொருட்டு
ஏதேனும்
உதித்துக்கொன்டுதான்
இருக்கிறது

தினம் தினமும்..

11 comments:

மணிஜி said...

கவிதை நன்றாக உள்ளது. உங்கள் தளத்தில் தமிழ்மணம்,தமிலிஷ் தவிர வேறு திரட்டிகளை இனைக்க வேண்டாம்.மால்வேர் வாய்ப்பு அதிகம்.தவிர தளம் ஓப்பன் ஆக நேரமெடுக்கும்.வாசகர் குறையும் வாய்ப்பும் உண்டு.

Paleo God said...

தண்டோரா ...... said.

அவ்வாறே செய்து விடுகிறேன் மிக்க நன்றி வருகைக்கும் பாராட்டுக்கும்.

Vidhoosh said...

அருமையாக இருக்குங்க.

பூங்குன்றன்.வே said...

கவிதை ஒரு நல்ல செய்தியை சொல்கிறது.. அருமை நண்பா..

கலையரசன் said...

பாராட்டாமல் என்ன செய்ய சொல்றீங்க?

Paleo God said...

நன்றி

விதூஷ்

நன்றி

பூங்குன்றன்.வே

வாங்க கலையரசன் நன்றி :-)

என் நடை பாதையில்(ராம்) said...

எனக்கும் கவித எழுதணும் போல இருக்கு சார்....

Paleo God said...

என் நடை பாதையில்(ராம்)//

அட நானே எழுதும்போது உங்களுக்கென்ன ஜமாயுங்க :) ஆல் தி பெஸ்ட்.

Priya said...

ஒரு நல்ல கவிதை......

Paleo God said...

வாங்க Priya நன்றி :-)

ரிஷபன் said...

இதுதான் ஒரு கவிதை செய்யணும் மனசுக்குள்ள..