பலா பட்டறை: இஸ்த்துகினு கிடக்குது பெரிசு

இஸ்த்துகினு கிடக்குது பெரிசு





நெஞ்சு குழி ஏறி எறங்கி
வாய நல்ல போலந்துக்கினு

இன்னாதான் கூவினாலும்
ரவ கூட அசையாம

பெரியாஸ்பத்திரிக்கி இட்டுகினு
நேத்து போய் பாக்க சொல்ல
நர்சம்மா சொல்லிச்சு
இது இந்த
ராவு தாங்காது...

உனுக்கி இன்னா தெரியும்
வைரம் பாஞ்ச கட்ட இது
போகல கூட போடாத
சொக்க தங்க உடம்பு இது

எங்க பெரிசு என்னிக்கும்
எங்கள உட்டுட்டு போவாது

சுர்ருன்னு வந்த கோவத்துல
சர்ருன்னு வந்தோம் பேட்டைக்கு,,

முனீஸ்வரன் கோயிலு துண்ணூறு
பூசி உட்டான் கொமாரு

ராவெல்லாம் கண்முழிச்சு
பெரிசு கத பேசினோம்

அடிச்ச சரக்கு வேல செய்ய
அப்படியே தூங்கிட்டோம்

பொழுது விடிஞ்சி பாக்க சொல்ல
சாவுமோளம் கேட்டுச்சு

இஸ்த்துகினு இருந்த பெரிசுகூட
எழுந்து உக்காந்து அழுவுது

விஷ சாராய சாவா ன்னு
யாரோ சொல்றது கேக்குது...

பெரிசுக்கு வெச்ச மாலைய
பெரிசே எங்களுக்கு போடுது...


23 comments:

அன்புடன் நான் said...

திருப்பம் நிறைந்தக்கவிதை மிக ரசித்தேன்... வாழ்த்துக்கள்

Paleo God said...

வாங்க சி. கருணாகரசு

நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்.. :))

பூங்குன்றன்.வே said...

/விஷ சாராய சாவா ன்னு
யாரோ சொல்றது கேக்குது...

பெரிசுக்கு வெச்ச மாலைய
பெரிசே எங்களுக்கு போடுது...//


கவிதை பேச்சு நடையில் தூள் கிளப்புது...அதுவும் இந்த இட்டுகினு,துண்ணூறு,உக்காந்து வார்த்தைகள் யதார்த்தம்..

Paleo God said...

வாங்க பூ..
நம்ம டவுசர் பாண்டி இருக்காரே அவர் பக்கத்துக்கு போனப்ப .. தோணினது இது... உண்மையிலேயே ரொம்ப கஷ்டம் இந்த மாதிரி எழுதறது :)) அவர் என்னடான்னா கணினியையே பேட்டை ரேஞ்சுக்கு பிரிச்சி மேயராரு..

கலகலப்ரியா said...

superb..! =))

கலகலப்ரியா said...

தமிழ்மணம் உங்களுக்கு... உங்கள் ஓட்டு போடுங்க ... கட்டைவிரல் உயர்த்தி.. =)

Paleo God said...

வாங்க ப்ரியா .. மிக்க நன்றி :))

என் நடை பாதையில்(ராம்) said...

அண்ணாத்த... சோக்கா கீது...

Paleo God said...

வாங்க ராம்... டான்க்சு..:))

அண்ணாமலையான் said...

அடிச்ச சரக்கு
முடிச்ச வேல
குடிச்சே ஒழிஞ்ச கஸ்மாலம்
குப்பத்துல கேட்டுச்சு மரன ஓலம்...

Paleo God said...

// அண்ணாமலையான் said...
அடிச்ச சரக்கு
முடிச்ச வேல
குடிச்சே ஒழிஞ்ச கஸ்மாலம்
குப்பத்துல கேட்டுச்சு மரன ஓலம்...//

அடேங்கப்பா அசத்திட்டீங்க.... மலை...:))

மாதேவி said...

//பெரிசுக்கு வெச்ச மாலைய
பெரிசே எங்களுக்கு போடுது...//

சிந்திக்கவைக்கும் நல்ல கவிதை.

Prasanna said...

சூப்பரா கீது அண்ணாத்த :)

Paleo God said...

வாங்க மாதேவி ... மிக்க நன்றி..:))

Paleo God said...

வாங்க பிரசன்னா .. thanks :))

உண்மைத்தமிழன் said...

நல்லாயிருக்குண்ணே..!

தோழி said...

your poem is really good and good sense of presenting things in a diff perspective, But you could have taken a better matching image.

Paleo God said...

// உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
நல்லாயிருக்குண்ணே..!//

ரொம்ப சந்தோஷம் சார்... வருகைக்கும் வாழ்த்துக்கும்..:))

Paleo God said...

தோழி said...

//your poem is really good and good sense of presenting things in a diff perspective, But you could have taken a better matching image.//

நன்றி தோழி.. நானும் அதை யோசித்தேன்... ஆனால் இந்த slang கிற்கு இந்த படம் சரி வரும் என்று தோன்றியது... மற்றவை எல்லாமே புட்டிகளோடு இருந்தது அந்த படம் போட எனக்கு விருப்பம் இல்லை :((

சீமான்கனி said...

உங்கள் வட்டாரமொழி கவிதை அருமை பாலா நல்ல திருப்பம்,அட கருத்தும் இருக்கு....சூப்பர்...வாழ்த்துகள்...

Paleo God said...

seemangani said...
உங்கள் வட்டாரமொழி கவிதை அருமை பாலா நல்ல திருப்பம்,அட கருத்தும் இருக்கு....சூப்பர்...வாழ்த்துகள்...//

நன்றி நண்பரே தொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும்... :)

Anonymous said...

பலா நீங்க சொல்வது மிக்க சரி. டவுசர் பாண்டி போல கவிதை எழுத அதற்க்கான தனித்துவம் நிச்சயம் வேண்டும். வைரமுத்து சொல்வது போல,
'" நீ உண்மையான கவிஞனானால், தாய்மையைப் பற்றி எழுகையில் உன் மார் சுரக்க வேண்டும்'"
என்ன ஒரு வரிகள்!! ஆழ்ந்து கவனிப்பீர்களாக.
உங்களுடைய சுகமான அந்த மரண வலிகலான அந்த வார்த்தைகளின் பிறப்பை என்னால் நன்றாகவே உணர முடிகின்றது. என்ன ஒரு அருமையான அற்பணிப்பு. அது உங்களுக்கே தெரியாத அல்லது மேற்ப்போக்காக எடுத்துக்கொண்ட அல்லது நீங்கள் சுயநலமென தவறாக புரிந்து கொண்ட அர்ப்பணிப்பாகவும் இருக்கலாம். மனதாழ்நத பாராட்டுக்கள். எனது பட்டியலில் இனி நீங்களும் ஒரு முக்கியஸ்தர் ஆகுறீர்கள் இன்றிலிருந்து..

நன்றிகளுடன்,
வி.பி.மறவன்.

Paleo God said...

@@ vaikaitamil said...//

சரிதான் நண்பரே. அது மிகவும் கடினம். கவனியுங்கள் அந்த பேச்சு சம்பந்தப்பட்டவர்களின் நிகழ்வைத்தான் கவிதையாக்கி இருக்கிறேன். அவர்களின் மொழி சரி தவறு என்பதெல்லாம் கிடையவே கிடையாது என்னை பொறுத்தவரை இரு மனிதர்களின் செய்தி பரிமாற்றமாகவே அதை பார்க்கிறேன். அதே நேரம் ஒவ்வொரு மொழியின் வீச்சுகளை நான் மதிக்கிறேன். மனிதர்களால் நெய்யப்பட்ட அது மனிதர்களைப்போலவே தனி குணாதிசியங்களுடன் இருப்பதில் வியப்பு என்ன?? :)

மிக்க நன்றி. உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்.